கோடை காலத்தை முன்னிட்டு உடுமலை வழியாக கூடுதல் ரயில்கள் இயக்க வேண்டும் - பொதுமக்கள் கோரிக்கை!

கோவை - திண்டுக்கல் வழித்தடத்தில் உள்ள உடுமலை ரயில் நிலையம் வழியாக கூடுதல் ரயில்களை இயக்க, தெற்கு ரயில்வே அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


திருப்பூர்: உடுமலை வழியாக கூடுதல் ரயில்களை இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கோவை - திண்டுக்கல் வழித்தடத்தில் உடுமலை ரயில் நிலையம் அமைந்துள்ளது. இந்த வழித்தடம். அகலபாதையாக மாற்றப்பட்ட பின், தற்போது குறைந்த அளவிலான ரயில்கள் மட்டும் இயக்கப்பட்டு வருகின்றன.

கோவை பாலக்காடு மதுரை, திருச்செந்தூர், பாலக்காடு சென்னை, திருவனந்தபுரம், மதுரை செல்லும் ரயில்கள் மட்டும் தற்போது இயக்கப்படுகின்றன. உடுமலை பகுதியில், தென் மாவட்டங்களை சேர்ந்த ஏராளமானோர் தொழிற்சாலை, நிறுவனங்களில் பணிபுரிந்து வருகின்றனர்.

இவர்கள் தங்களது சொந்த ஊர்களுக்கு ரயில்களில் செல்லவே விரும்புகின்றனர். ஆனால், அவர்கள் செல்ல போதுமான ரயில்கள் இந்த வழித்தடத்தில் இயக்கப்படுவது இல்லை. அதனால், அவர்கள் அதிக செலவு செய்து பேருந்துகள், சொகுசு பேருந்துகளில் செல்ல வேண்டிய நிலை ஏற்படுகிறது.

ஆகையால் கோடை விடுமுறை துவங்கும் நிலையில். மாணவர்கள், பொதுமக்கள் சுற்றுலா செல்ல விரும்புவோர் தற்போது இயக்கப்படும் ரயில்களில் செல்வதில், மிகுந்த சிரமம் ஏற்படும்.

எனவே, பொதுமக்கள், வெளி மாவட்டத்தினர் பயன்பெறும் வகையில், கோவை திண்டுக்கல் வழித்தடத்தில் கூடுதல் ரயில்களை இயக்க தெற்கு ரயில்வே அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் கூடுதல் ரயில் இயக்கினால் கூடுதல் வருமானம் கிடைக்கும்.

பொது மக்களும், பயணிகளும் அதிக அளவில் பயன்பெறுவார்கள். எனவே, உடுமலை வழியாக கூடுதல் ரயில்களை இயக்க வேண்டும் என, உடுமலை மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Newsletter

திருப்பூரில் பட்டப்பகலில் அடிதடி; ஒருவர் காயம் – போலீசார் விசாரணை

திருப்பூர் இந்திரா நகர் பகுதியில் ஒருவரை கும்பலாக தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சம்பவம் தொடர்பாக 15 வேலம்ப...

வெள்ளியங்கிரி மலை ஏற நாளை முதல் தடை

தென்மேற்கு பருவமழை முன்னெச்சரிக்கை காரணமாக, கோவை வெள்ளியங்கிரி மலைக்கு மே 13 முதல் பக்தர்கள் செல்ல வனத்துறை தற்காலிக தடை...

“Unable to Breathe” – Chettipalayam Residents Petition Pollution Control Board Over Garbage Burning

Residents of Chettipalayam in Coimbatore have petitioned the Tamil Nadu Pollution Control Board, alleging severe health...

“குப்பை எரிப்பால் மூச்சு விடவே முடியவில்லை” – செட்டிபாளையம் பொதுமக்கள் மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்துக்கு மனு..!

கோவை செட்டிபாளையம் பகுதியில் காலி மனையில் குப்பைகள் தீ வைத்து எரிக்கப்படுவதால் எழும் நச்சுப் புகையால் கடும் அவதிப்படுவதா...

சிங்கப்பூர் நிறுவனத்துடன் ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்லூரி புரிந்துணர்வு ஒப்பந்தம்

கோவை நவஇந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி, சிங்கப்பூர் நிறுவனமான iGenius AI Private Limited...

பீளமேடு பகுதியில் குடிநீர் குழாய் உடைப்பு; மழை விளைவுகள் சீரமைப்பு பணிகள் ஆய்வு

கோயம்புத்தூர் சிங்காநல்லூர் தொகுதி 27-வது வார்டு பீளமேடு பகுதியில் குடிநீர் குழாய் உடைப்பு ஏற்பட்டது. மழையினால் விழுந்த...