மாதத்தவணையில் வீட்டுமனை தருவதாக பல லட்சம் மோசடி - கோவை காவல் ஆணையரிடம் புகார்

கோவையில் மாத தவணையில் பணம் கட்டுபவர்களுக்கு வீட்டுமனை தருவதாகக் கூறி பல லட்சம் ரூபாய் மோசடி செய்த ரியல் எஸ்டேட் நிறுவனம் மீது நடவடிக்கை எடுக்கும்படி, பணத்தை கொடுத்து ஏமாந்தவர்கள், கோவை மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் மனு அளித்தனர்.


கோவை: கோவை மாநகரை சேர்ந்த சுமார் 50-க்கும் மேற்பட்டவர்கள் இன்று கோவை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் மனு ஒன்றை அளித்தனர்.

அதில், கோவை ஆர்.எஸ்.புரம் திருவேங்கடசாமி ரோட்டில் செயல்பட்டு வரும் ரியல் எஸ்டேட் நிறுவனத்தை, கணவன் - மனைவியான கோவிந்தராஜ், ராஜலட்சுமி ஆகியோர் நடத்தி வந்தனர்.



இவர்கள் மாத தவணையில் பணம் செலுத்தினால் வீட்டுமனை விற்பனை செய்யப்படும் என கவர்ச்சிகரமான பல அறிவிப்புகளை வெளியிட்டதை, நம்பி கோவையை சேர்ந்த ஏராளமானோர் கடந்த 2010ம் ஆண்டு முதல் 2016ம் ஆண்டு வரை மாதம் தோறும் ரூ.2000, ரூ.2750 என பணம் செலுத்திவந்தனர்.



ஒவ்வொருவரும் மொத்தமாக தலா ரூ.2 லட்சம், ரூ. 3 லட்சம் என பணம் செலுத்தியுள்ளனர். ஆனால், முழு தொகையை செலுத்திய பின்னரும் வீட்டுமனையை கிரையம் செய்து கொடுக்காமல் ரியல் எஸ்டேட் நிறுவன உரிமையாளர்கள் பொதுமக்களை ஏமாற்றிவிட்டதுடன், பணத்தை திரும்ப கேட்டபோது பணம் கொடுக்காமல் மிரட்டியதால் காவல் துறையில் புகார் அளித்ததாக தெரிவித்தனர்.



மிகுந்த சிரமத்திடையே மன உளைச்சலுடன் இருந்து வருவதால், பணம் வசூல் செய்து லட்சக்கணக்கில் ஏமாற்றிய ரியல் எஸ்டேட் நிறுவனம் நடத்திய தம்பதி மீது நடவடிக்கை எடுத்து பணத்தை மீட்டு உரியவர்களிடம் ஒப்படைக்க வேண்டும் என அந்த மனுவில் கோரப்பட்டுள்ளது.

Newsletter

செவித்திறன் குறைபாடுடையோருக்கு வேலைவாய்ப்பு: Lakshmi Ring Travellers நிறுவனத்தின் 'நம்ம லாண்டரி' சேவை

கோவையில் Lakshmi Ring Travellers நிறுவனம், செவித்திறன் மற்றும் பேச்சுத்திறன் குறைபாடுடையோருக்காக 'நம்ம லாண்டரி' என்ற சலவ...

மேட்டுப்பாளையம் தொகுதியில் டி.ஆர்.எஸ் சுயேட்சை வேட்பாளராக களமிறக்கம்

மேட்டுப்பாளையம் தொகுதியில் திமுக போட்டியிட வாய்ப்பு மறுத்ததால், கட்சியை விட்டு வெளியேறிய டி.ஆர். சண்முகசுந்தரம் இன்று சு...

மேட்டுப்பாளையம் தொகுதியில் Kavitha Kalyanasundaram வேட்பு மனு தாக்கல்

கோவை வடக்கு மாவட்டம் மேட்டுப்பாளையம் சட்டமன்ற தொகுதியில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர் Kavitha Kalyanasundar...

மேட்டுப்பாளையம் தொகுதி அதிருப்திக்குப் பிறகு ராஜினாமா: திமுக T R சண்முகசுந்தரம் தனியாக போட்டி?

குடும்ப சூழ்நிலை மற்றும் பணி சுமை காரணமாக திமுக தலைமை செயற்குழு உறுப்பினர் பதவியிலிருந்தும் கட்சியிலிருந்தும் TR சண்முகச...

கவுண்டம்பாளையம் தொகுதியில் தவெக வேட்பாளர் கனிமொழி வேட்புமனு தாக்கல்

கோவை கவுண்டம்பாளையம் தொகுதியில் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் போட்டியிடும் வேட்பாளர் கனிமொழி, சனிக்கிழமை கோட்டாட்சியர் வ...

கோவை வடக்கில் போட்டியிடும் வானதி சீனிவாசன் நெகிழ்ச்சி பதிவு

பா.ஜ.க தேசிய மகளிர் அணி தலைவர் வானதி சீனிவாசன், கோவை வடக்கு தொகுதியில் போட்டியிட வாய்ப்பளித்த கட்சித் தலைவர்களுக்கு நன்ற...