என்.ஐ.ஏ சட்டம் ஜிஹாதிகளுக்கு எதிரானது, இஸ்லாமியர்களுக்கு அல்ல..! - பாஜக தேசிய துணை தலைவர் அப்துல்லா குட்டி தகவல்

கோவை காந்திபுரத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், பாஜக சிறுபான்மையினருக்கு எதிரான கட்சி என திமுகவினர் பொய்யாக பரப்பி வருவதாகவும், ஊழல்வாதிகளை இரும்பு கரம் கொண்டு ஒடுக்க வந்தவர் தான் பாஜக தலைவர் அண்ணாமலை எனவும் கூறினார்.


கோவை: பாஜக கொண்டு வந்த என்.ஐ.ஏ சட்டமானது இஸ்லாமியர்களுக்கு எதிரானது அல்ல என பாஜக தேசிய துணை தலைவர் அப்துல்லா குட்டி தெரிவித்துள்ளார்.

கோவை காந்திபுரத்தில் உள்ள பாரதிய ஜனதா கட்சியின் மாவட்ட தலைமை அலுவலகத்தில் பாரதிய ஜனதா கட்சியின் தேசிய துணை தலைவர் அப்துல்லா குட்டி செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது அவர் பேசியதாவது,



இஸ்லாமியர், கிறிஸ்தவ, ஹிந்துக்கள் ஒற்றுமையுடன் சகோதரத்துடன் இந்தியாவில் உள்ளனர். தமிழகத்தில் பாஜக சிறுபான்மையினருக்கு எதிரான கட்சி என்று பொய்யாக பரப்பப்பட்டு வருகிறது. ஊழல்வாதிகளை இரும்பு கரம் கொண்டு ஒடுக்க வந்தவர் தான் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை.

காங்கிரசும், திமுகவும் சிறுபான்மையினரை வாக்கு வங்கியாக பயன்படுத்துகின்றனர். என்.ஐ.ஏ முஸ்லிம்களை அல்ல ஜிஹாதிகளை கைது செய்கிறது. என்.ஐ.ஏ., ஜிஹாதிகளுக்கு எதிரானது.

கர்நாடகத்தில் குஜராத்தில் இருந்தது போல முன்னேற்றம் உண்டாகும் என்பதால் மிகப்பெரிய வெற்றியை பாஜக அடையும். கேரளாவில் பினராயி விஜயன் ஆட்சி மீது மக்கள் அதிருப்தியில் உள்ளதால் வருகிற நாடாளுமன்ற தேர்தலில் கேரளாவில் பாஜக நாடாளுமன்றத்தில் புதிய உறுப்பினர்களை பெறும். குறைந்த விலையில், வசதியாக புனித யாத்திரை செல்லும் வகையில் ஹஜ் கமிட்டியின் புதிய கொள்கை உள்ளது, என்றார்.

இவரை தொடர்ந்து, பாஜக சிறுபான்மை பிரிவு மாநில தலைவர் டெய்சி பேசியதாவது,

தமிழகத்தில் இஸ்லாமியர், கிறிஸ்துவர்கள் தங்களுக்கான தேவையை, பிரச்னைகளை விண்ணப்பங்களாக கொடுத்து வருகின்றனர். பாஜகவிற்கு சிறுபான்மையினர் இடையே வரவேற்பு அதிகரித்து வருகிறது. சென்னையில் நாளை நடைபெற உள்ள இப்தார் விருந்தில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பங்கேற்க உள்ளார்

உத்தரபிரதேசத்தில் நடந்த அக்திக் அகமது, அவரது சகோதரர் அஷ்ரப் ஆகியோர் கொலை வழக்கு சம்மந்தமாக தமிழகத்தில் தவறாக பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பான உண்மை தகவலை இணையதளத்தில் பொதுமக்கள் தெரிந்து கொள்ள வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...