கோத்தகிரி அருகே சாலையை கடக்க முயன்ற யானை - படம்பிடிக்க முயன்றவர்களை துரத்தியதால் பரபரப்பு!

கோத்தகிரியில் இருந்து மேட்டுப்பாளையம் செல்லும் சாலையில், காட்டு யானை ஒன்று சாலையை கடக்கும் போது, அதை செல்போனில் படம் எடுக்க முயன்ற வாகன ஓட்டிகளை யானை துரத்தியதால் அவர்கள் அலறியடித்து ஓடினர். இந்த காட்சிகள் தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.



நீலகிரி: கோத்தகிரி அருகே சாலையை கடக்க முயன்ற யானையை படம்பிடிக்க முயன்றவர்களை துரத்திய காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கோத்தகிரி அருகே உள்ள குஞ்சப்பனை மாமரம், கீழ்கூப்பு, மேல்கூப்பு, தட்டப்பள்ளம், கோழிக்கரை, முள்ளூர், அறையூர், கரிக்கையூர், செம்மனாரை உள்பட சுற்றுவட்டார கிராம பகுதிகளில் ஏராளமான பலா மரங்கள் உள்ளன.

வழக்கமாக இந்த மரங்களில் கோடை காலத்தில் பழங்கள் காய்த்து குலுங்குவது போல இந்த ஆண்டும் காய்த்துள்ளது. இதனால் காட்டு யானைகள் குஞ்சப்பனை பகுதியில் முகாமிட்டு வருகின்றன.



இந்நிலையில் நேற்று முன்தினம் கோத்தகிரியில் இருந்து மேட்டுப்பாளையம் செல்லும் சாலையில் முள்ளூர் பகுதியில் சாலையை கடக்க ஒற்றை காட்டு யானை வந்துள்ளது. அதனை கண்ட வாகன ஓட்டிகள் சற்று தொலைவிலேயே பாதுகாப்பாக வாகனங்களை நிறுத்தியுள்ளனர்.



இதனையடுத்து, யானையை தங்களது மொபைல் போனில் படம் பிடித்ததுடன், சத்தம் போட்டனர். இதனால் ஆத்திரமடைந்த காட்டு யானை திடீரென அவர்களை துரத்தியது. யானை துரத்தி வருவதைக் கண்ட அவர்கள் அங்கிருந்து ஓட்டம் பிடித்தனர்.



பின்னர் யானை சாலையைக் கடந்து அருகிலிருந்த தேயிலைத் தோட்டத்திற்குள் சென்றது. இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. அந்த காட்சிகள் தற்போது வெளியாகி உள்ளது.

Newsletter

அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ. மனைவி கலைச்செல்வி நாம் தமிழர் கட்சியில் இணைவு

வால்பாறை தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ. அமுல் கந்தசாமியின் மனைவி கலைச்செல்வி, அதிமுக சார்பில் சட்டப் பேரவை தேர்தலில் போட்டிய...

பிரதமர் மோடி கோவை விமான நிலையத்தில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் கேரளா புறப்பட்டார்

பிரதமர் Narendra Modi கேரளாவில் நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள கோவை விமான நிலையம் வந்தடைந்தார். BJP மாநில தலைவர் Nayinar Nag...

கோவையில் குறுத்தோலை ஞாயிறு விழா: கிறிஸ்தவர்கள் பக்திப் பரவசத்துடன் புனிதப் பேரணி

கோவை டவுன்ஹால் பகுதியில் உள்ள தூய மைக்கல் ஆதித்தூதர் பேராலயத்தில் குறுத்தோலை ஞாயிறு விழா கொண்டாடப்பட்டது. திரளான இறைமக்க...

முதல்வர் மு.க.ஸ்டாலின் திட்டங்களால் பொள்ளாச்சி திமுக கோட்டையாக மாறும் - வேட்பாளர் கே.நித்தியானந்தன்

பொள்ளாச்சி தொகுதியில் கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சி வேட்பாளர் K. Nithyananthan, முதல்வர் M.K. Stalin திட்டங்களால், குற...

கோவை விமான நிலையத்தில் கோடைகால அட்டவணை அமல்: தினசரி விமான சேவைகள் 32 ஆக அதிகரிப்பு

கோவை சர்வதேச விமான நிலையத்தில் மார்ச் 29 முதல் கோடைகால அட்டவணை அமல்படுத்தப்படுகிறது. தினசரி விமானங்கள் எண்ணிக்கை 28-லிரு...

கோவை விமான நிலையத்தில் கோடைகால அட்டவணை அமல்: தினசரி விமான சேவைகள் 32 ஆக அதிகரிப்பு

கோவை சர்வதேச விமான நிலையத்தில் மார்ச் 29 முதல் கோடைகால அட்டவணை அமல்படுத்தப்படுகிறது. தற்போதுள்ள 28 விமான சேவைகளிலிருந்து...