கோவை விமான நிலைய விரிவாக்கத்திற்கு நிலத்தை குத்தகைக்கு மட்டுமே விடப்படும்..! - நிதியமைச்சர் பி.டி.ஆர் தகவல்!

கோவை விமான நிலைய விரிவாக்கத்திற்கு தமிழக அரசு வழங்கும் நிலத்தை இந்திய விமான நிலைய ஆணையம்/யூனியன் அரசாங்கத்திற்கு குத்தகைக்கு மட்டுமே விடப்படும் என்றும், அதன் உரிமையை மத்திய அரசுக்கு முழுமையாக வழங்கப்படாது எனவும் நிதியமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார்.


கோவை: கோவை விமான நிலைய விரிவாக்கத்திற்கு நிலத்தை அதன் உரிமையை முழுவதுமாக மத்திய அரசுக்கு மாற்றப்படாது என்று நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார்.

கோவை விமான நிலைய விரிவாக்கம் குறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் பதிவிட்டுள்ளார். அதில், தமிழ்நாடு அரசு இந்திய விமான நிலைய ஆணையம் மற்றும் மத்திய அரசாங்கத்திற்கு தேவையான நிலத்தை குத்தகைக்கு மட்டுமே வழங்கும். முன்பு போல உரிமையை மத்திய அரசுக்கு மாற்றாது.

விமான நிலையம் இந்திய விமான நிலைய ஆணையத்தால் இயக்கப்படும் வரை குத்தகைத் தொகை குறைந்தபட்ச டோக்கன் மதிப்பில் வைக்கப்படும் என்ற ஷரத்து குத்தகையில் அடங்கும்.

விமான நிலையத்தை தனியாரிடம் ஒப்படைக்க மத்திய அரசு முடிவெடுத்தால், தமிழகத்திற்கான குத்தகை தொகையானது நிலத்தின் அப்போதைய சந்தை மதிப்பைப் பிரதிபலிக்கும், அல்லது விமான நிலையத்தில் அப்போதைய சமமான பங்குகளை தமிழக அரசுக்கு வழங்க வேண்டும்.

மாநில அரசின் அனுமதியின்றி (டோக்கன் மதிப்பு மற்றும் குத்தகைக் கட்டணத்தில்) நிலத்தை ஒரு தனியார் ஆபரேட்டருக்கு (சலுகை குத்தகை வாடகையில்) துணை குத்தகைக்கு வழங்க அவர்களுக்கு உரிமை இருக்க வேண்டும் என்ற இந்திய விமான நிலைய ஆணையத்தின் பரிந்துரையை தமிழ்நாடு நிராகரித்து விட்டது.

இவ்வாறு நிதியமைச்சர் பிடிஆர் தெரிவித்துள்ளார்.

Newsletter

கோவையில் கல்லூரி மாணவர் அமுதன் அடித்துக் கொலை செய்யப்பட்ட வழக்கில் நீதி கோரி ABVP போராட்டம்

கோவை இந்துஸ்தான் பொறியியல் கல்லூரி மாணவர் அமுதன் சக மாணவர்கள் அடங்கிய கும்பலால் தாக்கப்பட்டு உயிரிழந்த சம்பவத்தை கண்டித்...

பில்லூர் திட்டத்தின் கீழ் குடிநீர் விநியோகம்: மேயரும் ஆணையாளரும் விளாங்குறிச்சியில் ஆய்வு

கோவை மாநகராட்சியின் கிழக்கு மண்டல விளாங்குறிச்சி சந்திப்பில் பில்லூர் திட்டத்தின் கீழ் குடிநீர் விநியோகக் குழாய் இணைப்பு...

கோவையில் போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு மனித சங்கிலி: மாவட்ட ஆட்சியர் பங்கேற்பு

கோவை ரேஸ்கோர்ஸ் பகுதியில் நடைபெற்ற போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு மனித சங்கிலி நிகழ்ச்சியில் பங்கேற்ற மாவட்ட ஆட்சியர...

கோவையில் போலி இறப்பு, வாரிசு சான்றிதழ்கள் மூலம் ரூ.32 கோடி சொத்துக்களை அபகரிக்க முயற்சி: 9 பேர் மீது வழக்குப்பதிவு

கோவை மசக்காளிபாளையத்தில் தனியார் நிறுவன மேலாளருக்குச் சொந்தமான நிலம் உள்ளிட்ட ரூ.32 கோடி மதிப்பிலான சொத்துக்களை போலி இறப...

விநாயகர் சதுர்த்தி: கடந்த ஆண்டு 1.5 லட்சம் சிலைகள் பிரதிஷ்டை; இந்தாண்டு எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் - காடேஸ்வரா சுப்பிரமணியம்

கோவையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய இந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம், கடந்த ஆண்டை விட இந்தாண்டு தம...

கோவை மாநகராட்சி சொத்துவரி வசூலில் ₹38.43 கோடி கூடுதல் வசூல்

கோவை மாநகராட்சி 2026-27ஆம் நிதியாண்டில் சொத்துவரி வசூலில் சென்ற ஆண்டை விட ₹38.43 கோடி கூடுதலாக வசூலித்துள்ளது. நடப்பு கே...