பல்லடத்தில் இருசக்கர வாகன விழிப்புணர்வுப் பேரணி - தலைக்கவசம் அணியும்படி வலியுறுத்தல்

திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் கட்டாய தலைக்கவசம் அணிவதை வலியுறுத்தி நடைபெற்ற இரு சக்கர வாகன விழிப்புணர்வுப் பேரணி நடைபெற்றது. இதில், நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு, பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.



திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் பல்லடம் நகர் பகுதியில் நாளுக்குநாள் வாகன ஓட்டிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

இதனால் வாகன விபத்துகளின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.



இந்நிலையில், பல்லடம் போக்குவரத்து காவல்துறை மற்றும் மோட்டார் வாகன பழுது பார்ப்போர் நல சங்கம் ஆகியோர் இணைந்து தலைக்கவசம் அணிவதன் முக்கியத்துவம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் வாகன விழிப்புணர்வு பேரணி நடத்தினர்.



பல்லடம் நால்ரோட்டில் இருந்து செட்டிபாளையம் பிரிவு வரை சுமார் இரண்டு கிலோமீட்டர் தூரத்திற்கு இந்த இருசக்கர வாகன விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. இந்தப் பேரணியை பல்லடம் போக்குவரத்து காவல் துணை ஆய்வாளர் அண்ணாதுரை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.



இதில், தலைக்கவசம் அணிந்தபடி நூற்றுக்கும் மேற்பட்டோர் பங்கேற்று இருசக்கர வாகனத்தில் இரண்டு கிலோமீட்டர் தூரத்திற்கு பேரணியாக சென்றனர். அப்போது, தலைக்கவசம் அணிவது அவசியம் எனவும், தலைக்கவசம் அணிவதால் ஏற்படும் நன்மைகள் குறித்தும்ம் பொது மக்களிடையே அவர்கள் விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.

Newsletter

கோவை மற்றும் திருப்பூர் மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு: மார்ச் 26 நிலவரம்

கோவை மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு, அமராவதி, திருமூர்த்தி அணைகளில் மார்ச் 26ஆம்...

நீலகிரி மலை ரயிலில் பயணிக்க ஜெர்மன் ரயில் ஆர்வலர்கள் ரூ.3 லட்சம் வாடகை செலுத்தினர்

ஜெர்மனியைச் சேர்ந்த ரயில் ஆர்வலர்கள் குழு UNESCO அங்கீகாரம் பெற்ற நீலகிரி மலை ரயிலை ரூ.3 லட்சம் வாடகைக்கு எடுத்து குன்னூ...

தொழிலாளியை தாக்கி ஜாதி அவமதிப்பு: இருவருக்கு ஆயுள் தண்டனை

Coimbatore மலையாண்டிபட்டினம் பகுதியில் தேங்காய் உரிக்கும் தொழிலாளி பட்டீஸ்வரனை இரும்புக் கம்பியால் தாக்கி ஜாதி அவமதிப்பு...

கோவையில் 594 ரவுடிகளிடம் நல்லொழுக்க பிணை: தேர்தல் அமைதிக்கு போலீசார் தீவிர நடவடிக்கை

தமிழகத்தில் ஏப்ரல் 23ஆம் தேதி நடைபெறும் சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, கோவை மாநகர் மற்றும் மாவட்ட போலீசார் 594 ரவுடிகளிட...

கோவையில் 22 கிலோ கஞ்சா கடத்தியவருக்கு 12 ஆண்டு சிறை

கோவை போதைப்பொருள் தடுப்பு நீதிமன்றம் 22 கிலோ கஞ்சா கடத்தியவருக்கு 12 ஆண்டு சிறைத் தண்டனையும் ரூ.1 லட்சம் அபராதமும் விதித...

கோவை PPG தொழில்நுட்பக் கல்லூரி மாணவர்கள் வாக்காளர் விழிப்புணர்வு பேரணி

சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு கோவை PPG தொழில்நுட்பக் கல்லூரி சார்பில் ரேஸ்கோர்ஸ் பகுதியில் வாக்காளர் விழிப்புணர்வு பேரணி...