திருப்பூரில் வழக்கறிஞருக்கு வாட்ஸ் ஆப் காலில் கொலை மிரட்டல் - பரபரப்பு!

திருப்பூர் கான்வென்ட் கார்டன் பகுதியைச் சேர்ந்த வழக்கறிஞர் ஆனந்த் என்பவருக்கு வாட்ஸ் அப் கால் மூலம் தொடர்பு கொண்டு குறிப்பிட்ட வழக்கில் ஆஜராக கூடாது எனக்கூறி கொலை மிரட்டல் விடுத்தது தொடர்பாக சக வழக்கறிஞர்களுடன் சேர்ந்து திருப்பூர் வடக்கு காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.


திருப்பூர்: திருப்பூர் அருகே இளம் வழக்கறிஞருக்கு வாட்ஸ் அப் கால் மூலம் கொலை மிரட்டல் விடுத்த நபர் மீது வடக்கு காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

திருப்பூர் கான்வென்ட் கார்டன் பகுதியைச் சேர்ந்த இளம் வழக்கறிஞர் ஆனந்த் என்கிற பாலசுப்பிரமணி. இவர் திருப்பூர் நீதிமன்றத்தில் இளம் வழக்கறிஞராக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் நேற்று இரவு இவர் வீட்டிற்கு சென்று கொண்டிருந்த போது தொலைபேசி வாட்ஸ் ஆப்பில் வாய்ஸ் மெசேஜ் ஒன்று வந்துள்ளது.

அதில் ஆனந்த் பற்றியும் அவரது குடும்பத்தை பற்றியும் தரக்குறைவாக பேசியும் கொலை மிரட்டல் விடுக்கப்பட்டு இருந்தது. அந்த எண்ணிற்கு தொடர்பு கொண்ட போது சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது.

சிறிது நேரம் கழித்து மீண்டும் அதே தொடர்பு எண்ணில் இருந்து வாட்ஸப் காலில் வந்த நபர் ஒருவர் குறிப்பிட்ட வழக்கிற்கு ஆஜராக கூடாது எனவும் மீறி ஆஜரானால் கோர்ட்டிலேயே கொலை செய்து விடுவதாக கூறி மிரட்டியுள்ளார்.

இதுகுறித்து ஆனந்த் மற்றும் திருப்பூர் நீதிமன்றத்தில் பணியாற்றக்கூடிய சக வழக்கறிஞர்களுடன் இணைந்து திருப்பூர் வடக்கு காவல் நிலையத்தில் கொலை மிரட்டல் விடுத்த நபர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி புகார் அளித்துள்ளார்.

Newsletter

கள்ளிமடை துணை மின் நிலையத்தில் நாளை (14.08.2026) மின்தடை

கள்ளிமடை துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறும். இதனால் காமராஜ்...

சோமையம்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (14.08.2026) மின்தடை அறிவிப்பு

சோமையம்பாளையம் துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக ஆகஸ்ட் 14ஆம் தேதி காலை 9 மணி முதல் மாலை 4 மணி வர...

கோவை பீளமேடு வார்டு 27-ல் அங்கன்வாடி மையம், தூய்மைப் பணிகள் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27 பீளமேட்டில் வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் அங்கன்வாடி மையம், சாலையோர தூய்மை, குப்பை அகற...

ராகுல் காந்தி தான் 2029 பிரதமர் வேட்பாளர்; தவெகவும் ஏற்றுக்கொள்ளும்: கோவையில் அமைச்சர் ராஜேஷ்குமார்

கோவையில் நடைபெற்ற சர்வதேச சுற்றுலா மாநாட்டில் பேசிய அமைச்சர் ராஜேஷ்குமார், தமிழகத்தில் சுற்றுலாத்துறையை வேகமாக வளர்க்க ப...

ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி மாணவர்கள் தேசியக் கொடி விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தினர்

கோயம்புத்தூரில் MY Bharat திட்டத்தின் கீழ் ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி மாணவர்கள் 'ஹர் கர் திரங்கா' விழிப்புணர...

கோவை கல்லூரி மாணவர் கொலை: மேலும் ஒரு மாணவர் கைது; 6 பேருக்கு போலீஸ் வலை

கோவையில் கல்லூரி மாணவர் அமுதன் கொலை வழக்கில் ஏற்கனவே 5 மாணவர்கள் கைது செய்யப்பட்ட நிலையில், மேலும் ஒரு மாணவரை போலீசார் க...