வால்பாறையில் 108 ஆம்புலன்ஸ் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து - ஓட்டுநர், நோயாளி பலி

கோவை மாவட்டம் வால்பாறையில் 108 ஆம்புலன்ஸ் வாகனம் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில், ஓட்டுநர் காளிதாஸ் மற்றும் சிகிச்சைக்காக அழைத்துச் செல்லப்பட்ட நோயாளி சிவகுமார் இருவரும் உயிரிழந்தனர்.



கோவை: கோவை மாவட்டம் வால்பாறையில் அரசு மருத்துவமனைக்கு பாரளை எஸ்டேட் பகுதியில் இருந்து சிவகுமார் என்பவரை சிகிச்சைக்காக 108 வாகனத்தின் மூலம் வால்பாறை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.

மருத்துவமனை சாலை பகுதியில் வாகனத்தை நிறுத்திவிட்டு நோயாளியை அழைத்து செல்ல வாகனத்தின் பின்புறம் கதவை திறக்க ஓட்டுநர் காளிதாஸ் இறங்கி உள்ளார். அப்போது, வாகனம் பிரேக் பிடிக்காமல் பின்புறமாக வந்து பள்ளத்தில் விழுந்து விபக்குள்ளானது.



இதில், ஓட்டுநர் காளிதாஸ் மேல் ஆம்புலன்ஸ் வாகனம் ஏறி இறங்கியதில், அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.



நோயாளி சிவக்குமார் வாகனத்தின் அடியில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தார்.



நோயாளி சிவக்குமாரின் மனைவி சாந்திக்கு பலத்த காயம் ஏற்பட்டு, மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். 108 ஆம்புலன்ஸ் வாகனம் விபத்துக்குள்ளாகி 2 பேர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்த விபத்து குறித்து காவல்துறையினர் வழக்குப் பதிவு விசாரணை நடத்தி வருகின்றனர்.

Newsletter

கோவையில் கல்லூரி மாணவர் அமுதன் அடித்துக் கொலை செய்யப்பட்ட வழக்கில் நீதி கோரி ABVP போராட்டம்

கோவை இந்துஸ்தான் பொறியியல் கல்லூரி மாணவர் அமுதன் சக மாணவர்கள் அடங்கிய கும்பலால் தாக்கப்பட்டு உயிரிழந்த சம்பவத்தை கண்டித்...

பில்லூர் திட்டத்தின் கீழ் குடிநீர் விநியோகம்: மேயரும் ஆணையாளரும் விளாங்குறிச்சியில் ஆய்வு

கோவை மாநகராட்சியின் கிழக்கு மண்டல விளாங்குறிச்சி சந்திப்பில் பில்லூர் திட்டத்தின் கீழ் குடிநீர் விநியோகக் குழாய் இணைப்பு...

கோவையில் போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு மனித சங்கிலி: மாவட்ட ஆட்சியர் பங்கேற்பு

கோவை ரேஸ்கோர்ஸ் பகுதியில் நடைபெற்ற போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு மனித சங்கிலி நிகழ்ச்சியில் பங்கேற்ற மாவட்ட ஆட்சியர...

கோவையில் போலி இறப்பு, வாரிசு சான்றிதழ்கள் மூலம் ரூ.32 கோடி சொத்துக்களை அபகரிக்க முயற்சி: 9 பேர் மீது வழக்குப்பதிவு

கோவை மசக்காளிபாளையத்தில் தனியார் நிறுவன மேலாளருக்குச் சொந்தமான நிலம் உள்ளிட்ட ரூ.32 கோடி மதிப்பிலான சொத்துக்களை போலி இறப...

விநாயகர் சதுர்த்தி: கடந்த ஆண்டு 1.5 லட்சம் சிலைகள் பிரதிஷ்டை; இந்தாண்டு எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் - காடேஸ்வரா சுப்பிரமணியம்

கோவையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய இந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம், கடந்த ஆண்டை விட இந்தாண்டு தம...

கோவை மாநகராட்சி சொத்துவரி வசூலில் ₹38.43 கோடி கூடுதல் வசூல்

கோவை மாநகராட்சி 2026-27ஆம் நிதியாண்டில் சொத்துவரி வசூலில் சென்ற ஆண்டை விட ₹38.43 கோடி கூடுதலாக வசூலித்துள்ளது. நடப்பு கே...