அமைச்சருடன் நடந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு - கோவையில் அங்கன்வாடி ஊழியர்கள் போராட்டம் வாபஸ்!

காலியிடங்களை நிரப்புதல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 2 நாட்களாக நடத்தி வந்த போராட்டத்தை அங்கன்வாடி ஊழியர்கள் திரும்ப பெற்றுக் கொண்டனர். சென்னையில் சமூக நலத்துறை அமைச்சர் கீதா ஜீவனுடன் நடந்த பேச்சு வார்த்தையில் உடன்பாடு எட்டிய நிலையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.



கோவை: காலிபணியிடங்களை நிரப்ப வேண்டும், கோடை விடுமுறை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் சங்கத்தினர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கோவை ஆட்சியர் அலுவலகம் அருகே சாலையில் அமர்ந்து சுமார் 200க்கும் மேற்பட்ட ஊழியர்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.



இன்று காலை இரண்டாவது நாளாக காத்திருப்பு போராட்டத்தை தொடர்ந்தனர். அங்கன்வாடி ஊழியர்கள் போராட்டம் குறித்து சென்னையில் ஊழியர்கள் சங்க நிர்வாகிகளுடன் அமைச்சர் கீதா ஜீவன் மேற்கொண்ட பேச்சுவார்த்தையில் உடன்படிக்கை ஏற்பட்டதை தொடர்ந்து, தமிழகம் முழுவதும் போராட்டம் வாபஸ் பெறப்பட்டது.



இதையடுத்து, கோவை ஆட்சியர் அலுவலகம் அருகே காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்ட சுமார் 200க்கும் மேற்பட்ட ஊழியர்கள் போராட்டத்தை முடித்துக் கொண்டு கலைந்து சென்றனர். முன்னதாக கோவை எம்.பி. PR. நடராஜன், தொடர்ந்து போராடிய தொழிலாளர்களுக்கு வாழ்த்துக்கள் தெரிவித்தார். இதையடுத்து அங்கன்வாடி ஊழியர்கள் பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதை கைத்தட்டி வரவேற்று முழக்கங்களை எழுப்பினர்.

Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...