மாதத்தவணையில் வீட்டுமனை தருவதாக பல லட்சம் மோசடி - கோவை காவல் ஆணையரிடம் புகார்

கோவையில் மாத தவணையில் பணம் கட்டுபவர்களுக்கு வீட்டுமனை தருவதாகக் கூறி பல லட்சம் ரூபாய் மோசடி செய்த ரியல் எஸ்டேட் நிறுவனம் மீது நடவடிக்கை எடுக்கும்படி, பணத்தை கொடுத்து ஏமாந்தவர்கள், கோவை மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் மனு அளித்தனர்.


கோவை: கோவை மாநகரை சேர்ந்த சுமார் 50-க்கும் மேற்பட்டவர்கள் இன்று கோவை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் மனு ஒன்றை அளித்தனர்.

அதில், கோவை ஆர்.எஸ்.புரம் திருவேங்கடசாமி ரோட்டில் செயல்பட்டு வரும் ரியல் எஸ்டேட் நிறுவனத்தை, கணவன் - மனைவியான கோவிந்தராஜ், ராஜலட்சுமி ஆகியோர் நடத்தி வந்தனர்.



இவர்கள் மாத தவணையில் பணம் செலுத்தினால் வீட்டுமனை விற்பனை செய்யப்படும் என கவர்ச்சிகரமான பல அறிவிப்புகளை வெளியிட்டதை, நம்பி கோவையை சேர்ந்த ஏராளமானோர் கடந்த 2010ம் ஆண்டு முதல் 2016ம் ஆண்டு வரை மாதம் தோறும் ரூ.2000, ரூ.2750 என பணம் செலுத்திவந்தனர்.



ஒவ்வொருவரும் மொத்தமாக தலா ரூ.2 லட்சம், ரூ. 3 லட்சம் என பணம் செலுத்தியுள்ளனர். ஆனால், முழு தொகையை செலுத்திய பின்னரும் வீட்டுமனையை கிரையம் செய்து கொடுக்காமல் ரியல் எஸ்டேட் நிறுவன உரிமையாளர்கள் பொதுமக்களை ஏமாற்றிவிட்டதுடன், பணத்தை திரும்ப கேட்டபோது பணம் கொடுக்காமல் மிரட்டியதால் காவல் துறையில் புகார் அளித்ததாக தெரிவித்தனர்.



மிகுந்த சிரமத்திடையே மன உளைச்சலுடன் இருந்து வருவதால், பணம் வசூல் செய்து லட்சக்கணக்கில் ஏமாற்றிய ரியல் எஸ்டேட் நிறுவனம் நடத்திய தம்பதி மீது நடவடிக்கை எடுத்து பணத்தை மீட்டு உரியவர்களிடம் ஒப்படைக்க வேண்டும் என அந்த மனுவில் கோரப்பட்டுள்ளது.

Newsletter

Udhayanidhi Stalin to Become Leader of Opposition After Being Elected DMK Legislature Party Leader

Udhayanidhi Stalin, DMK Youth Wing Secretary and MLA from the Chepauk–Thiruvallikeni constituency, has been elected Lead...

எதிர்க்கட்சித் தலைவராகிறார் உதயநிதி..! திமுக சட்டமன்ற குழுத் தலைவராக தேர்வு!

திமுக சட்டமன்ற குழுத் தலைவராக அக்கட்சியின் இளைஞரணி செயலாளரும், எம்.எல்.ஏ.வுமான உதயநிதி ஸ்டாலின் தேர்வு செய்யப்பட்டுள்ளார...

மின் கட்டணம் குறைப்பு, புதிய தொழில் கொள்கை, மத்திய நிதி பெற நடவடிக்கை: தமிழக அரசுக்கு தொழில் துறையினர் கோரிக்கை

தமிழக முதல்வராக விஜய் பொறுப்பேற்ற நிலையில், மின் கட்டண குறைப்பு, புதிய தொழில் கொள்கை வகுத்தல், மத்திய அரசுடன் ஒத்துழைப்ப...

பட்டாசு, இனிப்பு, கோஷங்கள்.. ! கோவையில் களைகட்டிய த.வெ.க வெற்றி விழா

தமிழக முதலமைச்சராக தமிழக வெற்றி கழக தலைவர் நடிகர் ஜோசப் விஜய் பதவியேற்றதைத் தொடர்ந்து, கோவையின் பல்வேறு பகுதிகளில் த.வெ....

காங்கிரஸ் தொண்டர்களுக்கு பாதுகாப்பு வழங்க கோரி கோவை காவல் ஆணையரிடம் மனு

மயிலாடுதுறையில் காங்கிரஸ் நிர்வாகிகள் தாக்கப்பட்ட சம்பவத்தில் திமுகவினருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவும், கோவையில் காங்க...

PM Shri திட்டத்திற்கு எதிராக கோவையில் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் போராட்டம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் மத்திய அரசின் PM Shri திட்டத்திற்கு எதிராக தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் கண்...