மேட்டுப்பாளையத்தில் அத்துமீறும் தனியார் பேருந்துகள் - போக்குவரத்து நெரிசல்!

கோவை மேட்டுப்பாளையம் சாலை கவுன்டர்மில்ஸ் பகுதியில் மேம்பாலம் கட்டுமான பணிகள் நடைபெற்று வருகிறது. இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வரும் நிலையில் தனியார் பேருந்து ஓட்டுநர்கள் அத்துமீறுவதாக புகார் எழுந்துள்ளது.


கோவை: மேட்டுப்பாளையம் சாலையில் அத்துமீறும் தனியார் பேருந்துகள் மீது் நடவடிக்கை எடுக்கும்படி கோரிக்கை எழுந்துள்ளது.

கோவை மேட்டுபாளையம் சாலை கவுன்டர்மில்ஸ் பகுதியில் மேம்பாலம் கட்டுமான பணிகள் நடைபெற்று வருகிறது. இதனால் அந்த சாலையில் காலை மற்றும் மாலை நேரங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு, நீண்ட வரிசையில் நின்று வாகனங்கள் செல்கிறது.



இந்நிலையில் மேட்டுப்பாளையத்தில் இருந்து கோவை வரும் தனியார் பேருந்து ஓட்டுநர்கள் விதியை மீறி ஒரு வழிச் சாலையில் பேருந்தை வேகமாக இயக்குவதால் விபத்து ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.



ஆம்புலன்ஸ் வாகனம் கூட சரியான பாதையில் செல்லும் நிலையில் தனியார் பேருந்து ஓட்டுநர்கள் அத்துமீறி வருகின்றனர். உடனடியாக சாலை விதி மீறலில் ஈடுபட்ட தனியார் பேருந்து ஓட்டுநர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

Newsletter

உடுமலை மாரியம்மன் கோவில் தேர் திருவிழா: தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து மாற்றம்

திருப்பூர் மாவட்டம் உடுமலையில் இன்று மாலை மாரியம்மன் கோவில் தேர் திருவிழா நடைபெறுவதால், கோவை-திண்டுக்கல் தேசிய நெடுஞ்சால...

தொண்டாமுத்தூரில் AIADMK வேட்பாளர் S.P. வேலுமணிக்கு இந்து மக்கள் கட்சி ஆதரவு அறிவிப்பு

தொண்டாமுத்தூர் தொகுதியில் இந்து மக்கள் கட்சி சுயேச்சை வேட்பாளர் சூர்யாவின் வேட்பு மனு நிராகரிக்கப்பட்ட நிலையில், மாநில ப...

கோவை மாவட்டத்தில் தேர்தல் சோதனையில் ரூ.8.18 கோடி பணமும் நகையும் பறிமுதல்

கோவை மாவட்டத்தில் தேர்தல் பறக்கும்படை மற்றும் வருமான வரித்துறையினர் நடத்திய சோதனையில் கடந்த இரு நாள்களில் ரூ.8.18 கோடி ர...

மேட்டுப்பாளையம் தொகுதியில் கவிதா கல்யாணசுந்தரத்திற்கு ஆதரவாக காரமடையில் தீவிர வாக்கு சேகரிப்பு

கோவை வடக்கு மாவட்ட DMK செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி தலைமையில் மேட்டுப்பாளையம் சட்டமன்ற தொகுதி வேட்பாளர் கவிதா கல்யாணசுந்த...

ஆனைகட்டியில் மலைவாழ் மக்களிடம் பிரச்சாரம் மேற்கொண்ட அதிமுக வேட்பாளர் அருண்குமார்

கோவை ஆனைகட்டி பகுதியில் மலைவாழ் மக்கள் மத்தியில் அதிமுக வேட்பாளர் பி.ஆர்.ஜி.அருண்குமார் தனது தேர்தல் பிரச்சாரத்தை மேற்கொ...

கோவை கடைவீதி போலீசாரின் அதிரடி சோதனை: மெத்தாம்பெட்டமைன் விற்பனை செய்த 3 பேர் கைது

கோவை கடைவீதி போலீசார் தெற்கு உக்கடத்தில் ரோந்து பணியின்போது சந்தேகத்தின் அடிப்படையில் 3 பேரை சோதனை செய்தனர். அவர்களிடம்...