மேட்டுப்பாளையத்தில் அத்துமீறும் தனியார் பேருந்துகள் - போக்குவரத்து நெரிசல்!

கோவை மேட்டுப்பாளையம் சாலை கவுன்டர்மில்ஸ் பகுதியில் மேம்பாலம் கட்டுமான பணிகள் நடைபெற்று வருகிறது. இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வரும் நிலையில் தனியார் பேருந்து ஓட்டுநர்கள் அத்துமீறுவதாக புகார் எழுந்துள்ளது.


கோவை: மேட்டுப்பாளையம் சாலையில் அத்துமீறும் தனியார் பேருந்துகள் மீது் நடவடிக்கை எடுக்கும்படி கோரிக்கை எழுந்துள்ளது.

கோவை மேட்டுபாளையம் சாலை கவுன்டர்மில்ஸ் பகுதியில் மேம்பாலம் கட்டுமான பணிகள் நடைபெற்று வருகிறது. இதனால் அந்த சாலையில் காலை மற்றும் மாலை நேரங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு, நீண்ட வரிசையில் நின்று வாகனங்கள் செல்கிறது.



இந்நிலையில் மேட்டுப்பாளையத்தில் இருந்து கோவை வரும் தனியார் பேருந்து ஓட்டுநர்கள் விதியை மீறி ஒரு வழிச் சாலையில் பேருந்தை வேகமாக இயக்குவதால் விபத்து ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.



ஆம்புலன்ஸ் வாகனம் கூட சரியான பாதையில் செல்லும் நிலையில் தனியார் பேருந்து ஓட்டுநர்கள் அத்துமீறி வருகின்றனர். உடனடியாக சாலை விதி மீறலில் ஈடுபட்ட தனியார் பேருந்து ஓட்டுநர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

Newsletter

வரசித்தி விநாயகருக்கு வெள்ளி கவசம் - ரூ.10 லட்சம் நோட்டுகளால் அலங்காரம்

விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி கோவை நரசிம்மநாயக்கன்பாளையம் அருள்மிகு வரசித்தி விநாயகர் ஆலயத்தில் விநாயக பெருமானுக்கு வெ...

பர்மிட் தாமதம், கட்டண குழப்பம்: அமைச்சர் மீது ஆம்னி உரிமையாளர்கள் சாடல்

ஆம்னி பேருந்து அதிக கட்டண வசூல் குற்றச்சாட்டு தொடர்பாக அமைச்சர் இன்றுவரை பேச்சுவார்த்தை நடத்தவில்லை என உரிமையாளர் சங்கம்...

கோவையில் சிறுமி பாலியல் வன்கொடுமை: ஆய்வாளரை தாக்கிய கைதான நபரை சுட்டுப் பிடித்த போலீசார்

செப். 12-ஆம் தேதி கோவையில் சிறுமியை கடத்தி பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் இருவர் கைது செய்யப்பட்ட நிலையில், அதில் ஒருவ...

கோவையில் கதவை பூட்டாமல் தூங்கிய மாணவர்கள்: 4 லேப்டாப், 3 செல்போன்கள் திருட்டு

கோவை குனியமுத்தூர் சுகுணாபுரம் வாடகை வீட்டில் தங்கியிருந்த கல்லூரி மாணவர்கள் கதவை பூட்டாமல் தூங்கியதை பயன்படுத்தி நள்ளிர...

கோவையில் சட்டவிரோத மது விற்பனை: 119 மதுபாட்டில்கள் பறிமுதல், 4 பேர் கைது

கோவை மாநகரில் அரசு அனுமதியின்றி கூடுதல் விலைக்கு மது விற்பனை செய்த பெண் உள்பட 4 பேர் கைது செய்யப்பட்டனர். மதுவிலக்கு அமல...

கோவையில் நடைபெற்ற மக்கள் நீதிமன்றத்தில் 4085 வழக்குகளுக்கு தீர்வு

கோவை மாவட்டத்தில் தேசிய மக்கள் நீதிமன்றம் மூலம் 27 அமர்வுகளில் 4085 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது. விபத்தில் காலை இழந...