தமிழக சிறைகளில் 2,000 கைதிகளுக்கு ஒரே மாதத்தில் யோகா கற்றுக் கொடுத்த ஈஷா!‌

சென்னை, கோவை, திருச்சி, மதுரை உள்பட தமிழ்நாடு முழுவதும்‌ உள்ள 73 சிறைகளில்‌ உள்ள  2,000க்கும்‌ மேற்பட்ட கைதிகளுக்கு மன அழுத்தத்தை போக்கவும், உடல் நலனை பாதுகாக்கவும் ஈஷா சார்பில்‌ யோகாசன பயிற்சிகள் வழங்கப்பட்டு உள்ளது.


கோவை: ஈஷா யோகா மையம்‌ சார்பில்‌ ஒரே மாதத்தில்‌ சிறைகளில்‌ உள்ள 2,000க்கும்‌ மேற்பட்ட கைதிகளுக்கு யோகா கற்று கொடுக்கப்பட்டு உள்ளது.

சிறைகளில்‌ இருக்கும்‌ கைதிகள்‌ குடும்பத்தினரை பிரிந்து தனிமையில்‌ வாழ்வதால்‌ மன அழுத்தம்‌, உடல்‌ நல‌ பாதிப்பு போன்ற பிரச்சினைகளை எதிர் கொண்டு வருகின்றனர்‌.

இந்த பிரச்சினைகளில்‌ இருந்து அவர்கள்‌ வெளி வர உதவும்‌ விதமாக அவர்களுக்கு சிறப்பு யோகா வகுப்புகளை ஈஷா யோகா மையம் சார்பில் எடுக்கப்பட்டு வருகிறது.



அதன்படி, நடப்பு ஏப்ரல்‌ மாதத்தில்‌ மட்டும்‌ சென்னை, கோவை, திருச்சி, மதுரை, பாளையங்கோட்டை உள்ளிட்ட இடங்களில்‌ உள்ள மத்திய சிறைகள்‌, பிற மாவட்டங்களில்‌ உள்ள மாவட்ட சிறைகள்‌ மற்றும்‌ கிளை சிறைகள்‌ என மொத்தம்‌ 73 சிறைகளில்‌ சிறப்பு யோகா வகுப்புகள்‌ நடத்தப்பட்டன.



சத்குருவால்‌ பயிற்சி அளிக்கப்பட்ட யோகா ஆசிரியர்கள்‌ சிறைக்கு நேரில்‌ சென்று உயிர்‌ நோக்கம்‌, உப யோகா, சூரிய சக்தி போன்ற வெவ்வேறு விதமான யோகா பயிற்சிகளை கைதிகளுக்கு கற்றுக்கொடுத்தனர்‌.



இவ்வகுப்புகளில்‌ ஆண்கள்மற்றும்‌ பெண்கள்‌ கைதிகள்‌ மிகுந்த ஆர்வத்துடன்‌ பங்கேற்றனர்‌. இப்பயிற்சிகளை சிறை கைகிகள்‌ தினமும்‌ செய்து வருவதன்‌ மூலம்‌ மன அழுத்த‌ பாதிப்பில்‌ இருந்து விடுபட முடியும்‌.

மேலும்‌, முதுகுத்தண்டு வலுப்பெறும்‌, மூட்டு வலியில்‌ இருந்து விடுதலை பெறலாம்‌. உடல்‌ ஆரோக்கியம்‌ மேம்படும் என ஈஷா சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...