மேட்டுப்பாளையத்தில் அத்துமீறும் தனியார் பேருந்துகள் - போக்குவரத்து நெரிசல்!

கோவை மேட்டுப்பாளையம் சாலை கவுன்டர்மில்ஸ் பகுதியில் மேம்பாலம் கட்டுமான பணிகள் நடைபெற்று வருகிறது. இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வரும் நிலையில் தனியார் பேருந்து ஓட்டுநர்கள் அத்துமீறுவதாக புகார் எழுந்துள்ளது.


கோவை: மேட்டுப்பாளையம் சாலையில் அத்துமீறும் தனியார் பேருந்துகள் மீது் நடவடிக்கை எடுக்கும்படி கோரிக்கை எழுந்துள்ளது.

கோவை மேட்டுபாளையம் சாலை கவுன்டர்மில்ஸ் பகுதியில் மேம்பாலம் கட்டுமான பணிகள் நடைபெற்று வருகிறது. இதனால் அந்த சாலையில் காலை மற்றும் மாலை நேரங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு, நீண்ட வரிசையில் நின்று வாகனங்கள் செல்கிறது.



இந்நிலையில் மேட்டுப்பாளையத்தில் இருந்து கோவை வரும் தனியார் பேருந்து ஓட்டுநர்கள் விதியை மீறி ஒரு வழிச் சாலையில் பேருந்தை வேகமாக இயக்குவதால் விபத்து ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.



ஆம்புலன்ஸ் வாகனம் கூட சரியான பாதையில் செல்லும் நிலையில் தனியார் பேருந்து ஓட்டுநர்கள் அத்துமீறி வருகின்றனர். உடனடியாக சாலை விதி மீறலில் ஈடுபட்ட தனியார் பேருந்து ஓட்டுநர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

Newsletter

கோவையில் மறுமலர்ச்சி மக்கள் இயக்கத்தினர் காத்திருப்பு போராட்டம்

அரசாணைகளின்படி அரசு அலுவலகங்களில் அம்பேத்கர், பெரியார், அண்ணா, காமராஜர் உள்ளிட்ட சகிக்க நீதி தலைவர்களின் படங்களை வைக்க வ...

கோவையில் ஒரே நாளில் 800க்கும் மேற்பட்ட தெருநாய்களுக்கு தடுப்பூசி

கோயம்புத்தூர் மாநகராட்சி எல்லைக்குட்பட்ட வார்டு எண்.5, 53, 87 பகுதிகளில் 12.09.2026 அன்று ஒரே நாளில் 800-க்கும் மேற்பட்ட...

ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்லூரி - ஐபிஎம் ஹேக்கத்தான்: 16 மாநிலங்களில் இருந்து 1000க்கும் மேற்பட்ட போட்டியாளர்கள்

கோவை நவஇந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி, ஐபிஎம் நிறுவனத்துடன் இணைந்து 12.09.2026 மற்றும் 1...

பயிர் பிரச்சினைகளை கண்டறிய AI ஏஜென்ட்கள்: ஈசா கல்லூரி மாணவர்களின் 'ஏரோ கிரெயின்' திட்டத்திற்கு நான்காம் பரிசு

கோயமுத்தூர் பிச்சானூர் ஜேசிடி பொறியியல் தொழில்நுட்பக் கல்லூரியில் நடைபெற்ற தேசிய அளவிலான கல்லூரிகளுக்கிடையேயான பொறியியல்...

சாடிவயல் யானைகள் முகாமில் கும்கி யானைகளுக்கு விநாயகர் சதுர்த்தி கஜ பூஜை

கோவை வனக்கோட்டம், போளுவாம்பட்டி வனச்சரகத்திற்கு உட்பட்ட சாடிவயல் யானைகள் முகாமில் 14.09.2026 அன்று விநாயகர் சதுர்த்தி வி...

EASA பொறியியல் கல்லூரியில் 14வது பட்டமளிப்பு விழா: அண்ணா பல்கலைக்கழகத்தில் 8வது ரேங்க் பெற்ற ஈ.ஷஹானாவுக்கு பரிசு

கோவை நவக்கரையில் உள்ள EASA பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியின் 14வது ஆண்டு பட்டமளிப்பு விழா 13.09.2026 அன்று கால...