வீரபாண்டி பிரிவு நாகலிங்கேஸ்வரி அம்மன் கோயில் கும்பாபிஷேக விழா - ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம்!

கோவை பெரியநாயக்கன்பாளையம் அடுத்த வீரபாண்டி பிரிவு பகுதியில் உள்ள நாகலிங்கேஸ்வரி அம்மன் கோவிலில் கும்பாபிஷேக விழா கடந்த 21 ஆம் தேதி துவங்கிய நிலையில், முக்கிய நிகழ்வான கும்பாபிஷேகம் இன்று நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான மக்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்.



கோவை: பெரியநாயக்கன்பாளையம் அடுத்த வீரபாண்டி பிரிவு பகுதியில் உள்ள நாகலிங்கேஸ்வரி அம்மன் கோவில் கும்பாபிஷேக விழா கோலாகலமாக நடைபெற்றது.

கோவை பெரியநாயக்கன்பாளையம் அடுத்த வீரபாண்டி பிரிவு அருகேயுள்ள பயணியர் நகர் பகுதியில் அருள்மிகு நாகலிங்கேஸ்வரி அம்மன் திருக்கோயில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் கும்பாபிஷேக விழாவானது கடந்த 21ம் தேதி காலை மங்கள இசையுடன் தொடங்கியது.

இதில் விக்னேஸ்வர பூஜை, மஹாகணபதி ஹோமம், லட்சுமி, துர்கா, சரஸ்வதி ஹோமம், நவகிரக ஹோமம், கோமாதா பூஜைகள் நடைபெற்றன. அடுத்த நாள் ஜோதிபுரம் அருள்மிகு ஐயப்பசுவாமி ஆலயத்திலிருந்து, தீர்த்த குடங்கள் மற்றும் முளப்பாரி எடுத்துக்கொண்டு பெண்கள், குழந்தைகள் ஊர்வலமாக வந்தனர்.



தொடர்ந்து, அன்று மாலை யாக சாலைகள் அமைக்கப்பட்டு முதற்கால யாக வேள்வி பூஜைகள் நடைபெற்றது. மேலும் ஞாயிற்று கிழமை 2வது கால யாக வேள்வி பூஜைகளும் அன்று மாலை 3ஆம் கால யாக வேள்வி பூஜைகள் சிறப்பாக நடைபெற்றது.

இந்நிலையில், இன்று காலை 4ம் கால வேள்வி பூஜைகள் நடைபெற்றதை தொடர்ந்து விழாவின் முக்கிய நிகழ்ச்சியான கும்பாபிஷேக விழா தொடங்கியது.



இதில் கோவை ஸ்ரீ மத் தம்ராஜா அருள்பீடம் கிருஷ்ணமூர்த்தி சுவாமிகள், கோவை செல்வபுரம் சிவானந்தா தவக்குடில் ஸ்வயம் பிரகாஷ் ஆனந்தா சுவாமிகள், ஸ்ரீ ராஜ ராஜேஸ்வரி வேள்விக்குழு சர்வசாதகம் மணிகண்டன், கோவில் பூசாரி கருப்புசாமி ஆகியோர் முன்னிலையில் யாக சாலைகளில் இருந்து தீர்த்த குடங்கள் எடுத்து கோவிலை சுற்றி வந்து கோவில் விமானத்தில் தீர்த்த குடங்களில் உள்ள தீர்த்தங்கள் ஊற்றப்பட்டு கும்பாபிஷேக விழா நடைபெற்றது.



அப்போது பக்தர்கள் ஒம் சக்தி, பரா சக்தி என்று கோசங்களை எழுப்பினர்.



தொடர்ந்து அம்மன் சன்னதியில் அம்மனுக்கு தீர்த்தங்கள் ஊற்றப்பட்டு சிறப்பு அலங்கார பூஜைகள் நடைபெற்றன.



அதனை தொடர்ந்து அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.

Newsletter

கோவையில் கல்லூரி மாணவர் அமுதன் அடித்துக் கொலை செய்யப்பட்ட வழக்கில் நீதி கோரி ABVP போராட்டம்

கோவை இந்துஸ்தான் பொறியியல் கல்லூரி மாணவர் அமுதன் சக மாணவர்கள் அடங்கிய கும்பலால் தாக்கப்பட்டு உயிரிழந்த சம்பவத்தை கண்டித்...

பில்லூர் திட்டத்தின் கீழ் குடிநீர் விநியோகம்: மேயரும் ஆணையாளரும் விளாங்குறிச்சியில் ஆய்வு

கோவை மாநகராட்சியின் கிழக்கு மண்டல விளாங்குறிச்சி சந்திப்பில் பில்லூர் திட்டத்தின் கீழ் குடிநீர் விநியோகக் குழாய் இணைப்பு...

கோவையில் போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு மனித சங்கிலி: மாவட்ட ஆட்சியர் பங்கேற்பு

கோவை ரேஸ்கோர்ஸ் பகுதியில் நடைபெற்ற போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு மனித சங்கிலி நிகழ்ச்சியில் பங்கேற்ற மாவட்ட ஆட்சியர...

கோவையில் போலி இறப்பு, வாரிசு சான்றிதழ்கள் மூலம் ரூ.32 கோடி சொத்துக்களை அபகரிக்க முயற்சி: 9 பேர் மீது வழக்குப்பதிவு

கோவை மசக்காளிபாளையத்தில் தனியார் நிறுவன மேலாளருக்குச் சொந்தமான நிலம் உள்ளிட்ட ரூ.32 கோடி மதிப்பிலான சொத்துக்களை போலி இறப...

விநாயகர் சதுர்த்தி: கடந்த ஆண்டு 1.5 லட்சம் சிலைகள் பிரதிஷ்டை; இந்தாண்டு எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் - காடேஸ்வரா சுப்பிரமணியம்

கோவையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய இந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம், கடந்த ஆண்டை விட இந்தாண்டு தம...

கோவை மாநகராட்சி சொத்துவரி வசூலில் ₹38.43 கோடி கூடுதல் வசூல்

கோவை மாநகராட்சி 2026-27ஆம் நிதியாண்டில் சொத்துவரி வசூலில் சென்ற ஆண்டை விட ₹38.43 கோடி கூடுதலாக வசூலித்துள்ளது. நடப்பு கே...