உடுமலை நகர மன்ற தலைவருக்கு எதிராக திமுக கவுன்சிலர்கள் கூட்டம்

உடுமலை நகராட்சி தலைவராக மத்தீன் உள்ளார். இவர் நகராட்சி கூட்டத்திற்கு அழைப்பு விடுத்திருந்த நிலையில், திமுக நகரச் செயலாளர் வேலுசாமி தலைமையில் திமுக கவுன்சிலர்கள் கூட்டம் நடத்தி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


திருப்பூர்: உடுமலை நகர மன்ற தலைவருக்கு எதிராக திமுக கவுன்சிலர்கள்கட்சி அலுவலகத்தில் கூட்டம்நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.

திருப்பூர் மாவட்டம் உடுமலை நகராட்சியில், 33 வார்டுகள் உள்ளன. இதில் தி.மு.க-26, கூட்டணி கட்சி-3 மற்றும் அ.தி.மு.க-3 என மொத்தம் 32 கவுன்சிலர்கள் உள்ளனர். ஒரு இடம் காலியாக உள்ளது. தலைவர் தேர்தலின் போது, தி.மு.க தலைமை அறிவித்த ஜெயக்குமாருக்கு எதிராக, அப்போதைய நகரச்செயலாளர் மத்தீன் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இதனால் நகரசெயலாளர் பொறுப்பிலிருந்து திமுக தலைமை அவரை நீக்கியது.

இந்நிலையில் 87 தீர்மானங்களுடன் நகராட்சி கூட்டத்திற்கு தலைவர் மத்தீன் அழைப்பு விடுத்திருந்தார். ஆனால், தலைவர் மீதான அதிருப்தி காரணமாக தி.மு.க நகரச்செயலாளர் வேலுசாமி தலைமையில், கட்சி அலுவலகத்தில் தி.மு.க., கவுன்சிலர்கள் கூட்டம் நடத்தியுள்ளனர்.

இதுகுறித்து தி.மு.க., கவுன்சிலர்கள் கூறுகையில், 'தினசரி சந்தை குத்தகை 1.10 கோடி ரூபாயாகும். குத்தகை நீடித்து அதே நபருக்கு, பாதியாக குறைத்து, லட்சம் 55 ரூபாய்க்கு வழங்க தீர்மானம் உள்ளிட்ட நகராட்சிக்கு வருவாய் இழப்பு ஏற்படுத்த, பெரும் தொகை கைமாறியுள்ளது.

இதுதவிர நிர்வாகத்தில் ஏராளமான முறைகேடுகள் நடக்கிறது. எனவே, தலைவர், தீர்மானங்களுக்கு எதிராக தனியாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இது குறித்து கட்சித்தலைமைக்கு புகார் அனுப்பியுள்ளோம்,” என்றனர்.

உடுமலை திமுக நகர மன்ற தலைவருக்கு எதிராக திமுக கவுன்சிலர்கள் தனியாக கூட்டம் நடத்தியதால் உடுமலை பகுதியில் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.

Newsletter

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவையில் விளையாட்டு மற்றும் பொதுப்பணி துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நேரு உள்விளையாட்டு அரங்கில் கபடி வீரர்களைச் சந்தித்து அ...

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...