காஷ்மீர் குண்டுவீச்சில் பலியான ராணுவ வீரர்கள் - கோவையில் அகில பாரத இந்து மகா சபா புஷ்பாஞ்சலி!

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் பூஞ்ச் மாவட்டத்தில் ராணுவ வாகனத்தின் மீது நடத்தப்பட்ட வெடிகுண்டுத் தாக்குதலில் 5 ராணுவ வீரர்கள் பலியாயினர். அவர்களுக்கு அகில பாரத இந்து மகா சபா சார்பில் கோவை துடியலூரில் புஷ்பாஞ்சலி நிகழ்ச்சி நடத்தப்பட்டது.



கோவை: கடந்த 20ம் தேதி ஜம்மு காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டத்தில் ராணுவ ட்ரக் ஒன்றின் மீது பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 5 ராணுவ வீரர்கள் வீர மரணமடைந்துள்ளனர். படுகாயமடைந்த ஒருவர் சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்த தாக்குதலில் உயிரிழந்த இராணுவ வீரர்களுக்கு அகில பாரத இந்து மகா சபா சார்பில் புஷ்பாஞ்சலி நிகழ்ச்சி நடைபெற்றது. கோவை துடியலூர் பேருந்து நிறுத்தம் பகுதியில் நடைபெற்ற இந்த புஷ்பாஞ்சலி நிகழ்ச்சிக்கு அகில பாரத இந்து மகா சபா தேசிய இளைஞர் அணி ஒருங்கிணைப்பாளரும் தென்மாநில இளைஞர் அணி செயலாளருமான டாக்டர் கே.ஆர். சுபாஷ் தலைமை தாங்கினார்.



இதில் அங்கு அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த உயிரிழந்த இராணுவ வீரர்களின் படங்களுக்கு ஒவ்வொருவராக மலர்கள் தூவி புஷ்பாஞ்சலி செலுத்தினர்.

இந்நிகழ்ச்சியில் மகளிர் அணி தலைவி நிர்மலா மாதாஜி, மாவட்ட தலைவர் மணிகண்டன், மாவட்ட இளைஞர் அணி தலைவர் அனந்தன் , செய்தி தொடர்பாளர் மோகன்ராஜ், மாவட்ட இளைஞர் அணி செயலாளர் பார்த்திபன், மாநகர் மாவட்ட இளைஞர் அணிசெயலாளர் ஆனந்தகுமார், மாவட்ட பொருளாளர் கணேசன், அர்ச்சகர் பிரிவு மாநில செயலாளர் கார்த்தி சுவாமிகள், மாநில, மாவட்ட பொறுப்பாளர்கள் சுரேஷ்குமார், ஜெயகுமார், அருண் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

Newsletter

‘யாத்ரி சுவிதா திவஸ் 2026’ கொண்டாட்டம்: பயணிகள் சேவையில் அர்ப்பணிப்பை வெளிப்படுத்திய கோவை விமான நிலையம்

கோவை சர்வதேச விமான நிலையத்தில் யாத்ரி சுவிதா திவஸ் 2026 முன்னிட்டு கலாச்சார நிகழ்ச்சிகள், சுகாதார முகாம்கள், ரத்ததானம்,...

முத்தண்ணன்குளம் Turf மைதானத்துக்கான தனியாருடனான ஒப்பந்தத்தை மாநகராட்சி ரத்து செய்ய வேண்டும்: DYFI வலியுறுத்தல்

கோவை மாநகராட்சி சார்பில் ரூ.60 லட்சம் செலவில் அமைக்கப்பட்ட முத்தண்ணன்குளம் Turf மைதான தனியார் நிறுவனத்திடம் செய்த ஒப்பந்...

50-க்கும் மேற்பட்ட சிசிடிவி காட்சிகள் ஆய்வு: ரூ.40 ஆயிரம் மீட்டு உரியவரிடம் ஒப்படைத்த ஆர்.எஸ்.புரம் போலீசார்..!

கோவை ஆர்.எஸ்.புரம் பகுதியில் உள்ள கனரா வங்கி அருகே தவறவிட்ட ரூ.40 ஆயிரத்தை, 50-க்கும் மேற்பட்ட சிசிடிவி காட்சிகளை ஆய்வு...

மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக பணியாற்றியவர்களுக்கு மாநில விருதுகள்: விண்ணப்பங்கள் வரவேற்பு

மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக சிறப்பாக பணியாற்றிய தனிநபர்கள், தொண்டு நிறுவனங்கள், மருத்துவர்கள் மற்றும் நிறுவனங்களுக்கு த...

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 23, 24-ல் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம்

கோயம்புத்தூர் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 23, 24 தேதிகளில் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது. 20...

கோவையில் நாளை மின் பராமரிப்பு பணி: பல்வேறு பகுதிகளில் மின் தடை

கோவையில் நாளை (ஜூன் 16) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை போத்தனூர், குப்பேபாளையம், பாப்பநாயக்கன்பாளையம் உட்பட பல்வேறு துண...