12 மணி நேர வேலை சட்டத்தை திரும்ப பெறுக.! - கோவையில் ஏ.ஐ.டி.யூ.சி பொதுச்செயலாளர் அமர்ஜித் கவுர் வலியுறுத்தல்!

கோவை ஜீவா இல்லத்தில், ஏ.ஐ.டி.யூ.சி பொது செயலாளர் அமர்ஜித் கவுர் செய்தியாளர்களிடம் பேசியபோது, தமிழக அரசு கொண்டு வந்த 12 மணி நேர வேலை திட்டத்தை திரும்ப பெற வேண்டும் என வலியுறுத்தினார். மேலும், இந்த சட்டத்தை கண்டித்து ஏ.ஐ.டி.யு.சி, தொடர்ந்து போராட்டம் நடத்தும் என்றார்.


கோவை: தொழிலாளர்களின் வேலை நேரத்தை 12 மணி நேரமாக உயர்த்தியதை தமிழக அரசு திரும்ப பெற வேண்டும் என ஏஐடியூசி அகில இந்திய பொதுசெயலாளர் அமர்ஜித் கவுர் வலியுறுத்தியுள்ளார்.

கோவை ஜீவா இல்லத்தில் ஏ.ஐ.டி.யூ.சி. அகில இந்திய பொதுச்செயலாளரும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய செயலாளருமான அமர்ஜித் கவுர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது,

மோடி ஆட்சியில் சமத்துவமின்மை அதிகரித்து வருகிறது.ஏழை மக்கள் தான் மொத்த சதவீதத்தில் 64.5% ஜி.எஸ்.டி., செலுத்துகின்றனர். அரசு வரி செலுத்துவோர் என சொல்லும் உயர் வகுப்பை சேர்ந்தவர்கள் 3% தான் ஜி.எஸ்.டி., செலுத்துகின்றனர். மோடி ஆட்சியில் நாடாளுமன்றமே அச்சுறுத்தலில் உள்ளது.

தொழிற்சாலை சட்டத்தை கர்நாடகாவில் ஆதரித்த பாஜக, தமிழகத்தில் எதிர்க்கிறார்கள். ஆனால் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி இரு மாநிலங்களிலும் இந்த சட்டத்தை எதிர்ப்பதாகவும் தொடர்ந்து இந்த சட்டத்தை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி எதிர்க்கும்.

தொழிலாளர்களின் வேலை நேரத்தை 12 மணி நேரமாக உயர்த்தியதை தமிழக அரசு திரும்பப்பெற வேண்டும். ஏ.ஐ.டி.யு.சி, தொடர்ந்து இந்த சட்டத்தை கண்டித்து போராட்டம் நடத்தும்.தொழிலாளர்கள் பக்கமே இந்திய கம்யூனிஸ்ட் கட்சியும், ஏ.ஐ.டி.யு.சி யும் நிற்கும்.

மத்திய அரசின் அழுத்தம் காரணமாக தொழிற்சாலை சட்டம் நிறைவேற்றப்பட்டதா என்ற கேள்விக்கு முதல்வர் ஸ்டாலின் தான் பதில் சொல்ல வேண்டும். அதுபோன்ற அழுத்தம் இருந்தாலும், ஸ்டாலின் தனது மக்கள் மீது அக்கறை கொண்டு அவர்கள் பக்கம் தான் இருக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Newsletter

டாஸ்மாக் ஊழியர்கள் போராட்டம்: பீளமேடு வாணிப கழக அலுவலகத்தில் பரபரப்பு

கோவை பீளமேடு மதுபான கிடங்கு வாணிப கழக அலுவலகத்தில் டாஸ்மாக் அனைத்து தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழுவினர் ஆர்ப்பாட்டம் ந...

சோமனூர் பேருந்து நிலையம் அருகே மின் கம்பத்தில் தீ விபத்து

கோவை சோமனூர் பேருந்து நிலையம் அருகே ஏப்ரல் 27 மதியம் மின் கம்பத்தில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது. மதிய நேரத்தில் மக்கள்...

திருப்பூரில் கட்சித் தலைவர் மீது அவதூறு பரப்பியதாக புகார்

திருப்பூரில் மனிதநேய ஜனநாயக கட்சி தலைவர் தமீமுன் அன்சாரி மீது சமூக வலைதளங்களில் அவதூறு பரப்பியதாகக் குற்றம் சாட்டி இந்தி...

GCT கல்லூரியில் வைக்கப்பட்டுள்ள EVM இயந்திரங்களை கலெக்டர் திடீர் ஆய்வு

கோவை மாவட்டம் 10 சட்டமன்ற தொகுதிகளில் பதிவான வாக்குகள் அடங்கிய EVM இயந்திரங்கள் தடாகம் சாலை GCT கல்லூரியில் பாதுகாப்பாக...

கோவை அரசினர் தொழில்நுட்ப கல்லூரி வாக்கு எண்ணும் மையத்தை திமுக நிர்வாகிகள் ஆய்வு

கோவை மாவட்டத்தில் 10 தொகுதிக்கான வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள கோவை அரசினர் தொழில்நுட்ப கல்லூரி வாக்கு எண்ண...

கோடையில் ஐஸ்கிரீம் கலப்படம்: உற்பத்தியாளர்கள் மீது தமிழக அரசு தீவிர கண்காணிப்பு

கோடைக்காலத்தில் ஐஸ்கிரீம் மற்றும் குளிர்பானங்களில் கலப்படம் அதிகரித்துள்ள நிலையில், தமிழ்நாடு உணவுப் பாதுகாப்புத் துறை உ...