கழிவறை வசதி கோரும் பழங்குடியின மக்கள் - கோவை மாநகராட்சி குறைதீர்ப்புக்கூட்டத்தில் மனு!

கோவை மாநகராட்சியில் நடைபெற்ற குறைதீர்ப்புக் கூட்டத்தில் 97வது வார்டு பகுதிக்குட்பட்ட பழங்குடியின மக்கள் மனு அளித்தனர். அதில், கழிப்பறை உள்ளிட்ட அடிப்படை வசதிகளை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியிருந்தனர்.


கோவை: கோவை மாநகராட்சியின் குறைதீர்ப்புக் கூட்டம் மாநகராட்சி ஆணையாளர் தலைமையில் நடைபெற்றது.

இந்தக் கூட்டத்தில், மாநகராட்சி வார்டு எண்.97க்கு உட்பட்ட குறிச்சி, கொண்டி நகர் பகுதியைச் சேர்ந்த ஆண்ட்ரூ என்பவர் மக்கள் நீதிமய்யம் சார்பில் மனு ஒன்றை அளித்தார்.



அதில்,2000க்கும் மேற்பட்ட பழங்குடியின குடும்பங்கள் வசிக்கும் இப்பகுதியில், 40 கழிப்பறைகள் மட்டுமே கட்டப்பட்டுள்ளதாகவும், குப்பைகளைக் கொட்டபோதிய குப்பை தொட்டிகள் இல்லை எனவும் குற்றச்சாட்டியிருந்தார்.



மேலும், குடியிருப்புப் பகுதிகளைச் சுற்றிலும் கழிவுகள் முறையாக அகற்றப்படாததால் தொற்றுப் பரவல் அதிகரித்துள்ளதாகவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கழிவுநீர் கால்வாய்களும் இதுவரை அப்பகுதியில் அமைக்கப்படவில்லை எனவும் கூறப்படுகிறது. இந்நிலையில், இந்தப் பகுதியில் நகர்ப்புற சுகாதாரம் மற்றும் நலவாழ்வு மையம் அமைப்பதற்கான திட்டமிடல்கள் நடைபெற்றுவருகிறது.



இந்தப் பணிகளைத் தொடங்கும் முன் இப்பகுதிக்குத் தேவையான அடிப்படை வசதிகள் அனைத்தையும் நிறைவு செய்ய வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மனுவைப் பெற்றுக்கொண்ட மாநகராட்சி ஆணையர், கோரிக்கை தொடர்பாக, அப்பகுதியில் மாநகராட்சி குழு ஆய்வு நடத்திஉரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தார்.

மேலும், நகர்ப்புற சுகாதார மையத்தின் கட்டுமானத்திற்காக ஒதுக்கப்பட்ட நிலத்தை குடியிருப்பாளர்கள் ஒரு வழித்தடமாக மாற்றியிருப்பதாகவும் மாநகராட்சி ஆணையர் அப்போது தெரிவித்தார்.

Newsletter

கோவையில் கல்லூரி மாணவர் அமுதன் அடித்துக் கொலை செய்யப்பட்ட வழக்கில் நீதி கோரி ABVP போராட்டம்

கோவை இந்துஸ்தான் பொறியியல் கல்லூரி மாணவர் அமுதன் சக மாணவர்கள் அடங்கிய கும்பலால் தாக்கப்பட்டு உயிரிழந்த சம்பவத்தை கண்டித்...

பில்லூர் திட்டத்தின் கீழ் குடிநீர் விநியோகம்: மேயரும் ஆணையாளரும் விளாங்குறிச்சியில் ஆய்வு

கோவை மாநகராட்சியின் கிழக்கு மண்டல விளாங்குறிச்சி சந்திப்பில் பில்லூர் திட்டத்தின் கீழ் குடிநீர் விநியோகக் குழாய் இணைப்பு...

கோவையில் போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு மனித சங்கிலி: மாவட்ட ஆட்சியர் பங்கேற்பு

கோவை ரேஸ்கோர்ஸ் பகுதியில் நடைபெற்ற போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு மனித சங்கிலி நிகழ்ச்சியில் பங்கேற்ற மாவட்ட ஆட்சியர...

கோவையில் போலி இறப்பு, வாரிசு சான்றிதழ்கள் மூலம் ரூ.32 கோடி சொத்துக்களை அபகரிக்க முயற்சி: 9 பேர் மீது வழக்குப்பதிவு

கோவை மசக்காளிபாளையத்தில் தனியார் நிறுவன மேலாளருக்குச் சொந்தமான நிலம் உள்ளிட்ட ரூ.32 கோடி மதிப்பிலான சொத்துக்களை போலி இறப...

விநாயகர் சதுர்த்தி: கடந்த ஆண்டு 1.5 லட்சம் சிலைகள் பிரதிஷ்டை; இந்தாண்டு எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் - காடேஸ்வரா சுப்பிரமணியம்

கோவையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய இந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம், கடந்த ஆண்டை விட இந்தாண்டு தம...

கோவை மாநகராட்சி சொத்துவரி வசூலில் ₹38.43 கோடி கூடுதல் வசூல்

கோவை மாநகராட்சி 2026-27ஆம் நிதியாண்டில் சொத்துவரி வசூலில் சென்ற ஆண்டை விட ₹38.43 கோடி கூடுதலாக வசூலித்துள்ளது. நடப்பு கே...