ஜவுளி உற்பத்தியில் அதிகரிக்கும் செயற்கை நூலிழை பயன்பாடு - பருத்திக்கான மவுசு குறைவதாக தொழில்துறையினர் வருத்தம்

ஜவுளி உற்பத்தியில் பருத்திக்கு மாற்றாக செயற்கை நூல் இழை பயன்பாடு அதிகரித்து வருகிறது. இது இந்தியாவின் அடையாளமான பருத்தி ஜவுளித்தொழிலின் எதிர்கால வளர்ச்சிக்கு நல்லதல்ல என தொழில்துறையினர் தெரிவித்துள்ளனர்.


கோவை: பருத்தியை முக்கிய மூலப்பொருளாக கொண்டு இயங்கும் இந்திய ஜவுளித்தொழில் அதன் விலை மற்றும் சந்தையில் நிலவும் தட்டுப்பாடு உள்ளிட்ட காரணங்களால் பாதிக்கப்பட்டுள்ளது.

ஒருபுறம் நிலைமையை சமாளிக்க வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பருத்திக்கு விதிக்கப்படும் 11 சதவீத இறக்குமதி வரியை ரத்து செய்ய தொழில்துறையினர் வலியுறுத்தி வரும் நிலையில், மறுபுறம் விலை குறைந்த ஆடைகளை தயாரிக்க ரீடெய்ல் நிறுவனங்கள் ஜவுளி உற்பத்தியாளர்களுக்கு அறிவுரை வழங்கிவருகின்றன.

இதனால், ஜவுளி உற்பத்தியில் தற்போது பருத்திக்கு மாற்றாக செயற்கைஇழை பயன்பாடு அதிகரித்துள்ளது.



இது குறித்து இந்திய ஜவுளித்தொழில்முனைவோர் கூட்டமைப்பின்(ஐடிஎப்) கன்வீனர் பிரபு தாமோதரன் கூறுகையில், பருத்தி விலை அதிகரித்துள்ளதால் இந்திய ஜவுளி உற்பத்தியாளர்கள் பல்வேறு ஆடை ரகங்களை தயாரிக்க செயற்கைஇழைகளை பயன்படுத்த தொடங்கி உள்ளனர். பணவீக்கத்தால் சில்லரை விற்பனை பாதிக்கப்படுகிறது.

இதனால் விலை குறைந்த பிராண்டட் ஆடைகளை தயாரிக்க ரீடெய்ல் நிறுவனங்கள் ஜவுளி உற்பத்தியாளர்களை அறிவுறுத்தி வருகின்றன. விளையாட்டுதுறையில் பயன்படுத்தப்படும் பல்வேறு ஆடைகள் தயாரிப்பிலும் ‘பாலியெஸ்டர் பிலெமென்ட்’ பயன்படுத்தப்படுகிறது. இந்த காரணங்களால் பருத்தி பயன்பாடு நூற்பாலைகளில் குறைந்து வருகிறது, என்றார்.



இதேபால், தென்னிந்திய நூற்பாலைகள் சங்கம்(சிஸ்பா) கவுரவ செயலாளர் ஜெகதீஷ் சந்திரன், பருத்தி கொண்டு தயாரிக்கப்படும் ஒரு பனியன் விலை ரூ.55 மட்டுமே. சந்தையில் ரூ. 250-க்கு விற்பனை செய்யப்படுகிறது. விளம்பர கட்டணம் உள்ளிட்டவையே இதற்கு காரணம். பாலியெஸ்டர் போன்ற செயற்கை இழை கொண்டு தயாரிக்கப்படும்போது தயாரிப்பு விலை ரூ.45-ஆகவும் விற்பனை விலை ரூ.240-ஆக இருக்கும்.

பத்து ரூபாய் மட்டுமே வித்தியாசம் இருக்கும். இந்தியாவின் அடையாளம் பருத்தி. சில கார்ப்ரேட் நிறுவனங்கள் செயற்கைஇழை இறக்குமதி செய்து வினியோகிக்கின்றன. அவர்கள் லாபம் பெறுவதற்காக ரீடெய்ல் நிறுவனங்களை குறைந்த விலை ஆடைகளை தயாரிக்க அறிவுறுத்துகின்றன. இது பருத்தி ஜவுளித்தொழில் எதிர்கால வளர்ச்சிக்கு நல்லதல்ல, என்றனர்.

Newsletter

ஆசிய மவுண்டன் பைக் சாம்பியன்ஷிப்: தமிழ்நாடு அணிக்கு பெருமை சேர்த்த கோவை வீரர்கள்..!

உஸ்பெகிஸ்தான் தாஷ்கண்ட் நகரில் நடைபெற்ற ஆசிய மவுண்டன் பைக் சாம்பியன்ஷிப் 2026 போட்டியில் தமிழ்நாடு அணி வெண்கலப் பதக்கம்...

கோவை குறிச்சி துணை மின் நிலையத்தில் இன்று மின்தடை

கோவை குறிச்சி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக இன்று காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை சிட்கோ, சு...

இரும்பொரை துணை மின்நிலையத்தில் இன்று மின்தடை

இரும்பொரை துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக இன்று காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை இரும்பொரை, பெத்...

கோவை பீடம்பள்ளி துணை மின் நிலையத்தில் இன்று மின்தடை

கோவை பீடம்பள்ளி துணை மின் நிலையத்தில் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் இன்று காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறுவதால...

கோவை கற்பகம் உயர்கல்விக் கழகத்தில் கவிதைப் படைப்பாக்கத்திறன் மேம்பாட்டுப் பயிலரங்கம் நடைபெற்றது

கோவையில் உள்ள கற்பகம் உயர்கல்விக் கழகத்தில் 23-06-2026 அன்று கவிதைப் படைப்பாக்கத்திறன் மேம்பாட்டுப் பயிலரங்கம் நடைபெற்றத...

அறிவியல் திறனறி தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசளிப்பு விழா

கோவை மண்டல அறிவியல் மையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், அறிவியல் திறனறி தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்க...