கோவையில் கிராம நிர்வாக அலுவலர் லூர்து பிரான்சிஸ்-க்கு கண்ணீர் அஞ்சலி!

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் முன்னேற்ற சங்கம் கோவை மாவட்டம் சார்பில் கிராம நிர்வாக அலுவலர் லூர்து பிரான்சிஸ் மறைவிற்கு கண்ணீர் அஞ்சலி செலுத்தப்பட்டது.


கோவை: தூத்துக்குடி மாவட்டத்தில் படுகொலை செய்யப்பட்ட கிராம நிர்வாக அலுவலர் லூர்து பிரான்சிஸ்-க்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.

தூத்துக்குடி மாவட்டம் முறப்பநாடு கிராம நிர்வாக அலுவலர் லூர்து பிரான்சிஸ் படுகொலை செய்யப்பட்டார். மணல் கடத்தலை தடுக்க நடவடிக்கை மேற்கொண்டதற்காக அவர் கொலை செய்யப்பட்டார் என கூறப்படுகிறது. அவரது உடலுக்கு பல்வேறு அரசியல் கட்சி பிரமுகர்கள் நேரில் சென்று அஞ்சலி செலுத்தி அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தனர்.



இந்நிலையில் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் முன்னேற்ற சங்கம் கோவை மாவட்டம் சார்பில் லூர்து பிரான்சிஸ் மறைவிற்கு கண்ணீர் அஞ்சலி செலுத்தப்பட்டது. அதனைத் தொடர்ந்து படுகொலை செய்தவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் அரசு அலுவலர்களுக்கு பாதுகாப்பு வழங்கிட வேண்டும் என்பதை வலியுறுத்தியும் கண்டன ஆர்ப்பாட்டமும் நடைபெற்றது.

கோவை மாவட்ட தலைவர் குமார் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் சுமார் 20க்கும் மேற்பட்டோர் பங்கேற்று கண்ணீர் அஞ்சலி செலுத்தி, கண்டன முழக்கங்களை எழுப்பினர்.

Newsletter

திமுக தேர்தல் அறிக்கையில் மின்சார கோரிக்கைகள் இல்லை: மறுசுழற்சி ஜவுளி கூட்டமைப்பு ஏமாற்றம்

திமுக தேர்தல் அறிக்கையில் மின்கட்டணம் குறைப்பு, நிலை கட்டணம் குறைப்பு உள்ளிட்ட மின்சாரத்துறை கோரிக்கைகள் இடம்பெறாதது மறு...

சூரிய ஒளி மின் உற்பத்தி திட்டங்களுக்கு ஊக்கமளிப்பு மற்றும் மானியம்: அதிமுக தேர்தல் அறிக்கையை தொழில்துறை வரவேற்பு

Coimbatore: சூரிய ஒளி மின் உற்பத்தி திட்டங்களுக்கு ஊக்கமளிப்பு மற்றும் மானியம் வழங்குவது தொடர்பான அதிமுக தேர்தல் அறிக்கை...

சாதனைகளை கூறி வெற்றி பெறுவேன்; யாரையும் குறைத்து மதிப்பிடவில்லை - செந்தில் பாலாஜி

கோவை தெற்கு தொகுதியில் DMK வேட்பாளர் செந்தில் பாலாஜி தேர்தல் பணி குழு அலுவலகத்தை காந்திபுரத்தில் திறந்து வைத்தார். எதிரண...

கோவையை உலகத் தர நகரமாக மாற்ற கருத்தரங்கம்

கோவை நவஇந்தியாவில் ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் “கோயம்புத்தூரை உலகத் தர நகரமாக மாற்றுவோம்” கருத்தரங...

மகாவீர் ஜெயந்தி: மார்ச் 31ல் இறைச்சி விற்பனைக்கு தடை - கோயம்புத்தூர் மாநகராட்சி அறிவிப்பு

மகாவீர் ஜெயந்தி விழாவையொட்டி மார்ச் 31, 2026 அன்று கோயம்புத்தூர் மாநகராட்சி பகுதியில் அனைத்து விதமான இறைச்சி விற்பனை மற்...

கவுண்டம்பாளையம் தொகுதியில் NTK வேட்பாளர் கலாமணி ஜெகநாதன் வேட்புமனு தாக்கல்

கோவை கவுண்டம்பாளையம் சட்டமன்றத் தொகுதியில் நாம் தமிழர் கட்சி வேட்பாளராக கலாமணி ஜெகநாதன் இன்று வேட்புமனுவை தாக்கல் செய்தா...