உடுமலையில் கழிவு நீர் வாகனங்களை பதிவு செய்து உரிமம் பெற நகராட்சி ஆணையர் அறிவுறுத்தல்!

உடுமலை நகராட்சியில் உள்ள கழிவுநீர் அகற்றும் வாகன உரிமையாளர்கள் தங்கள் வாகனங்கள் குறித்த தகவல்களை நகராட்சியில் பதிவு செய்து, 2 ஆண்டுகள் செல்லும் வகையிலான உரிமத்தை பெற்றுக் கொள்ள வேண்டும் என நகராட்சி ஆணையர் சத்தியநாதன் அறிவித்துள்ளார்.


திருப்பூர்: உடுமலை நகராட்சியில் கழிவுநீர் அகற்றும் வாகனங்களை, நகராட்சியில் பதிவு செய்து உரிமம் பெற்றுக் கொள்ள வேண்டும் என நகராட்சி நிர்வாகம் அறிவித்துள்ளது.

இதுகுறித்து, உடுமலை நகராட்சி ஆணையர் சத்தியநாதன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,

உடுமலை நகராட்சியில், மனித கழிவுகள், கழிவு நீர் அகற்றும் வாகன உரிமையாளர்களுக்கு, நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளால், 2 ஆண்டு செல்லும் வகையில், விண்ணப்பித்த 15 நாட்களில் உரிமம் வழங்கப்படுகிறது.



எனவே, கழிவுநீரை அகற்றும் வாகனங்கள் குறித்து, உடுமலை நகராட்சியில் பதிவு செய்து, உரிமம் பெற்றுக்கொள்ள வேண்டும்.

வாகனங்களில் சேகரிக்கப்படும் கழிவுநீரை, பொது இடங்களில் கொட்டக்கூடாது. நகராட்சி பாதாள சாக்கடை சுத்திகரிப்பு நிலையத்திற்கு கொண்டு வர வேண்டும். உரிமம் பெறாத வாகனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு, அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Newsletter

சட்டவிரோத குப்பைக் குவியல்கள்: 4 பேருக்கு தலா ஒரு லட்சம் அபராதம் - கோவை மாநகராட்சி நடவடிக்கை

கோவை சிங்காநல்லூரில் சட்டவிரோதமாக குப்பைகளை குவித்த நான்கு பேருக்கு தலா ரூ.1 லட்சம் வீதம் என ஒரே நாளில்  மொத்தம் ரூ.4 லட...

கோவையில் GKNM செவிலியர் கல்லூரியை திறந்து வைத்து துணை குடியரசுத் தலைவர் சிறப்புரை..!

கோவையில் ஜி. குப்புசாமி நாயுடு அறக்கட்டளை சார்பில் புதிதாக கட்டப்பட்டுள்ள செவிலியர் கல்லூரியை துணை குடியரசுத் தலைவர் ச...

ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாணவர் மன்ற தொடக்க விழா நடைபெற்றது

கோவை நவஇந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாணவர் மன்ற தொடக்க விழா செவ்வாய்க்கிழமை நடைபெற...

அமராவதி அணையில் நீர்மட்டம் 51.45 அடியாக உயர்வு - திருமூர்த்தி அணையில் 379 கன அடி வரத்து

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஜூலை 22ஆம் தேதி நிலவரப்படி 51.45 அடியாக உயர்ந்துள்ளது. திருமூர்த்தி அ...

கோயம்புத்தூர் மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக நீர்வரத்து அதிகரித்...

கோவை அரசுப் பள்ளி மைதானங்களில் ஆர்.எஸ்.எஸ். ‘சாகா’ பயிற்சி: நடவடிக்கை கோரி மனு

கோவை காந்திமாநகர் அரசு மேல்நிலைப் பள்ளி மைதானத்தில் ஆர்.எஸ்.எஸ். 'சாகா' பயிற்சி நடைபெற்றதாகக் கூறி, இதுபோன்ற பயிற்சிகளை...