உதகையில் கோடை சீசன் தொடக்கம் - வாகன நெரிசலை குறைக்க போக்குவரத்து மாற்றம்!

உதகையில் கோடை சீசனை முன்னிட்டு 26ஆம் தேதி நள்ளிரவு 12 மணி முதல் நீலகிரி மாவட்டத்தில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது, குன்னூர் - பர்லியார் சாலை மற்றும் கோத்தகிரி சாலைகள் ஒரு வழிப்பாதையாக மாற்றப்பட்டுள்ளது. பகல் நேரங்களில் உதகையில் கனரக வாகனங்களுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.


நீலகிரி: உதகையில் கோடை சீசனை முன்னிட்டு போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நீலகிரி மாவட்டம் உதகையில் தற்போது கோடை சீசன் தொடங்கியுள்ளதால் ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் வர தொடங்கி உள்ளனர். இதனால் சீசன் களைகட்ட தொடங்கியுள்ளது.

இதனையடுத்து உதகையில் போக்குவரத்தை முறைப்படுத்துவது, அடிப்படை வசதிகள் மேற்கொள்வது குறித்த ஆலோசனைக் கூட்டம் உதகையில் உள்ள புதிய மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தில் நடைபெற்றது.

மாவட்ட ஆட்சியர் அம்ரித், காவல் கண்காணிப்பாளர் பிரபாகர் உள்ளிட்ட உயர் அதிகாரிகளும் வாகன ஓட்டுநர்கள் சங்கத்தினர், விடுதி உரிமையாளர்கள் சங்கத்தினர், உணவு விடுதிகள் சங்கத்தின் நிர்வாகிகள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.



இக்கூட்டத்தில் கோடை சீசன் ஏற்பாடுகள் குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது. அப்போது 26ஆம் தேதி நள்ளிரவு 12 மணி முதல் மே மாதம் இறுதி வரை நீலகிரி மாவட்டத்தில் உள்ள முக்கிய சாலைகளில் போக்குவரத்து மாற்றம் செய்ய முடிவு செய்யப்பட்டது.



கோடை சீசன் முடியும் வரை உதகை - குன்னூர் - மேட்டுப்பாளையம் சாலை மற்றும் உதகை - கோத்தகிரி - மேட்டுப்பாளையம் சாலைகள் ஒரு வழி பாதைகளாக மாற்ற முடிவு செய்யப்பட்டது.



இதனை அடுத்து உதகையிலிருந்து மேட்டுப்பாளையம் செல்லும் அனைத்து வாகனங்களும் கோத்தகிரி வழியாக மட்டுமே செல்ல அனுமதிக்கப்படும் என்றும், மேட்டுப்பாளையத்திலிருந்து உதகைக்கு வரும் வாகனங்கள் பர்லியார், குன்னூர் சாலையில் அனுமதிக்கப்படும்.

மேலும் கன ரக வாகனங்கள் காலை 7 மணி முதல் இரவு 9 மணி வரை உதகை நகருக்குள் வரவும் தடை விதிக்கப்பட்டுள்ளதுடன், கோடை சீசனுக்காக காந்தல், ஆவின் மைதானங்களில் பார்க்கிங் வசதி செய்யப்பட்டு இருப்பதாகவும், அங்கிருந்து சுற்றுலாப் பயணிகள் சுற்றுலா தலங்களுக்கு சென்று வர, பேருந்து சேவை தொடங்கி இருப்பதாக கூறிய அவர், சுற்றுலாப் பயணிகளுக்கு தேவையான குடிநீர், கழிப்பிட வசதி ஏற்படுத்தி கொடுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது என காவல் கண்காணிப்பாளர் பிரபாகர் தெரிவித்தார்.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 75 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் ந...

கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ச்சியான மழை பெய்து வருவத...

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...