தனுஷின் கேப்டன் மில்லர் படப்பிடிப்புக்கு தடையா..? - அமைச்சர் மதிவேந்தன் பதில்

தென்காசி முண்டத்துறை புலிகள் சரணாலயத்தில் தனுஷின் கேப்டன் மில்லர் படத்தின் படப்படிப்பு நடந்து வருகிறது. இங்கு படப்பிடிப்பு உரிய அனுமதி பெறாமலும், வனப்பகுதியில் வெடிகுண்டு பயன்படுத்தியதாக கூறப்படுகிறது. இதுகுறித்து வனத்துறை அமைச்சர் மதிவேந்தனிடம் கேட்டபோது, விசாரித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.



கோவை: கேப்டன் மில்லர் படப்பிடிப்பு தளத்தில் வனத்துறை விதிகள் மீறப்பட்டிருந்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் மதிவேந்தன் தெரிவித்தார்.

கோவை வந்த அமைச்சர் மதிவேந்தனிடம், தென்காசி முண்டத்துறை புலிகள் சரணாலயத்தில் அரசு அனுமதி இல்லாமல் தனுஷின் கேப்டன் மில்லர் படப்பிடிப்பு தொடர்பாக செய்தியாளர்கள் கேள்வியை எழுப்பினர். அதற்கு அமைச்சர் மதிவேந்தன் கூறியதாவது:

எப்போதும் வனப்பகுதியில் சூட்டிங் எடுக்கும்போது அனுமதி கேட்பார்கள். அந்த அனுமதி மாவட்ட வனத்துறை அலுவலர், நேரடியாக சென்று அதை ஆய்வு செய்துதான் அனுமதி கொடுப்போம்.

எந்த நேரத்தில் எந்த தேதியில் எடுக்கிறோம், காலையிலிருந்து மாலை வரை எந்த நேரத்தில் எந்த இடத்தில் எடுக்கிறோம் என்பதை கேட்டு அதை ஆய்வு செய்துதான் அனுமதி வழங்குவோம். சூட்டிங் நடத்த அனுமதி இல்லை என்ற குற்றச்சாட்டை விசாரிக்க வேண்டும்.



வெடிகுண்டு வெடிக்கப்பட்டு காட்சிகள் எடுப்பதற்கான குற்றச்சாட்டை விசாரிக்க வேண்டும். விசாரித்துவிட்டு உரிய நடவடிக்கை எடுப்பேன். அனுமதி இல்லாமல் வனப்பகுதிக்குள் எடுப்பதற்கு வனத்துறையோ, அரசோ உறுதுணையாக இருக்காது.

அவ்வாறு அனுமதி பெற்றிருந்தாலும் கூட அந்த அனுமதிக்கு உட்பட்ட விஷயங்களை மீறியிருக்கிறார்களா? என்பது தொடர்பாக விசாரிக்க வேண்டும்.

இவ்வாறு, அமைச்சர் மதிவேந்தன் தெரிவித்தார்.

Newsletter

திமுக தேர்தல் அறிக்கையில் மின்சார கோரிக்கைகள் இல்லை: மறுசுழற்சி ஜவுளி கூட்டமைப்பு ஏமாற்றம்

திமுக தேர்தல் அறிக்கையில் மின்கட்டணம் குறைப்பு, நிலை கட்டணம் குறைப்பு உள்ளிட்ட மின்சாரத்துறை கோரிக்கைகள் இடம்பெறாதது மறு...

சூரிய ஒளி மின் உற்பத்தி திட்டங்களுக்கு ஊக்கமளிப்பு மற்றும் மானியம்: அதிமுக தேர்தல் அறிக்கையை தொழில்துறை வரவேற்பு

Coimbatore: சூரிய ஒளி மின் உற்பத்தி திட்டங்களுக்கு ஊக்கமளிப்பு மற்றும் மானியம் வழங்குவது தொடர்பான அதிமுக தேர்தல் அறிக்கை...

சாதனைகளை கூறி வெற்றி பெறுவேன்; யாரையும் குறைத்து மதிப்பிடவில்லை - செந்தில் பாலாஜி

கோவை தெற்கு தொகுதியில் DMK வேட்பாளர் செந்தில் பாலாஜி தேர்தல் பணி குழு அலுவலகத்தை காந்திபுரத்தில் திறந்து வைத்தார். எதிரண...

கோவையை உலகத் தர நகரமாக மாற்ற கருத்தரங்கம்

கோவை நவஇந்தியாவில் ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் “கோயம்புத்தூரை உலகத் தர நகரமாக மாற்றுவோம்” கருத்தரங...

மகாவீர் ஜெயந்தி: மார்ச் 31ல் இறைச்சி விற்பனைக்கு தடை - கோயம்புத்தூர் மாநகராட்சி அறிவிப்பு

மகாவீர் ஜெயந்தி விழாவையொட்டி மார்ச் 31, 2026 அன்று கோயம்புத்தூர் மாநகராட்சி பகுதியில் அனைத்து விதமான இறைச்சி விற்பனை மற்...

கவுண்டம்பாளையம் தொகுதியில் NTK வேட்பாளர் கலாமணி ஜெகநாதன் வேட்புமனு தாக்கல்

கோவை கவுண்டம்பாளையம் சட்டமன்றத் தொகுதியில் நாம் தமிழர் கட்சி வேட்பாளராக கலாமணி ஜெகநாதன் இன்று வேட்புமனுவை தாக்கல் செய்தா...