பல்லடம் அருகே ஸ்கேட்டிங் மைதானம் திறப்பு - மாணவர்கள் உற்சாகம்!

திருப்பூர் மாவட்டத்திலேயே முதல் முறையாக பல்லடம் அருகே ஊஞ்சபாளையத்தில் "வெலாசிட்டி ஸ்கேட்டிங் காம்ப்ளக்ஸ்" என்ற சர்வதேச தரத்தில் அமைக்கப்பட்டுள்ள ஸ்கேட்டிங் விளையாட்டு மைதானத்தை மங்கலம் மற்றும் பல்லடம் பகுதி காவல்துறை அதிகாரிகள் பங்கேற்று திறந்து வைத்தனர்.


திருப்பூர்: பல்லடம் அருகே சர்வதேச தரத்தில் அமைக்கப்பட்டுள்ள ஸ்கேட்டிங் விளையாட்டு மைதானம் இன்று திறக்கப்பட்டது.

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே ஊஞ்சபாளையத்தில் "வெலாசிட்டி ஸ்கேட்டிங் காம்ப்ளக்ஸ்" என்ற சர்வதேச தரத்தில் சுமார் இரண்டு ஏக்கர் பரப்பளவில் அமைக்கப்பட்டுள்ள ஸ்கேட்டிங் விளையாட்டு மைதானம் இன்று திறக்கப்பட்டது.



மங்கலம் காவல் ஆய்வாளர் கோபாலகிருஷ்ணன், பல்லடம் காவல் துணை ஆய்வாளர் ராஜன், திருப்பூர் மாவட்ட ஸ்கேட்டிங் சங்கத்தின் செயலாளர் தங்கதுரை ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு சர்வதேச தரத்தில் அமைக்கப்பட்டுள்ள ஸ்கேட்டிங் மைதானத்தை ரிப்பன் வெட்டி திறந்து வைத்தனர்.



மேலும் ஸ்கேட்டிங் பயிற்சி பெற்று வரும் மாணவர்களின் ஸ்கேட்டிங் அணி வகுப்பினை துணை காவல் ஆய்வாளர் ராஜன் கொடியசைத்து துவக்கி வைத்தார்.



நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்கள் புதிதாக திறக்கப்பட்ட ஸ்கேட்டிங் மைதானத்தில் கால்களில் சக்கரத்தை கட்டிக்கொண்டு சுற்றி வந்தனர்.



இது குறித்து வெலாசிட்டி ஸ்கேட்டிங் காம்ப்ளக்ஸ் இன் நிறுவனர் காமராஜ் பேசியதாவது, திருப்பூர் மாவட்டத்தில் முதல் முறையாக பல்லடம் அருகே ஊஞ்ச பாளையத்தில் சர்வதேச தரத்தில் இந்த ஸ்கேட்டிங் மைதானம் திறக்கப்பட்டு உள்ளது.

இதுபோன்று திருப்பூர் மாவட்டம் முழுக்க மாணவர்களை ஊக்கப்படுத்தும் வகையில் ஸ்கேட்டிங் பயிற்சி மைதானங்கள் திறக்கப்பட வேண்டும். மாநில அளவிலான போட்டிகளிலும், தேசிய அளவிலான போட்டிகளிலும் பல்லடம் பகுதிகளில் இருந்து ஏராளமான மாணவர்கள் ஸ்கேட்டிங் விளையாட்டில் பல்வேறு சாதனைகளை புரிய இந்த மைதானம் உறுதுணையாக இருக்கும்.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Newsletter

அவிநாசி: ‘ரோடு ஷோ’ மூலம் எல்.முருகனுக்கு ஆதரவு திரட்டிய மத்திய பிரதேச முதல்வர் மோகன் யாதவ்..!

திருப்பூர் மாவட்டம் அவிநாசி தொகுதியில் பாஜக வேட்பாளர் எல்.முருகனை ஆதரித்து மத்திய பிரதேச முதலமைச்சர் மோகன் யாதவ், ரோடு ஷ...

கிணத்துக்கடவில் செந்தில் வேல் பரப்புரை - சபரி கார்த்திகேயனுக்கு வாக்கு சேகரித்தார்..!

கிணத்துக்கடவு தொகுதியில் திமுக வேட்பாளர் கே.வி.கே.எஸ். சபரி கார்த்திகேயனை ஆதரித்து பத்திரிக்கையாளரும் தமிழ்கேள்வி யூடியூ...

கோவை மக்கள் ஏப்ரல் 23ஆம் தேதி செந்தில் பாலாஜியின் முகத்திரையை கிழிப்பார்கள்: அண்ணாமலை

கோவை வடக்கு தொகுதியில் பாஜக வேட்பாளர் வானதி சீனிவாசனுக்கு ஆதரவாக இறுதிக்கட்ட பிரச்சாரத்தில் ஈடுபட்ட அண்ணாமலை, திமுக மீது...

வால்பாறை வளர்ச்சிக்கு அதிமுக வாக்குறுதி: வேட்பாளர் லட்சுமண சிங் பல்வேறு அறிவிப்புகள்..!

வால்பாறை சட்டமன்றத் தொகுதி அதிமுக வேட்பாளர் லட்சுமண சிங், தேர்தலை முன்னிட்டு சுற்றுலா, விவசாயம், தொழில், கல்வி மற்றும் அ...

மூலப்பொருள் விலை உயர்வு: அவசர கால கடன் உதவி வழங்க ரிசர்வ் வங்கி அதிகாரிகளிடம் தொழில்துறையினர் வலியுறுத்தல்

மூலப்பொருட்கள் விலை உயர்வால் ஏற்பட்ட நெருக்கடியை எதிர்கொள்ள கோவையில் நடந்த கலந்துரையாடல் கூட்டத்தில் தொழில்துறையினர் ரிச...

கிணத்துக்கடவில் இறுதிகட்ட பிரச்சாரம்: வீடு வீடாக வாக்கு சேகரித்த திமுக வேட்பாளர் KVKS சபரி கார்த்திகேயன்

கிணத்துக்கடவு தொகுதியில் திமுக வேட்பாளர் KVKS சபரி கார்த்திகேயன், செட்டிபாளையம் பேரூராட்சிக்குட்பட்ட பகுதிகளில் வீடு வீட...