தூத்துக்குடியில் கிராமநிர்வாக அலுவலர் கொலைக்கு கண்டனம் - பொள்ளாச்சியில் கிராம நிர்வாக அலுவலர்கள் ஆர்ப்பாட்டம்

தூத்துக்குடி மாவட்டத்தில் மணல் கொள்ளையைத் தட்டிக்கேட்ட கிராம நிர்வாக அலுவலர் லூர்து பிரான்சிஸ் கொலை செய்யப்பட்ட சம்பவத்தை கண்டித்து பொள்ளாச்சியில் கிராம நிர்வாக அலுவலர்கள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.



கோவை: தூத்துக்குடி மாவட்டம் வைகுண்டம் முறப்பநாடு கோவில் பத்து என்ற கிராமத்தில் கிராம நிர்வாக அலுவலராக பணிபுரிந்து வந்தவர் லூர்து பிரான்ஸ்.

இவர் மணல் கொள்ளைக்கு எதிராக நடவடிக்கை எடுத்ததால் ஆத்திரமடைந்த மணல் கொள்ளையில் ஈடுபட்ட நபர்கள், நேற்று கிராம நிர்வாக அலுவலகத்திற்குள் புகுந்து லூர்துபிரான்ஸை வெட்டிப் படுகொலை செய்தனர்.



இந்த சம்பவத்தை கண்டித்தும் கிராம நிர்வாக அலுவலரை கொலை செய்த நபர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் பொள்ளாச்சி வட்டாட்சியர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கம் சார்பில் முன்னாள் மாவட்ட தலைவர் பிரஸ்நவ் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.



அப்போது கிராம நிர்வாக அலுவலர்களுக்கு பணி பாதுகாப்பு வழங்க வலியுறுத்தியும்,கிராம நிர்வாக அலுவலர் கொலை செய்யப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்தும் கண்டன முழக்கங்கள் எழுப்பப்பட்டன.



மேலும், அரசாங்க சொத்தை காப்பாற்றுவதற்கு அனைத்து நிலை அதிகாரிகளுக்கும் பொறுப்பு உள்ளது. தவறு நடந்தால் கிராம நிர்வாக அலுவலர் மட்டுமே புகார் அளிக்க வேண்டும் என்ற நிலை உள்ளது. இதை மாற்றி வட்டாட்சியர், சார் ஆட்சியர் என்ற அளவில் புகார் அளிக்கலாம் என்ற ஒரு தீர்மானத்தை தமிழக அரசு கொண்டுவர வேண்டும் என்றும், கொலையாளிகளுக்கு அதிகபட்ச தண்டனை வழங்க வேண்டும் என்றும் ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

Newsletter

கோவை அரசுப் பள்ளி மைதானங்களில் ஆர்.எஸ்.எஸ். ‘சாகா’ பயிற்சி: நடவடிக்கை கோரி மனு

கோவை காந்திமாநகர் அரசு மேல்நிலைப் பள்ளி மைதானத்தில் ஆர்.எஸ்.எஸ். 'சாகா' பயிற்சி நடைபெற்றதாகக் கூறி, இதுபோன்ற பயிற்சிகளை...

அண்ணா பல்கலைக்கழக துணை மின் நிலையம் பராமரிப்பு: நாளை (22.07.2026) பல்வேறு பகுதிகளில் மின்தடை

அண்ணா பல்கலைக்கழக துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இதனா...

மைலம்பட்டி துணை மின் நிலையத்தில் நாளை (22.07.2026) பராமரிப்பு: 6 பகுதிகளில் மின்தடை

மைலம்பட்டி துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இதனால் கரைய...

குனியமுத்தூர் துணை மின் நிலையம் பராமரிப்பு: நாளை (22.07.2026) மின்தடை

குனியமுத்தூர் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இதனால் க...

மலையடிப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (22.07.2026) மின்தடை

மலையடிப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் நடைபெறும் என...

கோவை மாநகராட்சி தெற்கு மண்டல வளர்ச்சி திட்டங்களை ஆணையர் கட்டா ரவி தேஜா நேரில் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா தெற்கு மண்டலத்தில் மழைநீர் வடிகால், டெங்கு ஒழிப்பு, சுகாதார மைய கட்டுமானம், டயாலிச...