எம்.ஜி.ஆர் மார்க்கெட்டில் அடிப்படைவசதிகள் செய்க..! - கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு

கோவை எம்.ஜி.ஆர். மார்க்கெட்டில் அடிப்படை வசதிகள் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மாவட்ட ஆட்சியரிடம் சுமை தூக்குவோர் நலச் சங்கத்தினர் மனு அளித்தார்.


கோவை: கோவை மேட்டுப்பாளையம் சாலையில் எம்ஜிஆர் மார்க்கெட் செயல்பட்டு வருகிறது.

இந்நிலையில், இங்கு அடிப்படை வசதிகள் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி எம்ஜிஆர் மார்க்கெட் சுமைதூக்குவோர் நல சங்கத்தின் தலைவர் ரமேஷ் தலைமையில் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டது.

அதில், எம்ஜிஆர் மொத்த காய்கனி மண்டியில் சில்லறை விற்பனைக்கு தடை விதிக்க வேண்டும், குடிநீர் வசதி செய்து தர வேண்டும், மழை நீர் வடிகாலை அவ்வப்போது சீரமைத்து கழிவுநீர் தேங்காத வகையில் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும், கான்கிரீட் சாலைகள் அமைத்து தர வேண்டும், உணவு அருந்துவதற்கும் உடை மாற்றுவதற்கும் பொருட்களை பத்திரமாக பாதுகாத்திடவும் காலியிடம் ஒதுக்கி தர வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மேலும், ஆட்சியரிடம் அளிக்கப்பட்ட இந்த கோரிக்கை மனு, கோவை மாநகராட்சி ஆணையாளர், மாநகராட்சி துணை ஆணையாளர், மாநகராட்சி மேற்கு மண்டல உதவி ஆணையாளர் உள்ளிட்டோருக்கும் அனுப்பப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...