உடுமலை அருகே போடிபட்டி ஊராட்சி தலைவர் மீது முறைகேடு எதிரொலி - வட்டாட்சியர் விசாரணை!

உடுமலை ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட போடிப்பட்டி ஊராட்சியில் நிதி நிர்வாக செயல்பாட்டில் முறைகேடு நடந்திருப்பதாக குற்றச்சாட்டு எழுந்தது. அதன் அடிப்படையில் மாவட்ட நிர்வாகத்தின் மூலம் குழு அமைக்கப்பட்டு ஆய்வு மேற்கொள்ளப்பட்ட நிலையில், இன்று வட்டாட்சியர் கண்மணி தலைமையில் கருத்துக்கேட்பு கூட்டம் நடைபெற்றது.


திருப்பூர்: போடிபட்டி ஊராட்சி மன்ற தலைவர் மீது முறைகேடு எதிரொலியாக வட்டாச்சியர் தலைமையில் கருத்துக்கேட்பு கூட்டம் நடைபெற்றது.

திருப்பூர் மாவட்டம் உடுமலை ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட போடிப்பட்டி ஊராட்சியில் நிதி நிர்வாக செயல்பாட்டில் முறைகேடு நடந்திருப்பதாக குற்றச்சாட்டு எழுந்தது. அதன் அடிப்படையில் மாவட்ட நிர்வாகத்தின் மூலம் குழு அமைக்கப்பட்டு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

தொடர்ந்து நடைபெற்ற ஆய்வின் முடிவில் முறைகேடுகள் நடைபெற்று இருப்பது உண்மை என அந்த குழு அறிக்கை அளித்ததாக கூறப்படுகிறது. அதன் அடிப்படையில் ஊராட்சி செயலர் பணி நீக்கம் செய்யப்பட்டார். மேலும் ஊராட்சி மன்ற தலைவர் நிதியில் முறைகேடு நடைபெற்றிருப்பதாக கருதி ஊராட்சி மன்ற தலைவரிடம் விளக்கம் கேட்கப்பட்டது.

அதற்கு ஊராட்சிமன்ற தலைவர் தரப்பில் கொடுக்கப்பட்ட விளக்கம் ஏற்க தகுந்ததாக இல்லாததால் நடவடிக்கை எடுக்க கலெக்டர் உத்தரவிட்டார். அதன்படி கடந்த 12ஆம் தேதி கருத்து கேட்பு கூட்டம் நடைபெறுவதாக இருந்தது. அன்றைய தினம் ஊராட்சி மன்ற தலைவருக்கு உடல்நிலை சரியில்லாததால் கூட்டம் ஒத்திவைக்கப்பட்டது.

இந்நிலையில் கருத்து கேட்பு கூட்டம் உடுமலை தாசில்தார் கண்மணி தலைமையில் நடைபெற்றது. அப்போது ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் 12 பேர் தனித்தனியாக எழுத்துப்பூர்வமான கருத்துக்களை தெரிவித்தனர். இறுதியாக ஊராட்சி மன்ற தலைவரிடம் கருத்து கேட்கப்பட்டது.

இந்த நிகழ்வுகள் அனைத்தும் கேமராவில் பதிவு செய்யப்பட்டது. இந்த குற்றச்சாட்டு சம்பந்தமாக ஊராட்சிமன்ற தலைவர் பதவி நீக்கம் செய்யப்படுவாரா? அல்லது தொடர்வாரா? என்ற பரபரப்பு நிலவி வருகிறது.

Newsletter

கோவையில் செந்தில் பாலாஜிக்கு ஆதரவாக முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப சிதம்பரம் பரப்புரை..!

NDA ஆட்சி அமைந்தால், பீகார் மாநில முதலமைச்சர் நிதிஷ் குமாருக்கு ஏற்பட்ட அரசியல் சூழ்நிலை போன்று தமிழகத்திலும் நிலைமை உரு...

கோவையில் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களுக்கு இந்து மக்கள் கட்சி தீவிர பிரச்சாரம்

கோவையில் தொண்டாமுத்தூர், தெற்கு, வடக்கு தொகுதிகளில் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களுக்கு இந்து மக்கள் கட்சியின் மாநில ப...

பீடம்பள்ளி ஊராட்சியில் அம்பேத்கர் 136-வது பிறந்தநாள் விழா: திமுக செயலாளர் மரியாதை

கோவை தெற்கு மாவட்டம் சூலூர் தெற்கு ஒன்றியத்தின் பீடம்பள்ளி ஊராட்சியில் அண்ணல் அம்பேத்கர் 136-வது பிறந்தநாள் நிகழ்வில் தி...

சான்றிதழ் பெறாத "ஜனநாயகன்" படம் வெளியீடு – கோவை உள்ளூர் சேனல் உரிமையாளர் கைது

கோவை கருமத்தம்பட்டியில் "ராசி பிரைம் மூவி" சேனல் உரிமையாளர் பழனிச்சாமி (44), மத்திய தணிக்கை சான்றிதழ் பெறாத "ஜனநாயகன்" த...

தவெக தலைவர் விஜய் இன்று கோவை வருகை - திருப்பூர் பெருமாநல்லூரில் தீவிர பிரச்சாரம்

தமிழக சட்டமன்ற தேர்தல் பிரச்சாரத்திற்காக தவெக தலைவர் விஜய் இன்று தனி விமானம் மூலம் கோவை வந்து திருப்பூர் பெருமாநல்லூரில்...

தொண்டாமுத்தூரில் N.R.கார்த்திகேயனுக்கு ஆதரவாக தீவிர வாக்கு சேகரிப்பு பிரசாரம்

தொண்டாமுத்தூர் சட்டமன்ற தொகுதியில் N.R.கார்த்திகேயனுக்கு ஆதரவாக திமுக தலைவர்கள் தீவிர வாக்கு சேகரிப்பு பணியில் ஈடுபட்டனர...