கோவை துடியலூரில் வழிப்பறி கொள்ளையன் கூட்டாளி கைது

கோவை துடியலூரில் பெண்ணிடம் நான்கரை பவுன் தங்கச் செயினை பறித்துச் சென்ற வழக்கில், ஜெகநாதன் என்பவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். தற்போது அவரது கூட்டாளியான சரவணனையும் தனிப்படை போலீசார் கைது செய்தனர்.


கோவை: கோவை மாவட்டம் துடியலூர் காவல் நிலைய பகுதியில் குஷ்பூ என்பவர் வசித்து வருகிறார். கடந்த 21ம் தேதி வீட்டில் கேட்டினை திறக்கும்போது அவரது கழுத்தில் இருந்த நான்கரை பவுன் தங்க செயினை அடையாளம் தெரியாத 2 நபர்கள் திருடி சென்றனர்.

இவ்வழக்கில் பாதிக்கப்பட்ட நபர், துடியலூர் காவல் நிலையத்தில் கொடுத்த புகார் அளித்தார். அதன் பேரில் வழக்கு பதிவு செய்யப்பட்டு, அதில் தொடர்புடைய ஜெகநாதன் என்ற நபரை போலீசார் கைது செய்து திருடிய தங்க நகையை கைப்பற்றி ஜெகநாதனை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.

மேலும், இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட மற்றொரு குற்றவாளியான சரவணனை, விரைந்து கண்டுபிடிக்கும் பொருட்டு, கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரிநாராயணன், உத்தரவின் பேரில், தனிப்படை அமைக்கப்பட்டது. தீவிர தேடுதல் வேட்டையில், தலைமறைவாக இருந்த சரவணனை தனிப்படையிர் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...