எங்கள் பகுதிக்கு டாஸ்மாக் வேண்டாம்..! - திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை கிராம மக்கள் முற்றுகை!

திருப்பூர் அருகேயுள்ள அ. குரும்பபாளையம் கிராமத்தில் டாஸ்மாக் கடை அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, அந்த கிராமத்தை சேர்ந்த பெண்கள், குழந்தைகள் என நூற்றுக்கும் மேற்பட்டோர், திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முற்றுகையிட்டனர். அப்போது டாஸ்மாக் கடைக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர்.


திருப்பூர்: டாஸ்மாக திறக்க எதிர்ப்பு தெரிவித்து கிராம மக்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.

திருப்பூர் மாவட்டம் அவினாசி ஊராட்சிக்குட்பட்ட அ. குரும்பபாளையம் கிராமத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதியை சேர்ந்த பெரும்பாலான மக்கள் விவசாய தொழிலில் ஈடுபட்டு வருவதாகவும், விவசாயத் தொழிலை நம்பி உழவர் உற்பத்தியாளர் குழு என்ற விவசாயம் சார்ந்த குழுவை ஆரம்பித்து மகளிர் சார்பில் நடத்தப்பட்டு வருகிறது.



இதனிடையே இப்பகுதி மக்களுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் வகையில் டாஸ்மாக் கடை மற்றும் மனமகிழ் மன்றம் அமைப்பதற்கான நடவடிக்கையில் மாவட்ட நிர்வாகம் ஈடுபட்டு வருவதாக குற்றம் சாட்டிய அப்பகுதி பொதுமக்கள், இக்கிராமத்தைச் சுற்றி ஐந்திற்கும் மேற்பட்ட அரசு பள்ளிகள் இயங்கி வருவதாகவும், நூற்றுக்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் கலவி பயின்று வரும் நிலையில டாஸ்மாக் கடை மற்றும் மனமகிழ் மன்றம் அமைந்தால் இப்பகுதியை சேர்ந்த பள்ளி மாணவ மாணவிகள் மற்றும் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத சூழ்நிலை ஏற்படும்.

அதேபோல் திருட்டு வழிப்பறி போன்ற குற்ற சம்பவங்களும் நிகழ வாய்ப்புள்ளதாகவும், ஓய்வு பெற்ற அரசு தலைமை ஆசிரியரின் இடத்தில் இந்த டாஸ்மாக் கடை மற்றும் மனமகிழ் மன்றம் அமைய இருப்பதாகவும், இதற்கு மாவட்ட நிர்வாகம் அனுமதி வழங்கக் கூடாது என்றும், அதையும் மீறி அனுமதி கொடுக்கும் பட்சத்தில், இப்பகுதி சேர்ந்த பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட போவதாகவும் தெரிவித்தனர்.

Newsletter

கோவையில் தொடங்கிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மக்கள் சந்திப்பு நடைப்பயணம்

மத்திய அரசின் மக்கள் விரோதக் கொள்கைகளை எதிர்த்தும், தொழிலாளர்களுக்கு எதிராக கொண்டு வரப்பட்டுள்ள தொழிலாளர் சட்டங்களை திரு...

தங்க நகை வழிப்பறி வழக்கு: குற்றவாளிக்கு 7 ஆண்டு சிறை; ரூ.5,000 அபராதம் - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கடந்த 2020 ஆம் ஆண்டு கோவையில் 100 கிராம் தங்க நகையை கத்தி முனையில் வழிப்பறி செய்த வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்ட இளைஞர...

கிணத்துக்கடவு அருகே வாலிபர் கொடூரக் கொலை

கோவை மாவட்டம் பொள்ளாச்சியை அடுத்த சிக்கலாம்பாளையம் பகுதியைச் சேர்ந்த அஸ்வின் (22) என்ற வாலிபாரின் வீட்டிற்குள் நள்ளிரவில...

அரசூர் துணை மின் நிலையத்தில் நாளை (07.08.2026) மின்தடை

கோவையில் அரசூர் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் செல்...

கதிர்நாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (07.08.2026) மின்தடை

கோவை கதிர்நாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் காலை 9 முதல் மாலை 5 மணி வரை நடைபெறும்....

பேருந்தில் கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை; கோவையில் காவலர் கைது

பொள்ளாச்சியில் இருந்து கோவை வந்த பேருந்தில் பயணித்த கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக, போத்தனூர் காவல் நிலைய கு...