வால்பாறையில் தடுப்பு சுவர் அமைக்க பூமி பூஜை - நகராட்சி தலைவர் பங்கேற்பு

வால்பாறை நகராட்சியில் ரூ.45 லட்சம் மதிப்பீட்டில் விளையாட்டு மைதானத்தின் தடுப்புச்சுவர் கட்டும் பணிக்கான பூமி பூஜை நிகழ்வில், வால்பாறை நகர மன்ற தலைவர் அழகு சுந்தரவல்லி கலந்து கொண்டு பணிகளை தொடங்கி வைத்தார்.


கோவை: வால்பாறையில் தடுப்பு சுவர் கட்டுவதற்கு பூமி பூஜை நடைபெற்றது.

கோவை மாவட்டம் வால்பாறை பகுதியில் நகராட்சி நிர்வாகத்தின் சார்பாக பல கோடி மதிப்பில் 100-க்கும் மேற்பட்ட வேலைகள் செய்து வருகின்றனர். நகராட்சிக்கு சொந்தமான விளையாட்டு மைதானத்தில் கடந்த ஆண்டு பெய்த கனமழையால் தடுப்பு சுவர் இடிந்து சேதம் அடைந்தது.



அதை கட்டுவதற்கு நகராட்சி நிர்வாகத்தின் ஒப்புதலில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு, தடுப்பு சுவர் கட்டும் பணி ரூ.45 லட்சம் மதிப்பில் இன்று பூமி பூஜை நடைபெற்றது. நகர மன்ற தலைவர் அழகு சுந்தரவல்லி செல்வம் பூமி பூஜை செய்து பணியை துவங்கி வைத்தார்.



உடன் நகராட்சி பணி மேற்பார்வையாளர் ராமகிருஷ்ணன்,முன்னாள் நகர மன்ற உறுப்பினர் செல்வம், 4ஆவது வார்டு உறுப்பினர் ஜே பாஸ்கர் 12ஆவது வார்டு உறுப்பினர் அன்பரசன் 17ஆவது வார்டு உறுப்பினர் மணிகண்டன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை மாநகராட்சி: கோவையில் தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் மரங்களை அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேல மரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற...

கோவை மாநகராட்சி: தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் கப் அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேலமரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற்...

மதுக்கரை ACC சிமெண்ட் ஆலைக்கு எதிராக பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்

கோவை மதுக்கரையில் செயல்படும் ACC சிமெண்ட் ஆலையிலிருந்து வெளியேறும் சிமெண்ட் துகள்களால் காற்று மாசடைந்து சுவாசக் கோளாறு ஏ...

கோவையில் சாலையோர வியாபாரிகளுக்கான லோக் கல்யாண் மேலா சிறப்பு முகாம் செப்டம்பர் 7ல் தொடக்கம்

கோவை மாநகராட்சி பகுதிகளில் சாலையோர வியாபாரிகளுக்கு வங்கி கடன் வழங்கும் லோக் கல்யாண் மேலா முகாம் செப்டம்பர் 7 முதல் 25 வர...

கவுண்டம்பாளையத்தில் குப்பையில் கிடந்த 3 கிராம் தங்க கம்மலை உரிமையாளரிடம் ஒப்படைத்த தூய்மைப் பணியாளர்

கோவை மாநகராட்சி வடக்கு மண்டலம் கவுண்டம்பாளையம் ரங்கா லே அவுட் பகுதியில் குப்பை சேகரிக்கும் பணியில் ஈடுபட்டிருந்த தூய்மைப...

பொள்ளாச்சி அருகே திருடிய நகைகளை விற்று காதலனுக்கு பைக் பரிசளித்த கல்லூரி மாணவி கைது

பொள்ளாச்சி அருகே குடும்ப நண்பரின் வீட்டில் 9 பவுன் தங்க நகைகளை திருடிய வழக்கில் 19 வயது கல்லூரி மாணவியை போலீசார் கைது செ...