கோவை துடியலூரில் பாஜக சார்பில் நீர் மோர் பந்தல் திறப்பு

கோவை துடியலூரை அடுத்த வடமதுரையில் பெரியநாயக்கன்பாளையம் கிழக்கு ஒன்றியம் வர்த்தக அணி சார்பில் நீர் மோர் பந்தல் திறக்கப்பட்டது. நிகழ்ச்சிக்கு மாவட்ட வர்த்தக பிரிவு செயலாளர் சிவகுமார், மண்டல தலைவர் வசந்தகுமார் ஆகியோர் தலைமை தாங்கினர்.



கோவை: துடியலூர் பகுதியில் பாஜக சார்பில் நீர் மோர் பந்தல் திறக்கப்பட்டது.



கோவை துடியலூரை அடுத்த வடமதுரை பேருந்து நிறுத்தம் பகுதியில் பாஜக பெரியநாயக்கன்பாளையம் கிழக்கு ஒன்றியம் வர்த்தக அணி சார்பில் நீர்மோர் பந்தல் திறக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சிக்கு மாவட்ட வர்த்தக பிரிவு செயலாளர் சிவகுமார், மண்டல தலைவர் வசந்தகுமார் ஆகியோர் தலைமை தாங்கினர்.

குருடம்பாளையம் ஊராட்சி வார்டு உறுப்பினர்கள் சுரேஷ் குமார் மற்றும் சாவித்திரி சக்திவேல் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.



இந்த நீர்மோர் பந்தல் தினமும் காலை 8 மணியிலிருந்து மாலை 4 மணி வரை இருக்கும்.

இதுகுறித்து பாரதிய ஜனதா கட்சி நிர்வாகிகள் கூறும்போது, இந்த வருடம் வெயில் அதிகமாக உள்ளது. மேலும் 4 டிகிரி வரை வெப்பம் உயர்ந்துள்ளதாக வானிலை துறையினர் தெரிவித்துள்ளனர். இந்த நிலையில் பொதுமக்கள், பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவிகள் மிகவும் பயன்படும் வகையில் நீர்மோர் பந்தலை பாரதிய ஜனதா கட்சியினர் திறந்துள்ளதாகத் தெரிவித்தனர்.

இந்த நிகழ்ச்சியில் பாரதிய ஜனதா கட்சி மாவட்ட, ஒன்றிய, பகுதி நிர்வாகிகள் கலந்து கொண்டனர். அனைவருக்கும் கல்வி திட்டத்தின் கீழ் பள்ளி ஆசிரியர்கள், மாணவ, மாணவிகள் விழிப்புணர்வு பேரணியில் வந்தனர். தொடர்ந்து அவர்கள் அனைவரும் நீர்மோர் பந்தலில் மோர் குடித்து தங்கள் தாகத்தை தீர்த்துக்கொண்டனர்.

Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...