வெளிமாநிலத் தொழிலாளர்கள் பிரச்சனை - கோவையில் மண்டல அளவிலான ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம்!

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வெளி மாநில தொழிலாளர்களுக்கான மண்டல ஒருங்கிணைப்பு குழு கூட்டம் நடைபெற்று வருகிறது. தொழிலாளர் நல கூடுதல் ஆணையர் குறிப்பிட்ட கால இடைவெளிகளில் கூட்டம் நடத்தி, ஒவ்வொரு காலண்டிற்கும் ஏற்படும் முன்னேற்றம் குறித்த அறிக்கையை தொழிலாளர் நல ஆணையரிடம் சமர்ப்பிக்க கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளது.



கோவை: வெளிமாநில தொழிலாளர்கள் தொடர்பான பிரச்சினைகள் மற்றும் அவர்களுக்கு நம்பிக்கையூட்டும் வகை மற்றும் அவர்களுக்கு உள்ள சட்ட உரிமைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மண்டல அளவிலான ஒருங்கிணைப்பு குழுவினை சென்னை, கோவை, மதுரை, திருச்சி ஆகிய மண்டலங்களில் கூடுதல் ஆணையர்கள் தலைமையில் அமைத்துள்ளது.



கோவை, திருப்பூர், சேலம், கிருஷ்ணகிரி, குன்னூர், ஈரோடு, நாமக்கல் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த தொழிலாளர் நல உதவி ஆணையர்கள் கோவை மண்டல அளவிலான் இந்த கூட்டத்தில் பங்கேற்றனர்.



மாநில அமைப்புகளை சேர்ந்த பிரதிநிதிகள், தன்னார் அமைப்புகளை சேர்ந்த பிரதிநிதிகள், தொழிற்சாலை உரிமையாளர் சங்கப் பிரதிநிதிகள் ஆகியோர் இந்த கூட்டத்தில் தேர்வு செய்யப்பட்டனர்.



மேலும், சேலம், கோவை, திருப்பூர், ஈரோடு, ஓசூர் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த தொழிற்சாலை பாதுகாப்பு மற்றும் நலன் சார்ந்த கூடுதல் இயக்குனர்கள் சிறப்பு உறுப்பினர்களாக தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

தொழிலாளர் நல கூடுதல் ஆணையர் குறிப்பிட்ட கால இடைவெளிகளில் கூட்டம் நடத்தி, ஒவ்வொரு காலண்டிற்கும் ஏற்படும் முன்னேற்றம் குறித்த அறிக்கையை தொழிலாளர் நல ஆணையரிடம் சமர்ப்பிக்க கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.

Newsletter

விவசாயிகள் பயிர்க்கடன் தள்ளுபடி கோரி கோவை ஆட்சியர் அலுவலகத்தில் கருப்புத் துண்டுடன் போராட்டம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் தலையில் கருப்புத் துண்டு கட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர். தேர்தல் வாக்குறுதி...

வடவள்ளி பகுதி தூய்மைப் பணியாளர்களுக்கு மாநகராட்சி ஆணையர் பாராட்டு

கோயம்புத்தூர் மேற்கு மண்டல வடவள்ளி பகுதியில் மக்கும், மக்காத குப்பைகளை சிறப்பாக தரம் பிரித்த தூய்மைப் பணியாளர்கள் மற்றும...

புளியகுளம் மாநகராட்சி பள்ளிகளில் கோவை மேயர் ஆய்வு

கோவை மாநகராட்சி மத்திய மண்டலம் புளியகுளம் பகுதியில் உள்ள வெரினாடா உயர்நிலைப் பள்ளி மற்றும் ஆரம்பப் பள்ளியில் மேயர் கா.ரங...

கோவை உக்கடம் துணை மின் நிலையத்தில் நாளை (01.08.2026) மின்தடை

கோவை உக்கடம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், நாளை ஆகஸ்ட் 1ம் தேதி காலை 9 மணி முதல் மாலை...

திருப்பூர் மாவட்ட அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணை 28.54 அடியாகவும், திருமூர்த்தி அணை 35.44 அடியாகவும் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. நீர் ப...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்ட விவரம்

கோவை மாவட்டத்தில் உள்ள முக்கிய அணைகளான ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் ஜூலை 30ஆம் தேதி நீர்மட்ட நிலவரம் வெளியா...