உடுமலை அருகே போடிபட்டி ஊராட்சி தலைவர் மீது முறைகேடு எதிரொலி - வட்டாட்சியர் விசாரணை!

உடுமலை ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட போடிப்பட்டி ஊராட்சியில் நிதி நிர்வாக செயல்பாட்டில் முறைகேடு நடந்திருப்பதாக குற்றச்சாட்டு எழுந்தது. அதன் அடிப்படையில் மாவட்ட நிர்வாகத்தின் மூலம் குழு அமைக்கப்பட்டு ஆய்வு மேற்கொள்ளப்பட்ட நிலையில், இன்று வட்டாட்சியர் கண்மணி தலைமையில் கருத்துக்கேட்பு கூட்டம் நடைபெற்றது.


திருப்பூர்: போடிபட்டி ஊராட்சி மன்ற தலைவர் மீது முறைகேடு எதிரொலியாக வட்டாச்சியர் தலைமையில் கருத்துக்கேட்பு கூட்டம் நடைபெற்றது.

திருப்பூர் மாவட்டம் உடுமலை ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட போடிப்பட்டி ஊராட்சியில் நிதி நிர்வாக செயல்பாட்டில் முறைகேடு நடந்திருப்பதாக குற்றச்சாட்டு எழுந்தது. அதன் அடிப்படையில் மாவட்ட நிர்வாகத்தின் மூலம் குழு அமைக்கப்பட்டு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

தொடர்ந்து நடைபெற்ற ஆய்வின் முடிவில் முறைகேடுகள் நடைபெற்று இருப்பது உண்மை என அந்த குழு அறிக்கை அளித்ததாக கூறப்படுகிறது. அதன் அடிப்படையில் ஊராட்சி செயலர் பணி நீக்கம் செய்யப்பட்டார். மேலும் ஊராட்சி மன்ற தலைவர் நிதியில் முறைகேடு நடைபெற்றிருப்பதாக கருதி ஊராட்சி மன்ற தலைவரிடம் விளக்கம் கேட்கப்பட்டது.

அதற்கு ஊராட்சிமன்ற தலைவர் தரப்பில் கொடுக்கப்பட்ட விளக்கம் ஏற்க தகுந்ததாக இல்லாததால் நடவடிக்கை எடுக்க கலெக்டர் உத்தரவிட்டார். அதன்படி கடந்த 12ஆம் தேதி கருத்து கேட்பு கூட்டம் நடைபெறுவதாக இருந்தது. அன்றைய தினம் ஊராட்சி மன்ற தலைவருக்கு உடல்நிலை சரியில்லாததால் கூட்டம் ஒத்திவைக்கப்பட்டது.

இந்நிலையில் கருத்து கேட்பு கூட்டம் உடுமலை தாசில்தார் கண்மணி தலைமையில் நடைபெற்றது. அப்போது ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் 12 பேர் தனித்தனியாக எழுத்துப்பூர்வமான கருத்துக்களை தெரிவித்தனர். இறுதியாக ஊராட்சி மன்ற தலைவரிடம் கருத்து கேட்கப்பட்டது.

இந்த நிகழ்வுகள் அனைத்தும் கேமராவில் பதிவு செய்யப்பட்டது. இந்த குற்றச்சாட்டு சம்பந்தமாக ஊராட்சிமன்ற தலைவர் பதவி நீக்கம் செய்யப்படுவாரா? அல்லது தொடர்வாரா? என்ற பரபரப்பு நிலவி வருகிறது.

Newsletter

தொகுதி மறுசீரமைப்புக்கு எதிர்ப்பு: நாளை தமிழ்நாட்டின் வீடுகள், வீதிகளில் கருப்புக் கொடி பறக்கட்டும் - முதல்வர் முக ஸ்டாலின்..!

மத்திய அரசு கொண்டு வரத் திட்டமிட்டுள்ள தொகுதி மறுசீரமைப்பு (Delimitation) திட்டத்திற்கு எதிராக திமுக தலைமையிலான கூட்டணி...

பொள்ளாச்சி அருகே கட்டுப்பாட்டை இழந்த லாரி மோதி ஒருவர் உயிரிழப்பு!

பொள்ளாச்சி- கோவை வடக்கிபாளையம் பிரிவு அருகே ஓட்டுநரின் கட்டுப்பாட்டைஇழந்த லாரி சாலையோர வாகனங்கள், மின்கம்பங்களில் மோதி க...

வால்பாறை சட்டமன்ற தொகுதி: சபரீசன் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் – திமுக நிர்வாகிகள் பங்கேற்பு

கோவை தெற்கு தொகுதி வேட்பாளர் செந்தில் பாலாஜி, வால்பாறை மற்றும் பொள்ளாச்சி தொகுதி பார்வையாளர் டாக்டர் மகேந்திரன், வேட்பாள...

குனியமுத்தூர் இடையர்பாளையம் பகுதியில் சிலம்பம் சுழற்றி வாக்கு சேகரித்த முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி

கோவை குனியமுத்தூர் இடையர்பாளையம் பகுதியில் தொண்டாமுத்தூர் தொகுதி AIADMK வேட்பாளர் மற்றும் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலும...

கோவையில் அதிகரிக்கும் டிஜிட்டல் அரஸ்ட் மோசடி - 73 வயது முதியவர் ₹42 லட்சம் கேட்டு மிரட்டல்

கோவையில் 73 வயது ஓய்வு பெற்ற அதிகாரியை CBI அதிகாரி என்று கூறி மோசடி செய்ய முயன்றனர். டிஜிட்டல் அரஸ்ட் என்று மிரட்டி ₹42...

திமுக ஆட்சியில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்துள்ளன - அண்ணாமலை குற்றச்சாட்டு

திருப்பூர் மடத்துக்குளம் தொகுதியில் பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை வாக்கு சேகரிப்பின் போது, திமுக ஆட்சியில் பெண்களு...