சென்னை தலைமை செயலகம் முன்பு காத்திருப்பு போராட்டம் - விவசாய சங்கம் அறிவிப்பு

தாராபுரம் அருகே நல்லதங்காள் நீர் தேக்க அணைக்கு 720 ஏக்கர் நிலம் கொடுத்த விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்காததை கண்டித்து வருகின்ற 13ஆம் தேதி சென்னை தலைமைச் செயலகத்தில் தொடர் காத்திருப்பு போராட்டம் நடத்தப் போவதாக விவசாய சங்கம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


திருப்பூர்: நிலம் வழங்கிய விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்காததை கண்டித்து காத்திருப்பு போராட்டம் நடத்தப்போவதாக விவசாய சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.



திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே உள்ள எழுகாம்வலசு கிராமத்தில் உள்ள அம்மன் கோவில் வளாகத்தில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.



இந்த ஆலோசனைக் கூட்டத்தில் கோனேரிப்பட்டி, பொன்னிவாடி, எழுகாம்வலசு கிராமங்களைச் சேர்ந்த விவசாயிகள் சுமார் 120 நபர்களிடம் நல்லதங்காள் அணை கட்டுவதற்கு சுமார் 720 ஏக்கர் கையகப்படுத்தப்பட்டு நல்லதங்காள் அணை கடந்த 20 வருடங்களுக்கு முன்பு கட்டப்பட்டது.



இந்த அணை கட்டுவதற்கு நஷ்ட ஈடாக ஒரு ஏக்கருக்கு 9000 மானாவாரி பூமிக்கும் ஒரு ஏக்கர் தோட்ட பூமிக்கு 27000 நஷ்ட ஈடாக வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. மேற்படி தொகை மிகவும் குறைவாக இருந்ததால் விவசாயிகள் ஆட்சேபனை தெரிவித்து நஷ்டஈடு தொகை அதிகம் பெறுவதற்கு மனு தாக்கல் செய்தனர்.

அந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் மானாவாரி பூமிக்கு ஏக்கர் ஒன்றுக்கு 70 ஆயிரம் ரூபாயும் தோட்ட பூமிக்கு ஏக்கர் ஒன்றுக்கு ஒரு லட்ச ரூபாயும் மேற்படி தொகைக்கு 15 சதவீத வட்டியும் ஆறுதல் தொகை மற்றும் கூடுதல் சிறப்பு தொகை மற்றும் செலவு தொகையை வழங்க உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கது.



இந்நிலையில் நிலம் எடுக்கப்பட்ட விவசாயிகளுக்கு இதுவரை 120 விவசாயிகளுக்கு நஷ்ட ஈடாக கொடுக்காததால் தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் நிறுவனத் தலைவர் ஈசன் முருகசாமி தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.



இந்த ஆலோசனை கூட்டத்தில் நல்லதங்காள் நீர்த்தேக்க அணைக்கு நிலம் கொடுத்த விவசாயிகள் கலந்து கொண்டனர் மேலும் வருகின்ற 13-ஆம் தேதி சென்னை தலைமைச் செயலகத்தில் 120 விவசாயிகளுக்கும் உரிய இழப்பீட்டுத் தொகை வழங்கும் வரை தொடர் காத்திருக்கும் போராட்டம் நடைபெறும் எனத் தெரிவித்தார். இதில் பாதிக்கப்பட்ட விவசாயிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவையில் கல்லூரி மாணவர் அமுதன் அடித்துக் கொலை செய்யப்பட்ட வழக்கில் நீதி கோரி ABVP போராட்டம்

கோவை இந்துஸ்தான் பொறியியல் கல்லூரி மாணவர் அமுதன் சக மாணவர்கள் அடங்கிய கும்பலால் தாக்கப்பட்டு உயிரிழந்த சம்பவத்தை கண்டித்...

பில்லூர் திட்டத்தின் கீழ் குடிநீர் விநியோகம்: மேயரும் ஆணையாளரும் விளாங்குறிச்சியில் ஆய்வு

கோவை மாநகராட்சியின் கிழக்கு மண்டல விளாங்குறிச்சி சந்திப்பில் பில்லூர் திட்டத்தின் கீழ் குடிநீர் விநியோகக் குழாய் இணைப்பு...

கோவையில் போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு மனித சங்கிலி: மாவட்ட ஆட்சியர் பங்கேற்பு

கோவை ரேஸ்கோர்ஸ் பகுதியில் நடைபெற்ற போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு மனித சங்கிலி நிகழ்ச்சியில் பங்கேற்ற மாவட்ட ஆட்சியர...

கோவையில் போலி இறப்பு, வாரிசு சான்றிதழ்கள் மூலம் ரூ.32 கோடி சொத்துக்களை அபகரிக்க முயற்சி: 9 பேர் மீது வழக்குப்பதிவு

கோவை மசக்காளிபாளையத்தில் தனியார் நிறுவன மேலாளருக்குச் சொந்தமான நிலம் உள்ளிட்ட ரூ.32 கோடி மதிப்பிலான சொத்துக்களை போலி இறப...

விநாயகர் சதுர்த்தி: கடந்த ஆண்டு 1.5 லட்சம் சிலைகள் பிரதிஷ்டை; இந்தாண்டு எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் - காடேஸ்வரா சுப்பிரமணியம்

கோவையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய இந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம், கடந்த ஆண்டை விட இந்தாண்டு தம...

கோவை மாநகராட்சி சொத்துவரி வசூலில் ₹38.43 கோடி கூடுதல் வசூல்

கோவை மாநகராட்சி 2026-27ஆம் நிதியாண்டில் சொத்துவரி வசூலில் சென்ற ஆண்டை விட ₹38.43 கோடி கூடுதலாக வசூலித்துள்ளது. நடப்பு கே...