கோவை மாநகரில் அம்பேத்கரின் முழு உருவ சிலை அமைத்திட வலியுறுத்தி பிரச்சார பயணம்!

கோவை மாநகரில் அம்பேத்கரின் முழு உருவச் சிலையை அமைக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சமூக நீதிக்கான கூட்டியக்கம் சார்பில் கோவையில் ஒரு நாள் பிரச்சார பயணம் நடைபெற்றது. இதனை தந்தை பெரியார் திராவிடர் கழக பொதுச்செயலாளர் கு.ராமகிருட்டிணன் துவக்கி வைத்தார்.


கோவை: கோவையில் அம்பேத்கரின் முழு உருவச் சிலையை அமைக்க வலியுறுத்தி சமூக நீதிக்கான கூட்டியக்கம் சார்பில் ஒரு நாள் பிரச்சார பயணம் நடைபெற்றது.

கோவை காந்திபுரம் தந்தை பெரியார் திராவிட கழக அலுவலகம் முன்பு துவங்கப்பட்ட இந்த பிரச்சார பயணத்தை தந்தை பெரியார் திராவிடர் கழக பொதுச்செயலாளர் கு.ராமகிருட்டிணன் துவக்கி வைத்தார்.



இந்தப் பிரச்சார பயணத்தில் கோவை மாமன்ற தீர்மானத்தின்படி செஞ்சிலுவை சங்கம் அருகில் டாக்டர் அம்பேத்கரின் முழு உருவசிலை அமைத்திட வேண்டும், அனைத்து சமூக மக்களுக்கும் இட ஒதுக்கீடு வழங்க வேண்டும்.

எஸ்.சி., எஸ்.டி. மக்களுக்கு நகர்ப்புற உள்ளாட்சி மன்றத் தேர்தலில் இட ஒதுக்கீடு வழங்க தனி சட்டம் கொண்டு வர வேண்டும். பஞ்சமி நிலங்களை மீட்டெடுக்க தனி சிறப்பு சட்டம் இயற்றிட வேண்டும். துப்புரவு தூய்மை பணியாளர்கள் அனைவரையும் நிரந்தரம் செய்து அரசு நிர்ணயிக்க கூடிய கூலியை கொடுத்திட வேண்டும்.

ஆணவ படுகொலைகளை தடுத்திட தனி அவசர சட்டம் கொண்டு வர வேண்டும். பொது தண்ணீர் தொட்டி பொது சுடுகாடு சமத்துவபுரம் என்ற நிலையினை உருவாக்கிட வேண்டும். அரசு பணியாளர் காலி இடங்களை உடனடியாக பூர்த்தி செய்ய வேண்டும்.

உண்ண உணவு, உடுக்க உடை, இருக்க இருப்பிடம் அனைவருக்கும் கிடைத்திட ஒன்றிய அரசும் மாநில அரசும் உறுதியளித்திட வேண்டும். தமிழகம் எங்கும் இருக்கும் அம்பேத்கர் சிலையை சுற்றியுள்ள இரும்பு வேலிகளை அகற்றி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்பட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தபட்டது.

இந்த பிரச்சார பயணத்தை விடுதலை சிறுத்தைகள் கட்சியின் கோவை மண்டல அமைப்புச் செயலாளர் சு.சி.கலையரசன் ஒருங்கிணைத்தார். இதில் சி.பி.எம், ஆதித்தமிழர் பேரவை, திராவிட தமிழர் கட்சி, தமிழ் புலிகள் கட்சி, உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளை சேர்ந்தவர்கள் பங்கேற்கின்றனர்.

கோவை மாநகரில் இன்று மாலை வரை இந்த பிரச்சார பயணம் வெவ்வேறு இடங்களில் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.

Newsletter

ஸ்ரீ ராமகிருஷ்ணா பாலிடெக்னிக் கல்லூரி–துடியலூர் காவல்துறை சார்பில் போதை ஒழிப்பு பேரணி

ஸ்ரீ ராமகிருஷ்ணா பாலிடெக்னிக் கல்லூரி போதைப் பொருள் தடுப்பு குழு மாணவர்கள், நாட்டு நலப்பணித் திட்ட மாணவர்கள், தேசிய மாணவ...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: போக்சோ நீதிமன்றத்தில் இன்ஸ்பெக்டர் சாட்சியம்

சூலூரில் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்ட வழக்கில், கோவை போக்சோ நீதிமன்றத்தில் விசாரணை தீவிரமடைந...

40 ஆண்டு கால TNHB நில கையகப்படுத்தல் பிரச்சனை: விவசாயிகள் சங்கம் குறைதீர்ப்பு நாளில் மனு

தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தின் நில ஆர்ஜித நடவடிக்கைகளால் 40 ஆண்டுகளாக பாதிக்கப்பட்டு வரும் சிறு, குறு விவசாயிகள் மற்ற...

ஆசிய மவுண்டன் பைக் சாம்பியன்ஷிப்: தமிழ்நாடு அணிக்கு பெருமை சேர்த்த கோவை வீரர்கள்..!

உஸ்பெகிஸ்தான் தாஷ்கண்ட் நகரில் நடைபெற்ற ஆசிய மவுண்டன் பைக் சாம்பியன்ஷிப் 2026 போட்டியில் தமிழ்நாடு அணி வெண்கலப் பதக்கம்...

கோவை குறிச்சி துணை மின் நிலையத்தில் இன்று மின்தடை

கோவை குறிச்சி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக இன்று காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை சிட்கோ, சு...

இரும்பொரை துணை மின்நிலையத்தில் இன்று மின்தடை

இரும்பொரை துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக இன்று காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை இரும்பொரை, பெத்...