காஷ்மீர் குண்டுவீச்சில் பலியான ராணுவ வீரர்கள் - கோவையில் அகில பாரத இந்து மகா சபா புஷ்பாஞ்சலி!

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் பூஞ்ச் மாவட்டத்தில் ராணுவ வாகனத்தின் மீது நடத்தப்பட்ட வெடிகுண்டுத் தாக்குதலில் 5 ராணுவ வீரர்கள் பலியாயினர். அவர்களுக்கு அகில பாரத இந்து மகா சபா சார்பில் கோவை துடியலூரில் புஷ்பாஞ்சலி நிகழ்ச்சி நடத்தப்பட்டது.



கோவை: கடந்த 20ம் தேதி ஜம்மு காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டத்தில் ராணுவ ட்ரக் ஒன்றின் மீது பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 5 ராணுவ வீரர்கள் வீர மரணமடைந்துள்ளனர். படுகாயமடைந்த ஒருவர் சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்த தாக்குதலில் உயிரிழந்த இராணுவ வீரர்களுக்கு அகில பாரத இந்து மகா சபா சார்பில் புஷ்பாஞ்சலி நிகழ்ச்சி நடைபெற்றது. கோவை துடியலூர் பேருந்து நிறுத்தம் பகுதியில் நடைபெற்ற இந்த புஷ்பாஞ்சலி நிகழ்ச்சிக்கு அகில பாரத இந்து மகா சபா தேசிய இளைஞர் அணி ஒருங்கிணைப்பாளரும் தென்மாநில இளைஞர் அணி செயலாளருமான டாக்டர் கே.ஆர். சுபாஷ் தலைமை தாங்கினார்.



இதில் அங்கு அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த உயிரிழந்த இராணுவ வீரர்களின் படங்களுக்கு ஒவ்வொருவராக மலர்கள் தூவி புஷ்பாஞ்சலி செலுத்தினர்.

இந்நிகழ்ச்சியில் மகளிர் அணி தலைவி நிர்மலா மாதாஜி, மாவட்ட தலைவர் மணிகண்டன், மாவட்ட இளைஞர் அணி தலைவர் அனந்தன் , செய்தி தொடர்பாளர் மோகன்ராஜ், மாவட்ட இளைஞர் அணி செயலாளர் பார்த்திபன், மாநகர் மாவட்ட இளைஞர் அணிசெயலாளர் ஆனந்தகுமார், மாவட்ட பொருளாளர் கணேசன், அர்ச்சகர் பிரிவு மாநில செயலாளர் கார்த்தி சுவாமிகள், மாநில, மாவட்ட பொறுப்பாளர்கள் சுரேஷ்குமார், ஜெயகுமார், அருண் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் கோடைகால அட்டவணை அமல்: தினசரி விமான சேவைகள் 32 ஆக அதிகரிப்பு

கோவை சர்வதேச விமான நிலையத்தில் மார்ச் 29 முதல் கோடைகால அட்டவணை அமல்படுத்தப்படுகிறது. தினசரி விமானங்கள் எண்ணிக்கை 28-லிரு...

கோவை விமான நிலையத்தில் கோடைகால அட்டவணை அமல்: தினசரி விமான சேவைகள் 32 ஆக அதிகரிப்பு

கோவை சர்வதேச விமான நிலையத்தில் மார்ச் 29 முதல் கோடைகால அட்டவணை அமல்படுத்தப்படுகிறது. தற்போதுள்ள 28 விமான சேவைகளிலிருந்து...

கோவை தெற்கில் செந்தில்பாலாஜியை 50 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்துவேன் - AIADMK வேட்பாளர் அம்மன் அர்ச்சுனன்

கோவை தெற்கு தொகுதியில் AIADMK சார்பில் போட்டியிடும் அம்மன் அர்ச்சுனன், DMK வேட்பாளர் V செந்தில்பாலாஜியை 50 ஆயிரம் வாக்கு...

ராமலிங்கம் செட்டியார் நினைவுக் கிரிக்கெட் போட்டியில் ஸ்ரீ ராமகிருஷ்ணா மெட்ரிகுலேஷன் பள்ளி அபார வெற்றி

கோவையில் நடைபெற்ற ராமலிங்கம் செட்டியார் நினைவு மாவட்ட கிரிக்கெட் போட்டியில் ஸ்ரீ ராமகிருஷ்ணா மெட்ரிகுலேஷன் பள்ளி மாணவிகள...

Sri Ramakrishna இணை மருத்துவ அறிவியல் கல்லூரியில் 130 மாணவர்களுக்கு பட்டமளிப்பு விழா

Coimbatore: Sri Ramakrishna இணை மருத்துவ அறிவியல் கல்லூரியில் இரண்டாவது பட்டமளிப்பு விழா நடைபெற்றது. 130-க்கும் மேற்பட்ட...

Sri Ramakrishna இணை மருத்துவ அறிவியல் கல்லூரியில் இரண்டாவது பட்டமளிப்பு விழா - 130 மாணவர்களுக்கு பட்டங்கள்

Coimbatore: Sri Ramakrishna இணை மருத்துவ அறிவியல் கல்லூரியில் இரண்டாவது பட்டமளிப்பு விழா நடைபெற்றது. 130-க்கும் மேற்பட்ட...