தமிழகத்தில் இன்று கொங்கு மாவட்டங்களில் அதிகபட்ச வெப்பநிலை பதிவு - வானிலை மையம் தகவல்!

தமிழகத்தில் இன்றைய தினம் கொங்கு பகுதி மாவட்டங்களில் அதிகபட்ச வெப்பநிலை பதிவான நிலையில், ஈரோட்டில் சராசரியாக  37.5 டிகிரி செல்சியசும்,  கோவையில் சராசரியாக 36.3 டிகிரி செல்சியசும், நீலகிரியில் சராசரியாக 24.5 டிகிரி செல்சியஸ் வெப்பமும் பதிவானதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.


கோவை: ஈரோடு மற்றும் கோவை உள்ளிட்ட கொங்கு பகுதி மாவட்டங்களில் அதிகபட்சமான வெப்பநிலை பதிவானதாகவானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

கோடை காலம் துவங்குவதற்கு முன்பே தமிழகத்தில் வெயில் சுட்டெரிக்க துவங்கியது. இந்நிலையில், பல்வேறு மாவட்டங்களில் வெயில் வாட்டி வந்த நிலையில், கடந்த இரண்டு, மூன்று நாட்களாக அவ்வப்போது, மழை பெய்து குளிர்ச்சியான சூழல் நிலவி, பொதுமக்களுக்கு ஆறுதலை ஏற்படுத்தி உள்ளது.

இதனிடையே இன்றைய தினம் ஈரோடு, கோவை, திருப்பூர் உள்ளிட்ட கொங்கு பகுதி மாவட்டங்களில் அதிகபட்சமான வெப்பநிலை பதிவானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.



இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில்,ஈரோடு மாவட்டத்தில்,அதிகபட்சமாக 38.6 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவானதாகவும், குறைந்த பட்சமாக 23.2 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையும், சராசரியாக 37.5 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையும் பதிவானதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இதேபோல், கோவை மாவட்டத்தில் அதிபட்சமாக 36.0 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவானதாகவும், குறைந்தபட்சமாக 25.4டிகிரி செல்சியஸ் வெப்பமும், சராசரியாக 36.3 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவானதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், நீலகிரி மாவட்டம் குன்னூரில் அதிகபட்சமாக 22.3 டிகிரி செல்சியஸ் வெப்பமும், குறைந்தபட்சமாக 15.2 டிகிரி செல்சியஸ் வெப்பமும், சராசரியாக 24.5 டிகிரி செல்சியஸ் வெப்பமும் பதிவானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேபோல், கோவை மாவட்டம் வால்பாறையில் அதிகபட்சமாக 27.0 டிகிரி செல்சியஸ் வெப்பமும், குறைந்தபட்சமாக 16.0 டிகிரி செல்சியஸ் வெப்பமும், சராசரியாக 28.1 டிகிரி செல்சியஸ் வெப்பமும் பதிவானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

பட்டாசு, இனிப்பு, கோஷங்கள்.. ! கோவையில் களைகட்டிய த.வெ.க வெற்றி விழா

தமிழக முதலமைச்சராக தமிழக வெற்றி கழக தலைவர் நடிகர் ஜோசப் விஜய் பதவியேற்றதைத் தொடர்ந்து, கோவையின் பல்வேறு பகுதிகளில் த.வெ....

காங்கிரஸ் தொண்டர்களுக்கு பாதுகாப்பு வழங்க கோரி கோவை காவல் ஆணையரிடம் மனு

மயிலாடுதுறையில் காங்கிரஸ் நிர்வாகிகள் தாக்கப்பட்ட சம்பவத்தில் திமுகவினருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவும், கோவையில் காங்க...

PM Shri திட்டத்திற்கு எதிராக கோவையில் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் போராட்டம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் மத்திய அரசின் PM Shri திட்டத்திற்கு எதிராக தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் கண்...

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

வால்பாறை செல்ல இ-பாஸ் கட்டாயம்: ஆழியார் சோதனைச் சாவடியில் நூற்றுக்கணக்கான வாகனங்கள் திருப்பி அனுப்பம்

வால்பாறைக்கு வார இறுதி நாட்களில் 750 வாகனங்களுக்கு மட்டும் அனுமதி. ஆழியார் சோதனைச் சாவடியில் இ-பாஸ் இல்லாத வாகனங்கள் திர...