கோவை துடியலூர் பேருந்து நிலையம் அருகே அதிமுக சார்பில் நீர் மோர் பந்தல் திறப்பு!

துடியலூர் பேருந்து நிலையம் அருகே கோவை புறநகர் வடக்கு மாவட்ட அதிமுக சார்பில் அமைக்கப்பட்ட நீர்மோர் பந்தலை வடக்கு மாவட்ட செயலாளர் மற்றும் கவுண்டம்பாளையம் சட்டமன்ற உறுப்பினர் பி.ஆர்.ஜி. அருண்குமார் கலந்து கொண்டு ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.



கோவை: துடியலூர் அருகே அதிமுக சார்பில் அமைக்கப்பட்ட நீர் மோர் பந்தலை சட்டமன்ற உறுப்பினர் பி.ஆர்.ஜி. அருண்குமார் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.



கோவை துடியலூர் பேருந்து நிறுத்தம் அருகே அதிமுக கோவை புறநகர் வடக்கு மாவட்டம் சார்பில் நீர்மோர் பந்தல் திறக்கப்பட்டது.



இதனை அதிமுக புறநகர் வடக்கு மாவட்ட செயலாளர் மற்றும் கவுண்டம்பாளையம் சட்டமன்ற உறுப்பினர் பி.ஆர்.ஜி.அருண்குமார் கலந்துக் கொண்டு ரிப்பன் வெட்டி துவங்கி பொதுமக்களுக்கு நீர்மோர், தர்பூசணி மற்றும் இளநீர் ஆகியவற்றை வழங்கினார்.



கோடை வெயில் மக்களை வாட்டி வரும் நிலையில் பல்வேறு கட்சியினர் மற்றும் தொண்டு நிறுவனங்கள் ஆங்காங்கே நீர் மோர் பந்தல்களை அமைத்து பொதுமக்களின் தாகத்தை தீர்த்து வருகிறது.

அதேபோல், அதிமுக சார்பாக தமிழகத்தில் பல்வேறு இடங்களில் நீர் மோர் பந்தல்கள் அமைக்கப்பட்டு பொதுமக்களுக்கு நீர் மோர் வழங்கப்பட்டு வருகிறது.

இதன் ஒரு பகுதியாக கோவை துடியலூர் பேருந்து நிறுத்தம் பகுதியில் அதிமுக கோவை புறநகர் வடக்கு மாவட்டம் சார்பில் நீர்மோர் பந்தல் திறக்கப்பட்டது. இதனை அதிமுக புறநகர் வடக்குமாவட்ட செயலாளர் மற்றும் கவுண்டம்பாளையம் சட்டமன்ற உறுப்பினர் பி.ஆர்.ஜி.அருண்குமார் கலந்துக்கொண்டு ரிப்பன் வெட்டி துவங்கி பொதுமக்களுக்கு நீர்மோர், தர்பூசணி மற்றும் இளநீர்களை வழங்கினார்.

இந்த நிகழ்ச்சியில் அம்மா பேரவை செயலாளர் கவிசந்திரமோகன், ஐ.டி.விங்க் மாவட்ட செயலாளர் மணிகண்டன், அவை தலைவர் ஐ.டி.ஐ. ஜெயராஜ், பகுதி செயலாளர்கள் வனிதாமணி, மாரிச்சாமி, வட்ட செயலாளர்கள் சாந்திபூஷன், பந்தல்வீடு பிரகாஷ், ஜெயக்குமார், சுரேஷ், சுரேஷ்பாபு, காளிசாமி உட்பட பலர் பங்கேற்றனர்.

Newsletter

திமுக தேர்தல் அறிக்கையில் மின்சார கோரிக்கைகள் இல்லை: மறுசுழற்சி ஜவுளி கூட்டமைப்பு ஏமாற்றம்

திமுக தேர்தல் அறிக்கையில் மின்கட்டணம் குறைப்பு, நிலை கட்டணம் குறைப்பு உள்ளிட்ட மின்சாரத்துறை கோரிக்கைகள் இடம்பெறாதது மறு...

சூரிய ஒளி மின் உற்பத்தி திட்டங்களுக்கு ஊக்கமளிப்பு மற்றும் மானியம்: அதிமுக தேர்தல் அறிக்கையை தொழில்துறை வரவேற்பு

Coimbatore: சூரிய ஒளி மின் உற்பத்தி திட்டங்களுக்கு ஊக்கமளிப்பு மற்றும் மானியம் வழங்குவது தொடர்பான அதிமுக தேர்தல் அறிக்கை...

சாதனைகளை கூறி வெற்றி பெறுவேன்; யாரையும் குறைத்து மதிப்பிடவில்லை - செந்தில் பாலாஜி

கோவை தெற்கு தொகுதியில் DMK வேட்பாளர் செந்தில் பாலாஜி தேர்தல் பணி குழு அலுவலகத்தை காந்திபுரத்தில் திறந்து வைத்தார். எதிரண...

கோவையை உலகத் தர நகரமாக மாற்ற கருத்தரங்கம்

கோவை நவஇந்தியாவில் ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் “கோயம்புத்தூரை உலகத் தர நகரமாக மாற்றுவோம்” கருத்தரங...

மகாவீர் ஜெயந்தி: மார்ச் 31ல் இறைச்சி விற்பனைக்கு தடை - கோயம்புத்தூர் மாநகராட்சி அறிவிப்பு

மகாவீர் ஜெயந்தி விழாவையொட்டி மார்ச் 31, 2026 அன்று கோயம்புத்தூர் மாநகராட்சி பகுதியில் அனைத்து விதமான இறைச்சி விற்பனை மற்...

கவுண்டம்பாளையம் தொகுதியில் NTK வேட்பாளர் கலாமணி ஜெகநாதன் வேட்புமனு தாக்கல்

கோவை கவுண்டம்பாளையம் சட்டமன்றத் தொகுதியில் நாம் தமிழர் கட்சி வேட்பாளராக கலாமணி ஜெகநாதன் இன்று வேட்புமனுவை தாக்கல் செய்தா...