தாராபுரத்தில் வருமானவரித்துறை அலுவலர் வீட்டில் நகை, பணம் கொள்ளை!

தாராபுரத்தில் வருமானவரித்துறை அலுவலர் ராஜதுரை என்பவரின் வீட்டை கள்ளச் சாவி போட்டு திறந்து ரூ 3 லட்சம் மதிப்புள்ள தங்கம் மற்றும் வெள்ளி நகைகள், ரொக்கப்பணம் ஆகியவற்றை மர்ம நபர்கள் கொள்ளையடித்துச் சென்றனர். விடுமுறைக்காக உறவினர் வீட்டுக்கு சென்றிருந்த நிலையில், இந்த கொள்ளை நடந்தது விசாரணையில் தெரியவந்துள்ளது.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அலங்கியம் சாலை மெட்ரோ சிட்டி அருகே உள்ள என். ஆர். எஸ் நகரில் குடும்பத்துடன் வசிப்பவர் ராஜதுரை (வயது35). தாராபுரம் விற்பனை வரித்துறை அலுவலகத்தில் உதவியாளராக வேலை செய்து வருகிறார். இவரது மனைவி தேன்மொழி (வயது32), மகன்கள் மித்திரன் (வயது7), ரண மித்திரன் (வயது4) ஆகிய இரண்டு குழந்தைகளும் உள்ளனர்.

இந்த நிலையில் பண்டிகைக்காக மூன்று நாள் கிடைத்த விடுமுறையில் கடந்த வெள்ளிக்கிழமை அன்று தங்களது உறவினர் வீட்டுக்கு குடும்பத்துடன் சென்றுவிட்டனர்.



நேற்று மாலை அவர்கள் வீட்டுக்கு திரும்பி வந்தபோது கதவு பூட்டப்படாமல் திறந்திருந்தது கண்டு அதிர்ச்சியடைந்தனர்.



உள்ளே சென்று பார்த்தபோது, பீரோவில் இருந்த பொருட்கள் அனைத்தும் கலைத்து எடுக்கப்பட்டு, அதில் வைத்திருந்த 7 சவரன் தங்க நகைகள், வீட்டிலிருந்த வெள்ளி பொருட்கள் மற்றும் பீரோவில் இருந்த ரூ 5ஆயிரம் ரொக்கப்பணம் உள்ளிட்டவைகளை மர்ம நபர்கள் வீடு மற்றும் பீரோவின் கதவை கள்ளச்சாவி போட்டு திறந்து கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது.



இந்த சம்பவம் குறித்து தாராபுரம் காவல் நிலையத்தில் ராஜதுரை புகார் செய்ததையடுத்து, போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். இந்நிலையில், ராஜதுரையின் வீட்டை அடுத்து இருபுறமும் உள்ள முத்துலட்சுமி மற்றும் கிருபாகரன் ஆகியோரது வீடுகளிலும் கொள்ளையர்கள் புகுந்து பொருட்களை தேடி உள்ளனர். ஆனால், இரு வீட்டிலும் யாரும் இன்றி காலியாக இருந்ததால் பொருட்கள் எதுவும் கிடைக்கவில்லை.

கொள்ளை தொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்து வருகின்றனர்.

Newsletter

கோவையில் கல்லூரி மாணவர் அமுதன் அடித்துக் கொலை செய்யப்பட்ட வழக்கில் நீதி கோரி ABVP போராட்டம்

கோவை இந்துஸ்தான் பொறியியல் கல்லூரி மாணவர் அமுதன் சக மாணவர்கள் அடங்கிய கும்பலால் தாக்கப்பட்டு உயிரிழந்த சம்பவத்தை கண்டித்...

பில்லூர் திட்டத்தின் கீழ் குடிநீர் விநியோகம்: மேயரும் ஆணையாளரும் விளாங்குறிச்சியில் ஆய்வு

கோவை மாநகராட்சியின் கிழக்கு மண்டல விளாங்குறிச்சி சந்திப்பில் பில்லூர் திட்டத்தின் கீழ் குடிநீர் விநியோகக் குழாய் இணைப்பு...

கோவையில் போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு மனித சங்கிலி: மாவட்ட ஆட்சியர் பங்கேற்பு

கோவை ரேஸ்கோர்ஸ் பகுதியில் நடைபெற்ற போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு மனித சங்கிலி நிகழ்ச்சியில் பங்கேற்ற மாவட்ட ஆட்சியர...

கோவையில் போலி இறப்பு, வாரிசு சான்றிதழ்கள் மூலம் ரூ.32 கோடி சொத்துக்களை அபகரிக்க முயற்சி: 9 பேர் மீது வழக்குப்பதிவு

கோவை மசக்காளிபாளையத்தில் தனியார் நிறுவன மேலாளருக்குச் சொந்தமான நிலம் உள்ளிட்ட ரூ.32 கோடி மதிப்பிலான சொத்துக்களை போலி இறப...

விநாயகர் சதுர்த்தி: கடந்த ஆண்டு 1.5 லட்சம் சிலைகள் பிரதிஷ்டை; இந்தாண்டு எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் - காடேஸ்வரா சுப்பிரமணியம்

கோவையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய இந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம், கடந்த ஆண்டை விட இந்தாண்டு தம...

கோவை மாநகராட்சி சொத்துவரி வசூலில் ₹38.43 கோடி கூடுதல் வசூல்

கோவை மாநகராட்சி 2026-27ஆம் நிதியாண்டில் சொத்துவரி வசூலில் சென்ற ஆண்டை விட ₹38.43 கோடி கூடுதலாக வசூலித்துள்ளது. நடப்பு கே...