தாராபுரத்தில் வைக்கோல் தீப்பிடித்து எரிந்து நாசம்

தாராபுரம் எல்.ஜி.ஜி.எஸ். காலனியை சேர்ந்த விவசாயி ஒருவர் கால்நடைகளுக்கு வைக்கோல் வாங்கி அடுக்கி வைத்திருந்தார். அந்த வைக்கோல் மதியம் திடீரென்று தீப்பிடித்து எரிந்ததில் ரு.10ஆயிரம் மதிப்பிலான வைக்கோல் எரிந்து நாசமானது.


திருப்பூர்: தாராபுரத்தில் தொழுவத்தில் வைத்திருந்த வைக்கோல் தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் எல்.ஜி.ஜி.எஸ். காலனியை சேர்ந்த விவசாயி ஒருவர் கால்நடைகளுக்கு வைக்கோல் வாங்கி அடுக்கி வைத்திருந்தார். இந்த நிலையில் அந்த வைக்கோல் மதியம் திடீரென்று தீப்பிடித்து எரிந்தது. உடனே அருகிலிருந்தவர்கள் தண்ணீர் கொண்டு வந்து வைக்கோல் மீது ஊற்றி அணைக்க முயன்றனர். அதற்குள் வைக்கோல் முழுவதும் தீயில் எரிந்து சாம்பலானது. இவற்றின் மதிப்பு ரூ.10 ஆயிரமாகும்.

அதேபோன்று சவுடேஸ்வரமன் கோவில் அருகே அமராவதி ஆற்றை ஒட்டி உள்ள முட்புதர்களில் தீப்பற்றிக் கொண்டது. உடனடியாக தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. ஆனால் தீயணைப்பு நிலைய வாகனம் வேறு இடத்துக்கு சென்றதால் நகராட்சி குடிநீர் லாரியில் தண்ணீர் கொண்டு வந்து ஊற்றி தீயை அணைத்தனர்.

Newsletter

பயனற்ற நடைபாதை மேம்பாலம்: அவிநாசி–கொச்சின் தேசிய நெடுஞ்சாலையில் மக்கள் முற்றுகை

அவிநாசி–கொச்சின் தேசிய நெடுஞ்சாலையில் வாகனங்கள் செல்லக்கூடிய மேம்பாலம் அமைக்கக் கோரிய நிலையில், நடைபாதை மேம்பாலப் பணிகள...

கோவையில் IWMA கருத்தரங்கு: தொழிற்சாலை கழிவு மேலாண்மை குறித்து விழிப்புணர்வு

கோவையில் நடைபெற்ற தொழில்துறை கழிவு மேலாண்மை கருத்தரங்கில், தொழிற்சாலை கழிவுகள் சட்டவிரோதமாக அப்புறப்படுத்தப்படுவதைத் தடு...

கோவை-அவிநாசி சாலையில் புதிய போக்குவரத்து சிக்னல்கள்: இன்று சோதனை ஓட்டம் தொடக்கம்

கோவை-அவிநாசி சாலையில் ESSO Bank மற்றும் Pioneer Mill சந்திப்புகளில் அமைக்கப்பட்ட புதிய தானியங்கி போக்குவரத்து சிக்னல்கள்...

கோவையில் மக்கள் நீதிமன்றம்: ஒரே நாளில் 4782 வழக்குகளுக்கு தீர்வு, ரூ.1.11 கோடி இழப்பீடு

கோவை மாவட்டத்தில் நடைபெற்ற தேசிய மக்கள் நீதிமன்றத்தில் 4782 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது. விபத்தில் உயிரிழந்த இரு கு...

கோவை மாநகராட்சி மாமன்ற சாதாரணக் கூட்டம் ஜூன் 17-இல் அறிவிப்பு

கோவை மாநகராட்சியின் மாமன்ற சாதாரணக் கூட்டம் ஜூன் 17-ஆம் தேதி புதன்கிழமை காலை 10.30 மணிக்கு விக்டோரியா ஹால் கூட்ட அரங்கில...

கோவையில் ஜூன் 15 அன்று முதியோர் கொடுஞ்செயல் எதிர்ப்பு உறுதிமொழி எடுக்க அனைத்து பள்ளிகளுக்கும் மாவட்ட ஆட்சியர் உத்தரவு

கோவை மாவட்ட ஆட்சியர் பவன்குமார் கிரியப்பனவர், ஜூன் 15 அன்று முதியோர் கொடுஞ்செயல் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு மாவட்டத்தி...