தமிழகத்தில் இன்று கொங்கு மாவட்டங்களில் அதிகபட்ச வெப்பநிலை பதிவு - வானிலை மையம் தகவல்!

தமிழகத்தில் இன்றைய தினம் கொங்கு பகுதி மாவட்டங்களில் அதிகபட்ச வெப்பநிலை பதிவான நிலையில், ஈரோட்டில் சராசரியாக  37.5 டிகிரி செல்சியசும்,  கோவையில் சராசரியாக 36.3 டிகிரி செல்சியசும், நீலகிரியில் சராசரியாக 24.5 டிகிரி செல்சியஸ் வெப்பமும் பதிவானதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.


கோவை: ஈரோடு மற்றும் கோவை உள்ளிட்ட கொங்கு பகுதி மாவட்டங்களில் அதிகபட்சமான வெப்பநிலை பதிவானதாகவானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

கோடை காலம் துவங்குவதற்கு முன்பே தமிழகத்தில் வெயில் சுட்டெரிக்க துவங்கியது. இந்நிலையில், பல்வேறு மாவட்டங்களில் வெயில் வாட்டி வந்த நிலையில், கடந்த இரண்டு, மூன்று நாட்களாக அவ்வப்போது, மழை பெய்து குளிர்ச்சியான சூழல் நிலவி, பொதுமக்களுக்கு ஆறுதலை ஏற்படுத்தி உள்ளது.

இதனிடையே இன்றைய தினம் ஈரோடு, கோவை, திருப்பூர் உள்ளிட்ட கொங்கு பகுதி மாவட்டங்களில் அதிகபட்சமான வெப்பநிலை பதிவானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.



இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில்,ஈரோடு மாவட்டத்தில்,அதிகபட்சமாக 38.6 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவானதாகவும், குறைந்த பட்சமாக 23.2 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையும், சராசரியாக 37.5 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையும் பதிவானதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இதேபோல், கோவை மாவட்டத்தில் அதிபட்சமாக 36.0 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவானதாகவும், குறைந்தபட்சமாக 25.4டிகிரி செல்சியஸ் வெப்பமும், சராசரியாக 36.3 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவானதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், நீலகிரி மாவட்டம் குன்னூரில் அதிகபட்சமாக 22.3 டிகிரி செல்சியஸ் வெப்பமும், குறைந்தபட்சமாக 15.2 டிகிரி செல்சியஸ் வெப்பமும், சராசரியாக 24.5 டிகிரி செல்சியஸ் வெப்பமும் பதிவானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேபோல், கோவை மாவட்டம் வால்பாறையில் அதிகபட்சமாக 27.0 டிகிரி செல்சியஸ் வெப்பமும், குறைந்தபட்சமாக 16.0 டிகிரி செல்சியஸ் வெப்பமும், சராசரியாக 28.1 டிகிரி செல்சியஸ் வெப்பமும் பதிவானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

கோவையில் ஜேசிபி வாகனங்கள் நிறுத்தி எர்த் மூவர்ஸ் உரிமையாளர்கள் போராட்டம்

புதிய வாகன விலை, எரிபொருள், உதிரி பாகங்கள், காப்பீடு மற்றும் வரி உயர்வை கண்டித்து கோவை மாவட்ட எர்த் மூவர்ஸ் உரிமையாளர்கள...

கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு: ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு நிலவரம்

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக நீர்மட்டம் உயர்ந்து வருகிறது...

பெங்களூர் -கோவைக்கு காரில் கடத்தி வரப்பட்ட 450 கிலோ புகையிலைப் பொருட்கள் பறிமுதல்

பெங்களூரில் இருந்து கோவைக்கு காரில் கடத்தி வரப்பட்ட 450 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்களை வடவள்ளி போலீசார் பறிமு...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 75 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் ந...

கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ச்சியான மழை பெய்து வருவத...

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...