கோவை அருகே ஊருக்கு புகுந்த யானைக் கூட்டம்..! அச்சத்தில் உறைந்த பொதுமக்கள்..!

கோவை தடாகம் அருகே உள்ள நஞ்சுண்டாபுரம் குடியிருப்புப் பகுதியில் நள்ளிரவில் காட்டு யானைக்கூட்டம் நுழைந்ததால் பொதுமக்கள் அதிர்ச்சியடைந்தனர். ஊருக்குள் உலா வந்த யானைக்கூட்டத்தை வனத்துறையினர் உதவியுடன் அப்பகுதி மக்கள் வனப்பகுதிக்குள் விரட்டியடித்தனர்.



கோவை: கோவை மேற்கு தொடர்ச்சி மலைத்தொடரில் உள்ள ஆனைகட்டி மலைப்பகுதியில் ஏராளமான காட்டு யானைகள் உள்ளன.

இவைகள், உணவு தேடி மலையடிவாரப் பகுதிகளுக்கு வருகின்றன. இந்த நிலையில், நேற்று இரவு தடாகம் அருகே உள்ள நஞ்சுண்டாபுரம் கிராமத்தில் வனப்பகுதியில் இருந்து குட்டியானைகளுடன் வெளியேறிய 8 காட்டு யானைகள் கூட்டம் கிராமத்தின் சாலைகளில் சுற்றித்திரிந்தன.



இதனால், அதிர்ச்சியடைந்த பொதுமக்கள், வனத்துறைக்குத் தகவல் தெரிவித்தனர்.



சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறையினரின் உதவியுடன், ஊருக்குள் உலா வந்த காட்டு யானைக் கூட்டத்தை அப்பகுதி மக்கள் மீண்டும் வனப்பகுதிக்குள் விரட்டியடித்தனர்.

இதேபோல நேற்று அதிகாலை, பாப்பநாயக்கன்பாளையம் பகுதியில் அரங்கசாமி என்பவரின் தோட்டத்திற்கு ஒற்றை யானை புகுந்துள்ளது. கோடை வெயில் காரணமாக வனப்பகுதிக்குள் வறட்சி நிலவுவதால், தண்ணீர் மற்றும் உணவுதேடி காட்டு யானைகள் வனப்பகுதியை ஒட்டியுள்ள கிராமங்களுக்குள் நுழைவது அதிகரித்து வருவதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.

Newsletter

கோவையில் அண்ணாமலை வாக்களிப்பு: எப்போதும் இதே Dress Code தான்..! - கலகலப்பான பதில்..!

கோவை பீளமேட்டில் உள்ள பிஎஸ்ஜி கல்லூரி வளாகத்தில் வாக்களித்த பாஜக முன்னாள் மாநில தலைவர், அண்ணாமலை , தனது உடை குறித்து எழ...

கோவை மாவட்டத்தில் காலை 11 மணிக்கு 38.62 சதவீதம் வாக்குப்பதிவு; கவுண்டம்பாளையம் முதலிடம்

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் 2026 கோவை மாவட்டத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. காலை 11 மணி நிலவரப்படி 38.62 சதவீத...

கோவையில் அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் மாதிரி வாக்குப்பதிவு நடைபெற்றது

2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்குகிறது. கோவை மாவட்டத்தில் 10 தொகுதிகளில்...

கோவையில் வாக்குப்பதிவு தொடக்கம்: உற்சாகமாக வாக்களிக்கும் மக்கள்

தமிழக சட்டமன்றத் தேர்தல் 2026 வாக்குப்பதிவு இன்று காலை 7 மணி முதல் கோவை மாவட்டம் முழுவதும் அமைதியான சூழலில் தொடங்கியது....

கோவையில் 3,563 வாக்குச்சாவடிகளுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனுப்பி வைப்பு

கோவை மாவட்டத்தில் நாளைய சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக 3,563 வாக்குப்பதிவு நிலையங்களுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திர...

பொள்ளாச்சியில் 281 வாக்குச்சாவடிகளுக்கு பலத்த பாதுகாப்புடன் வாக்கு இயந்திரங்கள் அனுப்பும் பணி தீவிரம்

நாளை நடைபெறவுள்ள தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, பொள்ளாச்சி தொகுதியில் உள்ள 281 வாக்குச்சாவடி மையங்களுக்கு வாக்கு இ...