வால்பாறையில் முத்துமாரியம்மன் கோவில் 36 ஆம் ஆண்டு திருவிழா - கோலாகலமாக நடைபெற்ற திருக்கல்யாணம்!

வால்பாறை அடுத்த அண்ணாநகர் பகுதியில் உள்ள முத்துமாரியம்மன் கோவில் 36ஆம் ஆண்டு திருவிழாவின் முக்கிய நிகழ்வான திருக்கல்யாணம் இன்றைய தினம் கோலாகலமாக நடைபெற்றது. இதனையொட்டி பொதுமக்களுக்கு அறுசுவை அன்னதானம் வழங்கப்பட்டது.


கோவை: வால்பாறை முத்துமாரியம்மன் கோவில் திருவிழா கோலாகலமாக நடைபெற்று வருகிறது.

கோவை மாவட்டம் வால்பாறை அருகே அண்ணா நகர் பகுதியில் அருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன், ஸ்ரீ மகா முனீஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலின் 36 ஆம் ஆண்டு திருவிழா கடந்த 17ஆம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது.

இந்த திருவிழாவானது ஏப்ரல் 19 ஆம் தேதி முதல் 23ஆம் தேதி வரை மொத்தம் 5 நாட்கள் திருவிழாவாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், 20ஆம் தேதியான இன்று காலை 5:30 மணி அளவில் மங்கள வாத்தியம் முழங்க சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.



தொடர்ந்து 8 மணி அளவில் ராமர் கோவிலில் இருந்து ஊர் பொதுமக்கள் அம்மனுக்கு சீர்வரிசை எடுத்து வந்தனர். பின்னர், 11:30 மணியளவில் அருள்மிகு ஸ்ரீ முத்துமாரி அம்மனுக்கு திருக்கல்யாணம் நிகழ்வு நடைபெற்றது.



மதியம் 12:30 மணியளவில் அருள்மிகு முத்துமாரி அம்மன் கோவில் வளாகத்தில் மாபெரும் அறுசுவை அன்னதான நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த அன்னதான நிகழ்ச்சியை முன்னாள் நகர் மன்ற தலைவர் கோழிக்கடை கணேசன், 10 வது வார்டு கவுன்சிலர் காமாட்சி, கோனார் ஜுவல்லரி வள்ளிக்கண்ணு, கிருஷ்ணா ஜுவல்லரி சிங்காரம், மருத்துவர் முனியசாமி, திமுக நகரச் செயலாளர் சுதாகர்,



நகர மன்ற துணைத் தலைவர் செந்தில்குமார், 4 வது வார்டு உறுப்பினர் பாஸ்கர் எம்ஜிஆர் தேயிலை தோட்ட தொழிற்சங்க தலைவர் வால்பாறை அமீது மற்றும் பெரியோர்கள் அன்னதானத்தை துவங்கி வைத்தனர்.



இந்த நிலையில், திமுக நகரச் செயலாளர் சுதாகர் மற்றும் 10வது வார்டு உறுப்பினர் காமாட்சி கோழி கடை கணேசன் ஆகியோர் அண்ணா நகர் பகுதியில் பிரதான சாலையில் இருந்து கோவில் வரை ஆட்டோ மற்றும் இருசக்கர வாகனங்கள் செல்வதற்கு சாலை அமைத்து தருவதாக கோயில் வளாகத்தில் உறுதி அளித்தனர்.

Newsletter

Irugur Minor Murder Case: Adi Dravidar and Tribal Welfare Commission Issues Notice, Seeks Thorough Investigation

The Adi Dravidar and Tribal Welfare Commission has taken suo motu cognisance of the murder of a Class 7 student in Irugu...

நீலாம்பூரில் சடலமாக மீட்கப்பட்ட தொழிலாளி; கொலை வழக்கில் ஒருவர் சரண்

கோவை நீலாம்பூர் அச்சங்குளம் அருகே ரத்தக் காயங்களுடன் ஆண் ஒருவர் சடலமாக மீட்கப்பட்ட சம்பவத்தில், நண்பர்களுடன் மது அருந்தி...

இருகூர் மாணவர் கொலை வழக்கு: ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல ஆணையம் நோட்டீஸ்..!

கோவை இருகூரில் 7-ம் வகுப்பு மாணவர் ரித்தீஷ், சக மாணவர்களால் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக ஆதிதிராவிடர் மற்றும் பழங்க...

கோயம்புத்தூரில் மே 22-ல் சிறப்பு தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்

கோயம்புத்தூர் மாவட்ட நிர்வாகம் மே 22-ஆம் தேதி வெள்ளிக்கிழமை காலை 10 மணிக்கு மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகா...

கோவையில் நீட் தேர்வுக்கு எதிராக இடதுசாரி மாணவர்-இளைஞர் அமைப்புகள் ஆர்ப்பாட்டம்

நீட் தேர்வு வினாத்தாள் கசிவை கண்டித்து, நீட் தேர்வை ரத்து செய்யவும், தேசிய தேர்வு முகமையை கலைக்கவும் வலியுறுத்தி கோவை ரய...

ஆனைமலை மாசாணியம்மன் கோயில் உண்டியல் காணிக்கை  ₹61.65 லட்சம்

ஆனைமலை அருள்மிகு மாசாணியம்மன் திருக்கோயிலில் உண்டியல் கணக்கிடப்பட்டதில் ரூ.61.65 லட்சம் காணிக்கையாக கிடைத்ததுடன், தங்கம்...