கோவையில் ரூ.16 கோடி மதிப்புள்ள நிலத்தை அபகரித்த ஜோசியர் - நிலத்தை அதிரடியாக மீட்ட மாநகராட்சி நிர்வாகம்

கோவையில் போலி ஆவணம் மூலம் மாநகராட்சிக்கு சொந்தமான 16 கோடி ரூபாய் மதிப்புள்ள இடத்தை அபகரித்த வீட்டுமனை விற்பனையாளர் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், ஆக்கிரமிக்கப்பட்ட இடத்தை கையகப்படுத்தும் பணியில் மாநகராட்சி நிர்வாகம் தீவிரமாக ஈடுபட்டுள்ளது.



கோவை: கோவை மாவட்டம் சேரன் மாநகர் பகுதியைச் சேர்ந்தவர் ஜோதிடர் நாராயணசாமி. இவர் வீட்டு மனை பிளாட்டுகள் விற்பனை செய்து வருகிறார்.

கடந்த 2005 ஆம் ஆண்டு போலியான வரைபடம் மூலமாக விளாங்குறிச்சி ராமகிருஷ்ணா லே-அவுட் உள்ள பார்க் சைட் 36 சென்ட் நிலத்தை அவர் அபகரித்துள்ளார். இதனை அடுத்து கோவை மாநகராட்சி, மூன்று முறை நாராயணசாமிக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

அந்த நோட்டீசுக்கு பதிலளிக்காத நாராயணசாமி மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.



தற்போது, கோவை மாநகராட்சி ஜேசிபி வாகனம் மூலம் 36 சென்ட் இடமும் அதற்குள் கட்டப்பட்ட இரண்டு சென்ட் வீடு தரைமட்டம் ஆக்கும் பணியும் தற்போது நடைபெற்று வருகிறது.



இதன் மொத்த மதிப்பு 16 கோடி ரூபாய் எனக் கூறப்படுகிறது.

இந்த நிலையில் நாராயணசாமி இதேபோல போலியான ஆவணங்கள் தயாரித்து வேறு ஏதேனும் குற்றச்செயலில் ஈடுபட்டுள்ளாரா? எனவும் சரவணம்பட்டி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Newsletter

ஈரான்-இஸ்ரேல் போர் எதிரொலி: 70 டூ 50 டன் - கோவை–ஷார்ஜா சரக்கு கையாளுதலில் சரிவு..!

ஈரான்-இஸ்ரேல் போர் காரணமாக விமானங்கள் கூடுதல் எரிபொருளுடன் இயக்கப்படுவதால், கோவை–ஷார்ஜா விமானங்களில் சரக்கு ஏற்றும் திறன...

சிறுபான்மையினருக்கான குறைந்த வட்டி கடன் திட்டங்கள் அறிவிப்பு

தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டு கழகம் மூலம் சிறுபான்மையினருக்கு தனிநபர், சுயஉதவிக்குழு, கைவினை கலைஞர் மற்...

கோவையில் பருவமழை புகார்களுக்கு சிறப்பு எண்கள்: மாநகராட்சி அறிவிப்பு

மழைநீர் தேக்கம், மரம் விழுதல் உள்ளிட்ட அவசர நிலைகள் தொடர்பாக பொதுமக்கள் 81900 00200 என்ற வாட்ஸ் ஆப் எண் மற்றும் மண்டல வா...

தென்மேற்கு பருவமழை: கோவையில் முன்னெச்சரிக்கை பணிகள் தீவிரம்

தென்மேற்கு பருவமழையை முன்னிட்டு கோயம்புத்தூர் மாநகராட்சி பகுதிகளில் மழைநீர் தேக்கம் மற்றும் வெள்ள பாதிப்புகளைத் தவிர்க்க...

சூலூர் சிறுமி பாலியல் வன்கொடுமை,கொலை வழக்கு: போக்சோ நீதிமன்றத்தில் இன்று குற்றப்பத்திரிகை தாக்கல்

கோவை மாவட்டம் சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில், தீவிர விசாரணைக்குப்...

வி தி லீடர் ஆலோசனைக் கூட்டத்தில் 500 பேர் பங்கேற்பு

பெரியநாயக்கன்பாளையம் அருகே நடைபெற்ற வி தி லீடர் இயக்கத்தின் ஆலோசனைக் கூட்டத்தில் 500-க்கும் மேற்பட்டோர் பங்கேற்று உறுப்ப...