உடுமலை குட்டை திடல் பகுதியில் குப்பைகள் தேக்கத்தால் சுகாதார சீர்கேடு

உடுமலை மாரியம்மன் கோவில் திருவிழா முடிவடைந்து ஒருவாரக் காலமாகியும், குட்டைத்திடல் பகுதியில் தேங்கியுள்ள குப்பைகளை அல்லாமல் இருப்பதால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளதாகவும், அதிகாரிகள் விரைந்து குப்பைகளை அகற்ற வேண்டும் என பொதுமக்களும், சமூக ஆர்வலர்களும் கோரிக்கை வைத்துள்ளர்.


திருப்பூர்: குட்டைத்திடல் பகுதியில் தேங்கியுள்ள குப்பைகளை அகற்றாததால், சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளதாக பொதுமக்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

திருப்பூர் மாவட்டம் உடுமலை நகரில் உள்ள குட்டைத்திடலை சுற்றி குடியிருப்புகள், வணிக வளாகங்கள், காவல் நிலையம், கோயில்கள் உள்ளன. காலை, மாலை நேரங்களில் பொதுமக்கள் வாக்கிங் செல்லவும், இளைஞர்கள் விளையாடவும் வருகின்றனர்.



இந்நிலையில் மாரியம்மன் திருவிழா முடிந்து ஒரு வாரமாகியும் குப்பைகள் அள்ளப்படாமல் மலைபோல் குவிந்து கிடக்கின்றன. நூலகத்தின் பின்னால் உள்ள சுற்றுச்சுவர் வரை தாண்டி குப்பை குவிந்துள்ளது. ஆனால், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கண்டுகொள்ளவில்லை. இதனால் அப்பகுதியில் துர்நாற்றம் வீசி, சுகாதார கேடு ஏற்பட்டுள்ளது தெரியவந்தது.



இது பற்றி விசாரித்த போது, நகராட்சி நிர்வாகத்துக்கும், வருவாய்த்துறைக்கும் ஏற்பட்டுள்ள மோதல் காரணமாகவே குப்பைகள் அள்ளப்படவில்லை என கூறப்படுகிறது. அதாவது திருவிழாவுக்கு குட்டைத்திடல் ஏலம் மூலம் கிடைக்கும் தொங்க வருவாய்துறைக்குச் செல்கிறது. இந்த ஆண்டு ரூ.60 லட்சத்துக்கும் மேல் ஏலம் போனது.

எனவே வருவாய் ஈட்டும் அவர்களே குப்பை களை அகற்றி சுத்தம் செய்ய வேண்டும் என நகராட்சி நிர்வாகம் கருதுகிறது.ஆனால், வருவாய்துறையினரோ குப்பைகளை அகற்றும் பணி எங்களுடையது அல்ல, நகராட்சி நிர்வாகம் தான் குப்பைகளை அகற்ற வேண்டும் என்றனர்.

இருதுறைகளின் ஈகோ காரணமாக, உடுமலை நகரின் மையப்பகுதி முகம் சுழிக்கும் வகையில் காட்சி அளிக்கிறது. உடனடியாக இப்பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும் என பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Newsletter

ஶ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனையில் இருதயவியல் அல்ட்ராசவுண்ட் கருத்தரங்கு நடைபெறுகிறது

ஶ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை மற்றும் இணை அறிவியல் கல்லூரி இணைந்து "ECHO ESSENTIALS 2026" என்ற தலைப்பில் இரு நாள் கருத்தர...

குழந்தைகளைத் தூண்டிவிட்டு ஓட்டு அரசியல் செய்ததாக நடிகர் விஜய் மீது புகார்

தேர்தல் ஆதாயத்திற்காக குழந்தைகளின் மனநிலையைத் தவறாகப் பயன்படுத்தியதாக தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் மீது Coimbatore...

தமிழக சட்டமன்றத் தேர்தல்: கோவை மாவட்டத்தில் 84.67 சதவீதம் வாக்குப்பதிவு - தொகுதி வாரியான முழு விவரங்கள்

கோவை மாவட்டத்தில் நேற்று நடைபெற்ற தமிழக சட்டமன்றத் தேர்தலில் 84.67 சதவீதம் வாக்குப்பதிவு பதிவானது. மொத்தம் 27 லட்சத்திற்...

கோவை ஜிடி மேம்பாலத்தில் AI கேமரா பொருத்தும் பணி: இரவு நேர போக்குவரத்துக்கு இன்றும் நாளையும் தடை

கோவை ஜிடி மேம்பாலத்தில் அதிவேக வாகனங்களை கண்காணிக்க AI கேமரா பொருத்தும் பணி காரணமாக இன்று மற்றும் நாளை இரவு 10 மணி முதல்...

கோவையில் பட்டபகலில் கார் மீது கல்வீச்சு தாக்குதல் - சிசிடிவி காட்சி வெளியானது

கோவை ஆவாரம்பாளையம் பகுதியில் வீட்டின் முன்பு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காரின் மீது ஹெல்மெட் அணிந்த நபர் பட்டபகலில் கல்...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் காளான் மற்றும் முருங்கை மதிப்பூட்டு பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஏப்ரல் 28, 29 ஆகிய தேதிகளில் காளான் மற்றும் முருங்கையிலிருந்து மதிப்பூட்டப்ப...