வால்பாறையில் தடுப்பு சுவர் அமைக்க பூமி பூஜை - நகராட்சி தலைவர் பங்கேற்பு

வால்பாறை நகராட்சியில் ரூ.45 லட்சம் மதிப்பீட்டில் விளையாட்டு மைதானத்தின் தடுப்புச்சுவர் கட்டும் பணிக்கான பூமி பூஜை நிகழ்வில், வால்பாறை நகர மன்ற தலைவர் அழகு சுந்தரவல்லி கலந்து கொண்டு பணிகளை தொடங்கி வைத்தார்.


கோவை: வால்பாறையில் தடுப்பு சுவர் கட்டுவதற்கு பூமி பூஜை நடைபெற்றது.

கோவை மாவட்டம் வால்பாறை பகுதியில் நகராட்சி நிர்வாகத்தின் சார்பாக பல கோடி மதிப்பில் 100-க்கும் மேற்பட்ட வேலைகள் செய்து வருகின்றனர். நகராட்சிக்கு சொந்தமான விளையாட்டு மைதானத்தில் கடந்த ஆண்டு பெய்த கனமழையால் தடுப்பு சுவர் இடிந்து சேதம் அடைந்தது.



அதை கட்டுவதற்கு நகராட்சி நிர்வாகத்தின் ஒப்புதலில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு, தடுப்பு சுவர் கட்டும் பணி ரூ.45 லட்சம் மதிப்பில் இன்று பூமி பூஜை நடைபெற்றது. நகர மன்ற தலைவர் அழகு சுந்தரவல்லி செல்வம் பூமி பூஜை செய்து பணியை துவங்கி வைத்தார்.



உடன் நகராட்சி பணி மேற்பார்வையாளர் ராமகிருஷ்ணன்,முன்னாள் நகர மன்ற உறுப்பினர் செல்வம், 4ஆவது வார்டு உறுப்பினர் ஜே பாஸ்கர் 12ஆவது வார்டு உறுப்பினர் அன்பரசன் 17ஆவது வார்டு உறுப்பினர் மணிகண்டன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

“முருக கடவுள், பெண்கள் குறித்து அவதூறு: தவெக நிர்வாகி மீது கோவை சைபர் கிரைமில் நாம் தமிழர் கட்சியினர் புகார்

தமிழ் கடவுள் முருகன் மற்றும் அரசியல் கட்சித் தலைவர்களின் குடும்பப் பெண்கள் குறித்து த.வெ.க நிர்வாகி மைக்கேல் என்பவர் தொட...

கோவை பாப்பநாயக்கன்பாளையத்தில் பெண் கொலை: 17 வயது சிறுவன் கைது

கோவை பாப்பநாயக்கன்பாளையத்தில் வீட்டில் தனியாக இருந்த சாந்தி (58) என்ற பெண் கொலை செய்யப்பட்ட வழக்கில், 17 வயது சிறுவனை ரே...

கோவை வீரபாண்டி பிரிவில் மண் கடத்தி வந்ததாக 4 லாரிகள் பறிமுதல்

சத்தியமங்கலம் பகுதி விவசாயிகளுக்கு அரசு வழங்கிய இலவச மண் அள்ளும் அனுமதியை முறைகேடாகப் பயன்படுத்தி, வீரபாண்டி பிரிவில் பு...

இரவில் மர்ம நபர்கள் தாக்கியதாக ரத்தக் காயங்களுடன் போலீசாரிடம் வாலிபர் புகார்

கோவை ரேஸ் கோர்ஸ் காவல் நிலையம் அருகே கையில் ரத்த காயங்களுடன் கூலித் தொழிலாளி ஒருவர் தன்னை சிலர் தாக்க முயன்றதாக போலீசாரி...

கோவையில் ரயில் மோதி 2 பெண் தூய்மைப் பணியாளர்கள் உயிரிழப்பு

கோவை ஆவாரம்பாளையம் பகுதியில் ரயில்வே தண்டவாளத்தில் தூய்மைப் பணியில் ஈடுபட்டிருந்த இரண்டு பெண் ஒப்பந்தப் பணியாளர்கள் ரயில...

கள்ளிமடை துணை மின் நிலையத்தில் நாளை (14.08.2026) மின்தடை

கள்ளிமடை துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறும். இதனால் காமராஜ்...