கோவை அருகே ஊருக்கு புகுந்த யானைக் கூட்டம்..! அச்சத்தில் உறைந்த பொதுமக்கள்..!

கோவை தடாகம் அருகே உள்ள நஞ்சுண்டாபுரம் குடியிருப்புப் பகுதியில் நள்ளிரவில் காட்டு யானைக்கூட்டம் நுழைந்ததால் பொதுமக்கள் அதிர்ச்சியடைந்தனர். ஊருக்குள் உலா வந்த யானைக்கூட்டத்தை வனத்துறையினர் உதவியுடன் அப்பகுதி மக்கள் வனப்பகுதிக்குள் விரட்டியடித்தனர்.



கோவை: கோவை மேற்கு தொடர்ச்சி மலைத்தொடரில் உள்ள ஆனைகட்டி மலைப்பகுதியில் ஏராளமான காட்டு யானைகள் உள்ளன.

இவைகள், உணவு தேடி மலையடிவாரப் பகுதிகளுக்கு வருகின்றன. இந்த நிலையில், நேற்று இரவு தடாகம் அருகே உள்ள நஞ்சுண்டாபுரம் கிராமத்தில் வனப்பகுதியில் இருந்து குட்டியானைகளுடன் வெளியேறிய 8 காட்டு யானைகள் கூட்டம் கிராமத்தின் சாலைகளில் சுற்றித்திரிந்தன.



இதனால், அதிர்ச்சியடைந்த பொதுமக்கள், வனத்துறைக்குத் தகவல் தெரிவித்தனர்.



சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறையினரின் உதவியுடன், ஊருக்குள் உலா வந்த காட்டு யானைக் கூட்டத்தை அப்பகுதி மக்கள் மீண்டும் வனப்பகுதிக்குள் விரட்டியடித்தனர்.

இதேபோல நேற்று அதிகாலை, பாப்பநாயக்கன்பாளையம் பகுதியில் அரங்கசாமி என்பவரின் தோட்டத்திற்கு ஒற்றை யானை புகுந்துள்ளது. கோடை வெயில் காரணமாக வனப்பகுதிக்குள் வறட்சி நிலவுவதால், தண்ணீர் மற்றும் உணவுதேடி காட்டு யானைகள் வனப்பகுதியை ஒட்டியுள்ள கிராமங்களுக்குள் நுழைவது அதிகரித்து வருவதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.

Newsletter

நொய்யலில் கழிவுநீர் கலப்பு: தொழிற்சாலைகள் மட்டுமல்ல, மாநகராட்சி - மாவட்ட நிர்வாகமும் காரணம் - பாமக மனு

சுத்திகரிக்கப்படாத கழிவுநீர் நொய்யல் ஆற்றில் கலப்பதை தடுக்க வலியுறுத்தி, பாமக நிர்வாகிகள் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்த...

மின்சார நிலை கட்டணத்தை குறைக்க வேண்டும்: தமிழக அரசுக்கு கோவை தொழில் அமைப்புகளின் கூட்டமைப்பு கோரிக்கை

மின்சார நிலை கட்டண உயர்வால் குறு மற்றும் சிறு தொழில்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள கோவை தொழில் அமைப்புக...

உதயநிதி ஸ்டாலின், முஸ்தபா மீது நடவடிக்கை கோரி கோவையில் சக்தி சேனா கட்சி மனு

சனாதனம் குறித்து பேசிய கருத்துகள் மத உணர்வுகளை புண்படுத்துவதாக குற்றம்சாட்டி, உதயநிதி ஸ்டாலின் மற்றும் தவெக முஸ்தபா மீது...

கோவையில் கனமழை: பழமையான வேப்பமரம் முறிந்து விழுந்து கார், வீடு, மின்கம்பம் சேதம்

கோவை துடியலூர் சுற்றுவட்டார பகுதிகளில் பலத்த காற்றுடன் பெய்த கனமழையால் அப்பநாயக்கன்பாளையத்தில் சுமார் 200 ஆண்டுகள் பழமைய...

கோவை, திருப்பூர் மின்தடை பிரச்சனைக்கு தனி கவனம் தேவை - முதல்வருக்கு ‘காட்மா’ அமைப்பு கோரிக்கை

கோவை மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் நிலவிவரும்  மின்தடை காரணமாக தொழில்துறை கடுமையாக பாதிக்கப்படுவதாக தெரிவித்துள்ள ‘கா...

கோவை பீளமேடு 27-வது வார்டில் ரேஷன் கடை மற்றும் தூய்மைப் பணிகள் கவுன்சிலர் ஆய்வு

கோயமுத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலம், சிங்காநல்லூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட 27-வது வார்டு பகுதிகளில் பல்வேறு மக்கள் ந...