உடுமலை ஜல்லிபட்டியில் குளத்தின் கரை, கால்வாய் கரை உடைப்பு - அதிகாரிகள் அலட்சியம்!

உடுமலை அடுத்த ஜல்லிப்பட்டியில் உள்ள குளத்தின் கரை மற்றும் பிஏபி கால்வாய் கரையை உடைத்து சட்டவிரோதமாக நீரை வெளியேற்றி மீன் பிடிக்கப்பட்டு உள்ளது குறித்து தகவல் தெரிவித்தும், பொதுப்பணித்துறை அதிகாரிகள் அலட்சியமாக செயல்படுவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.


திருப்பூர்: உடுமலை அருகே ஜல்லிப்பட்டியில் சட்டவிரோதமாக குளத்தின் கரையை உடைத்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே, ஜல்லிபட்டியில், 20 ஏக்கர் பரப்பளவில், குளம் ஒன்று அமைந்துள்ளது. கடந்தாண்டு பெய்த பருவ மழையின் காரணமாக குளம் நிரம்பி காணப்பட்டது.



2 தினங்களுக்கு முன், குளத்தின் கரையை உடைத்தும், பி.ஏ.பி., உடுமலை கால்வாய் கான்கிரீட் கரையை உடைத்தும், குளத்தில் இருந்த பெருமளவு நீர் முறைகேடாக வெளியேற்றப்பட்டு, மீன் பிடிக்கப்பட்டுள்ளது.



இதுகுறித்து தகவல் கிடைத்ததும், அங்கு சென்ற விவசாயிகள், கரை உடைப்பை அடைத்தனர். மேலும், இதுகுறித்து ஊராட்சி நிர்வாகம், ஒன்றிய நிர்வாகம், பொதுப்பணித்துறை அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தும், குளத்தையும், பி.ஏ.பி., கால்வாயையும் உடைத்தவர்கள் மீது, துறை அதிகாரிகள் போலீசில் புகார் கொடுக்கவில்லை என கூறப்படுகிறது.



குளத்தின் கரையை பலப்படுத்தவும், குளத்திலிருந்து பி.ஏ.பி., கால்வாய்க்கு தோண்டப்பட்ட குழி மற்றும் பி.ஏ.பி., உடுமலை கால்வாய் கரை உடைப்பு, கீழ் மட்ட பாலம் பராமரிப்பு குறித்தும் அதிகாரிகள் கண்டு கொள்ளாததால் விவசாயிகள் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.

ஆகையால் பொதுப்பணித்துறை அதிகாரிகள் அலட்சியும் காட்டாமல் கால்வாய் கரையை உடைத்தவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Newsletter

Tamil Nadu Broiler Chicken Traders to Suspend Sales Indefinitely from July 31

The Tamil Nadu Chicken Traders Federation has announced an indefinite suspension of broiler chicken sales from July 31 a...

தமிழகம், புதுச்சேரியில் ஜூலை 31 முதல் கறிக்கோழி விற்பனை நிறுத்தம்; வணிகர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தம் அறிவிப்பு

கறிக்கோழி உற்பத்தி நிறுவனங்களின் தீவனக் கட்டுப்பாட்டு நடைமுறையால் எடை மோசடி மற்றும் பொருளாதார இழப்பு ஏற்படுவதாக குற்றம்ச...

நெகமம் துணை மின் நிலையத்தில் நாளை (28.07.2026) மின்தடை அறிவிப்பு

நெகமம் துணை மின் நிலையத்தில் ஜூலை 28ம் தேதி மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால், காலை 9 மணி முதல் மாலை 4 மணி...

சின்னத்தடாகம் துணை மின் நிலையத்தில் நாளை (28.07.2026) மின்தடை

சின்னத்தடாகம் துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை அறிவ...

கோவை ஆர்.எஸ்.புரம் துணை மின் நிலையத்தில் நாளை (28.07.2026) மின்தடை அறிவிப்பு

கோவை ஆர்.எஸ்.புரம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால், நாளை காலை 9 மணி முதல் மாலை 4 ம...

PMBJP திட்டத்தின் கீழ் கோவைக்கு ரயிலில் வந்த 1,300 டன் மானிய உர மூட்டைகள்

பிரதம மந்திரி பாரதிய ஜன உர்வராக் பரியோஜனா (PMBJP) திட்டத்தின் கீழ் ரூ.10 கோடி மதிப்பிலான சுமார் 1,300 டன் மானிய யூரியா உ...