உடுமலை அமராவதி அணையில் இருந்து தண்ணீர் திறக்க விவசாயிகள் கோரிக்கை!

உடுமலை சுற்றுவட்டாரப் பகுதிகளில் 2ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் நெல் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. தற்போது தண்ணீர் பற்றாக்குறை உள்ளதால், பயிர்கள் அனைத்தும் கருகுகின்றன. பயிர்களை காப்பாற்ற அமராவதி அணையில் இருந்து தண்ணீர் திறந்து விட விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.


திருப்பூர்: அமராவதி அணையிலிருந்து தண்ணீர் திறந்து விடக்கோரி விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.

திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகேயுள்ள அமராவதி அணை வாயிலாக, திருப்பூர், கரூர் மாவட்டத்திலுள்ள, 54,637 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. அமராவதி பழைய ஆயக்கட்டு பாசனத்திலுள்ள, கல்லாபுரம், ராம குளம் உள்ளிட்ட ராஜ வாய்க்கால் பாசனத்திற்கு, கடந்தாண்டு, மே 16ல் தண்ணீர் திறக்கப்பட்டு, இரு போக சாகுபடிக்கு நீர் வழங்கப்பட்டு, கடந்த மார்ச் 31ல் நிறைவு செய்யப்பட்டது.



இந்நிலையில் கல்லாபுரம், ராமகுளம் பகுதியில் சுமார் 2 ஆயிரம் ஏக்கரில், நெல் சாகுபடி தாமதமாக துவக்கப்பட்டது. அணையிலிருந்து பாசனத்திற்கு நீர் திறப்பு நிறுத்தப்பட்டுள்ள நிலையில், அறுவடைக்கு தயாராக ஒரு மாதம் வரை உள்ள நெற்பயிர்கள் தண்ணீர் இல்லாமல் கருகுகின்றன. இந்த பயிர்களை காப்பாற்ற நீர் திறக்க வேண்டும், என விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.

Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...