12 மணி நேர வேலை சட்டத்தை திரும்ப பெறுக.! - கோவையில் ஏ.ஐ.டி.யூ.சி பொதுச்செயலாளர் அமர்ஜித் கவுர் வலியுறுத்தல்!

கோவை ஜீவா இல்லத்தில், ஏ.ஐ.டி.யூ.சி பொது செயலாளர் அமர்ஜித் கவுர் செய்தியாளர்களிடம் பேசியபோது, தமிழக அரசு கொண்டு வந்த 12 மணி நேர வேலை திட்டத்தை திரும்ப பெற வேண்டும் என வலியுறுத்தினார். மேலும், இந்த சட்டத்தை கண்டித்து ஏ.ஐ.டி.யு.சி, தொடர்ந்து போராட்டம் நடத்தும் என்றார்.


கோவை: தொழிலாளர்களின் வேலை நேரத்தை 12 மணி நேரமாக உயர்த்தியதை தமிழக அரசு திரும்ப பெற வேண்டும் என ஏஐடியூசி அகில இந்திய பொதுசெயலாளர் அமர்ஜித் கவுர் வலியுறுத்தியுள்ளார்.

கோவை ஜீவா இல்லத்தில் ஏ.ஐ.டி.யூ.சி. அகில இந்திய பொதுச்செயலாளரும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய செயலாளருமான அமர்ஜித் கவுர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது,

மோடி ஆட்சியில் சமத்துவமின்மை அதிகரித்து வருகிறது.ஏழை மக்கள் தான் மொத்த சதவீதத்தில் 64.5% ஜி.எஸ்.டி., செலுத்துகின்றனர். அரசு வரி செலுத்துவோர் என சொல்லும் உயர் வகுப்பை சேர்ந்தவர்கள் 3% தான் ஜி.எஸ்.டி., செலுத்துகின்றனர். மோடி ஆட்சியில் நாடாளுமன்றமே அச்சுறுத்தலில் உள்ளது.

தொழிற்சாலை சட்டத்தை கர்நாடகாவில் ஆதரித்த பாஜக, தமிழகத்தில் எதிர்க்கிறார்கள். ஆனால் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி இரு மாநிலங்களிலும் இந்த சட்டத்தை எதிர்ப்பதாகவும் தொடர்ந்து இந்த சட்டத்தை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி எதிர்க்கும்.

தொழிலாளர்களின் வேலை நேரத்தை 12 மணி நேரமாக உயர்த்தியதை தமிழக அரசு திரும்பப்பெற வேண்டும். ஏ.ஐ.டி.யு.சி, தொடர்ந்து இந்த சட்டத்தை கண்டித்து போராட்டம் நடத்தும்.தொழிலாளர்கள் பக்கமே இந்திய கம்யூனிஸ்ட் கட்சியும், ஏ.ஐ.டி.யு.சி யும் நிற்கும்.

மத்திய அரசின் அழுத்தம் காரணமாக தொழிற்சாலை சட்டம் நிறைவேற்றப்பட்டதா என்ற கேள்விக்கு முதல்வர் ஸ்டாலின் தான் பதில் சொல்ல வேண்டும். அதுபோன்ற அழுத்தம் இருந்தாலும், ஸ்டாலின் தனது மக்கள் மீது அக்கறை கொண்டு அவர்கள் பக்கம் தான் இருக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Newsletter

திமுக தேர்தல் அறிக்கையில் மின்சார கோரிக்கைகள் இல்லை: மறுசுழற்சி ஜவுளி கூட்டமைப்பு ஏமாற்றம்

திமுக தேர்தல் அறிக்கையில் மின்கட்டணம் குறைப்பு, நிலை கட்டணம் குறைப்பு உள்ளிட்ட மின்சாரத்துறை கோரிக்கைகள் இடம்பெறாதது மறு...

சூரிய ஒளி மின் உற்பத்தி திட்டங்களுக்கு ஊக்கமளிப்பு மற்றும் மானியம்: அதிமுக தேர்தல் அறிக்கையை தொழில்துறை வரவேற்பு

Coimbatore: சூரிய ஒளி மின் உற்பத்தி திட்டங்களுக்கு ஊக்கமளிப்பு மற்றும் மானியம் வழங்குவது தொடர்பான அதிமுக தேர்தல் அறிக்கை...

சாதனைகளை கூறி வெற்றி பெறுவேன்; யாரையும் குறைத்து மதிப்பிடவில்லை - செந்தில் பாலாஜி

கோவை தெற்கு தொகுதியில் DMK வேட்பாளர் செந்தில் பாலாஜி தேர்தல் பணி குழு அலுவலகத்தை காந்திபுரத்தில் திறந்து வைத்தார். எதிரண...

கோவையை உலகத் தர நகரமாக மாற்ற கருத்தரங்கம்

கோவை நவஇந்தியாவில் ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் “கோயம்புத்தூரை உலகத் தர நகரமாக மாற்றுவோம்” கருத்தரங...

மகாவீர் ஜெயந்தி: மார்ச் 31ல் இறைச்சி விற்பனைக்கு தடை - கோயம்புத்தூர் மாநகராட்சி அறிவிப்பு

மகாவீர் ஜெயந்தி விழாவையொட்டி மார்ச் 31, 2026 அன்று கோயம்புத்தூர் மாநகராட்சி பகுதியில் அனைத்து விதமான இறைச்சி விற்பனை மற்...

கவுண்டம்பாளையம் தொகுதியில் NTK வேட்பாளர் கலாமணி ஜெகநாதன் வேட்புமனு தாக்கல்

கோவை கவுண்டம்பாளையம் சட்டமன்றத் தொகுதியில் நாம் தமிழர் கட்சி வேட்பாளராக கலாமணி ஜெகநாதன் இன்று வேட்புமனுவை தாக்கல் செய்தா...