கோவை அருகே போதைப்பொருள் விற்க முயற்சி - திருப்பூர் இளைஞர் கைது

கோவை ஆலாந்துறை அருகே இரு சக்கர வாகனத்தில் கஞ்சாவை கடத்திச் சென்ற திருப்பூரை சேர்ந்த பிரசாந்த் எனும் இளைஞரை போலீசார் கைது செய்தனர். இளைஞர்களை குறிவைத்து அவர் கஞ்சா விற்பனையில் ஈடுபட முயன்றது போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.


கோவை: கோவை மாவட்டம் முழுவதும் கஞ்சா மற்றும் குட்கா பொருட்கள் விற்பனை, கடத்தலை தடுக்க தனிப்படை அமைத்து போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், ஆலாந்துறை தனிப்படை போலீசார் காளியமங்கலம் பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, அங்கே இரு சக்கர வாகனத்தில் வந்த இளைஞர் ஒருவரை நிறுத்தி அவரது வாகனத்தை போலீசார் சோதனையிட்டனர். அப்போது, உள்ளே சிறு சிறு பொட்டலங்களாக கஞ்சா இருந்தது தெரியவந்தது.



இதையடுத்து, அவரை காவல் நிலையம் அழைத்துச் சென்ற போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.அதில்,பிடிபட்ட நபர் திருப்பூர் மாவட்டத்தைசேர்ந்த நடராஜ் என்பவரின் மகன் பிரசாந்த் (வயது24) என்பதும், அவர் இளைஞர்களை குறிவைத்து ஆலாந்துறை சுற்றுவட்டார பகுதிகளில் கஞ்சா விற்பனையில் ஈடுபட முயன்றதும் தெரியவந்தது.

இதையடுத்து, பிரசாந்தை கைது செய்த போலீசார் அவரிடம் இருந்த 1.150 கிலோ கஞ்சாவையும் பறிமுதல் செய்தனர். கைதான பிரசாந்தை போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...