பல்லடம் அருகே கோளறுபதி நவகிரக கோட்டையில் மழை வேண்டி சிறப்பு பூஜை - பெண்கள் பங்கேற்று வழிபாடு!

பல்லடம் அருகே சித்தம்பலம் பகுதியில் உள்ள கோளறுபதி நவகிரக கோட்டையில் மழை வேண்டி நடைபெற்ற 108 திருவிளக்கு பூஜை மற்றும் சங்க அபிஷேக விழாவில் சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த ஏராளமான பெண்கள் சிறப்பு பூஜையில் பங்கேற்று மழை வேண்டி வழிபாட்டில் ஈடுபட்டனர்.


திருப்பூர்: பல்லடம் அருகே சித்தம்பலம் கோளறுபதி நவகிரக கோட்டையில் நடைபெற்ற சிறப்பு விளக்கு பூஜையில் ஏராளமான பெண்கள் கலந்து கொண்டு வழிபாட்டில் ஈடுபட்டனர்.



திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே சித்தம்பலம் கிராமத்தில் அமைந்துள்ள கோளறுபதி நவகிரக கோட்டையில் இன்று மழை வேண்டி 108 திருவிளக்கு பூஜை மற்றும் சங்காபிஷேக விழா மற்றும் வருண மகா மந்திர வேள்வி நடைபெற்றது.



இத்திருத்தலத்தில் சிவபெருமானை மையமாக வைத்து 27 நட்சத்திரங்கள் 9 அதி தேவதைகள் ஒன்பது நவகிரகங்கள் 108 சிவலிங்கங்கள் அழகிய நவகிரக கணபதி உள்ளிட்ட தெய்வங்கள் அமைந்துள்ளது.



இன்று உலக மக்கள் நோய் நொடி இல்லாமல் நலமாக வாழவும்,மழை வேண்டியும் 108 சங்காபிஷேக விழா மற்றும் பெண்கள் பங்கேற்ற 108 திருவிளக்கு பூஜை விழா நடைபெற்றது.



இந்நிகழ்வில் ஏராளமான பெண்கள் பங்கேற்று திருவிளக்கு ஏற்றி நவகிரக நாயகருக்கு சிவ நாம பஜனைகள் பாடி சிறப்பு வழிபாடு நடத்தினர்.



இந்த சிறப்பு வழிபாட்டில் சிவபெருமானுக்கு மகா தீபாராதனை காட்டப்பட்டது.

இந்த சிறப்பு பூஜையில் கலந்து கொண்ட அனைத்து பக்தர்களுக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.

Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...