மது குடிப்பதற்கான சிறப்பு அனுமதி அரசாணை - தமிழக அரசு திரும்பப்பெற டாக்டர்.கிருஷ்ணசாமி வலியுறுத்தல்!

12 மணி நேர வேலை சட்ட மசோதாவை நிறுத்தி வைக்காமல் சட்டமன்றத்திலேயே திரும்ப பெறகோரி மே.1 ஆம் தேதி, புதிய தமிழகம் கட்சி சார்பில் அனைத்து மாவட்ட தலைநகரங்களில் பேரணி நடத்தப்படுகிறது. தலித் கிறிஸ்தவர்கள் எஸ்சி பட்டியலில் வரவேண்டும் என்பதை திரும்பப் பெற வேண்டும் என்று புதிய தமிழகம் கட்சி தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி வலியுறுத்தியுள்ளார்.


கோவை: கோவை குனியமுத்தூரில் உள்ள பொதிகை இல்லத்தில் புதிய தமிழகம் கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமி செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது அவர் பேசியதாவது:



திமுக தேர்தல் பிரச்சாரத்தின்போது ஆட்சிக்கு வந்தவுடன் பூரண மதுவிலக்குக்கு கையெழுத்து இடப்படும் என மு.க.ஸ்டாலின் தெரிவித்தார். ஆனால், ஆட்சிக்கு வந்து இரண்டு வருடம் ஆகிவிட்டது. அதேபோல டாஸ்மாக் கடைகளை சுற்றிலும் சட்டவிரோதமாக பார்கள் இயங்கி வருகிறது.

இந்த சூழலில் தமிழக அரசு அரசாணையில் திருமண மண்டபங்களில் முன்அனுமதி உடன் மதுக்கள் பரிமாறலாம் என வெளியிட்டுள்ளது. இதற்கு எதிர்ப்பு கிளம்பிய நிலையில் மாலை சரத்துக்கள் மாற்றி மீண்டும் வெளியாகியது. இது மது விலக்குக்கு நேர் எதிரானது. அதிமுக ஆட்சியில் கடைகளை குறைக்க முயன்றனர். நேற்று வெளியாகிய அரசாணை தமிழக மக்களுக்கு எதிரானது. நேற்றைய அரசாணையை முற்றாக ரத்து செய்ய வேண்டும்.

மேலும், இந்த அரசாணை சர்வதேச அரங்கில் விளையாட்டுக்கு பதிலாக மது ஆசையை தூண்டிவிடுவதற்கு ஏதுவாக உள்ளது.12 மணி நேர வேலை தொடர்பாக சட்ட மசோதாவை நிறுத்தி வைக்காமல் சட்டமன்றத்திலேயே திரும்ப பெற வேண்டும். சாதிய சிக்கல்களில் இருந்து வெளியே முன்னேறி சென்றவர்களை மீண்டும் தலித் பட்டியலுக்குள் அடைப்பது அம்மக்களுக்கு எதிரானது.

தலித் கிறிஸ்தவர்கள் எஸ்சி பட்டியலில் வரவேண்டும் என்பதை திரும்பப் பெற வேண்டும். திமுக அரசு ஒட்டுமொத்தத்தில் குழப்பத்தில் உள்ளது போல், தடுமாற்றத்தில் உள்ளது. ஆளுநருக்கு தீர்மானம் அனுப்பிவிட்டு குறை சொல்வார்கள். அரசு தடுமாறி அரசாணை வெளியிடுகிறது.

டாஸ்மாக்குக்கு எதிராக காங்கிரஸ், கம்யூனிஸ்ட், இஸ்லாமிய அமைப்புகள் வெளிப்படையாக கண்டிக்க முன்வர வேண்டும். அனைத்து அரசியல் கட்சித் தலைவர்களும் ஒன்றிணைந்து மே மாதம் பத்தாம் தேதி சென்னையில் நடைபெறும் டாஸ்மாக்குக்கு எதிரான பேரணியில் ஒத்துழைக்க வேண்டும்.

12 மணி நேர வேலை சட்ட மசோதாவை திரும்ப பெற வலியுறுத்தி மே ஒன்றாம் தேதி அனைத்து மாவட்ட தலைநகரங்களில் பேரணி நடத்துகிறோம். அதேபோல ஜி-ஸ்கொயர், அதிகாரம் பெற்றவர்களின் ஆதரவோடும், அரசு ஆதரவோடும் செயல்படுகிறது.

இவ்வாறு, டாக்டர் கிருஷ்ணசாமி தெரிவித்தார்.

Newsletter

கோவை வடக்கு: அடுக்குமாடி குடியிருப்புகளில் வாக்கு சேகரித்த வானதி சீனிவாசனின் குடும்பத்தார்..!

மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் வானதி சீனிவாசனுக்காக, அவரது கணவர் சீனிவாசன் மற்றும் மகன்கள். அடுக்குமாடி குடியிருப...

பொள்ளாச்சி திமுக வேட்பாளருக்கு தேவாங்க செட்டியார் சமூகத்தினர் ஆதரவு..!

வரும் சட்டமன்றத் தேர்தலில் பொள்ளாச்சி தொகுதியில் போட்டியிடும் மதச்சர்பற்ற முற்போக்கு கூட்டணியின்  வேட்பாளர் நித்தியானந்த...

கோவை குமரகுரு நிறுவனத்தில் இந்திய விமானப்படையின் IPEV நடமாடும் கண்காட்சி

கோவை குமரகுரு கல்வி நிறுவனங்களில் இந்திய விமானப்படையின் IPEV நடமாடும் கண்காட்சி வாகனம் வருகை தந்தது. 100-க்கும் மேற்பட்ட...

ஏப்ரல் 17: கோவையில் உதயநிதி பிரச்சார அட்டவணை வெளியீடு

2026 தேர்தலை முன்னிட்டு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், ஏப்ரல் 17ஆம் தேதி காலை முதல் இரவு வரை காங்கேயம், உடுமலைப்பேட்டை,...

தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகம் தேர்தலை முன்னிட்டு மாணவர்களுக்கு தொடர் விடுமுறை அறிவிப்பு

Coimbatore மாணவர்கள் வாக்களிக்க ஊக்குவிக்கும் வகையில், தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகம் தேர்தல் நாளுக்கு முன்பும் பின்பும்...

மின் கட்டணக் குறைப்பு உள்பட கோரிக்கைகள் நிறைவேற்றப்படும்: தொழில் துறையினருக்கு அதிமுக வேட்பாளர்கள் உறுதி

கோவையில் தமிழ்நாடு அனைத்து தொழில் முனைவோர் கூட்டமைப்பு ஏற்பாட்டில் புதன்கிழமை நடந்த கலந்துரையாடல் கூட்டத்தில், அதிமுக கூ...