கோவையில் சிறுவனுக்கு சூடு வைத்த வளர்ப்பு தந்தை - போலீசில் புகார்!

கோவையில் 7வயது சிறுவனுக்கு சூடு வைத்து சித்ரவதை செய்த வளர்ப்பு தந்தை மீது, சிறுவனின் தந்தை உக்கடம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.


கோவை: கோவையில் சிறுவனுக்கு வளர்ப்பு தந்தை சூடு வைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்தவர் சுல்தான் இப்ராஹிம் (33), இவர் கோவை உக்கடம் புல்லுக்காடு பகுதியை சேர்ந்தவர் சர்மதா என்பவரை திருமணம் செய்துள்ளார். இவர்களுக்கு 7 வயது மகன் உள்ளார்.

இந்நிலையில் கருத்துவேறுபாடு காரணமாக சர்மதா இப்ராஹிமை பிரிந்து தனது மகனுடன் ஆட்டோ ஓட்டுநரான சாதிக்(38) என்பவரை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டு உக்கடம் புல்லுக்காடு அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்தனர்.

இந்நிலையில் குழந்தையின் வளர்ப்பு தந்தையான சாதிக் கடந்த 15 ஆம் தேதி தோசை கரண்டியால் உடலில் சூடு வைத்து கொடுமைப்படுத்தியதாகத் தெரிகிறது.

இதையடுத்து கோவை வந்த தந்தை இப்ராஹிடம் சிறுவன் நடந்ததை கூறியுள்ளார். சிறுவனுக்கு சூடு வைத்து கொடுமைப்படுத்திய வளர்ப்பு தந்தை மீது நடவடிக்கை எடுக்க கோரி, தந்தை இப்ராஹிம் உக்கடம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

Newsletter

கோவை விமான நிலைய பக்கவாட்டு நுழைவாயிலில் கண்காணிப்பு குறைபாடு: வெளிநபர்கள் நுழைவதாக குற்றச்சாட்டு

கோவை சர்வதேச விமான நிலையத்தின் பூங்கா நகர் பகுதி நுழைவாயிலில் போதிய பாதுகாப்பு கண்காணிப்பு இல்லாததால், வெளிநபர்கள் உள்ளே...

கோவை விமான நிலைய பக்கவாட்டு நுழைவாயிலில் கண்காணிப்பு குறைபாடு: வெளிநபர்கள் நுழைவதாக குற்றச்சாட்டு

கோவை சர்வதேச விமான நிலையத்தின் பூங்கா நகர் பகுதி நுழைவாயிலில் போதிய பாதுகாப்பு கண்காணிப்பு இல்லாததால், வெளிநபர்கள் உள்ளே...

“ஒரே ஒரு கழிப்பறை; அதிலும் தண்ணீர் பிரச்சனை” - கோவை அரசு மருத்துவமனை சிறுநீரக வார்டில் நோயாளிகள் அவதி..!

கோவை அரசு மருத்துவமனையின் சிறுநீரக வார்டில் பெண்கள் கழிப்பறை செயல்பாட்டில் இல்லை எனவும், பயன்பாட்டில் உள்ள ஒரே கழிப்பறைய...

மின்கட்டண உயர்வால் நெருக்கடி: அமைச்சர் செங்கோட்டையனிடம் மனு அளித்த மறுசுழற்சி ஜவுளித் தொழில்கள் கூட்டமைப்பு..!

மின் கட்டண உயர்வு ஜவுளித் தொழில்துறைக்கு கடுமையான நெருக்கடியை ஏற்படுத்தி வருவதால், Demand Charges மற்றும் Fixed Charges...

கோவை தெலுங்கு வீதியில் 700 கிலோ குட்கா பறிமுதல்: ஒருவர் கைது..!

கோவை தெலுங்கு வீதியில் உள்ள கடையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 700 கிலோ தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலை பொருட்களை...

கோவை அரசு மருத்துவமனை சிறுநீரக வார்டில் கழிப்பறை பராமரிப்பின்மை: நோயாளிகள் கடும் அவதி

கோவை அரசு பொது மருத்துவமனையின் சிறுநீரக வார்டில் கழிப்பறைகள் சுகாதாரமற்ற நிலையிலும், தண்ணீர் வசதி இன்றியும் உள்ளதாக நோயா...