கோவை மயிலேரிபாளையத்தில் தெற்கு மாவட்ட திமுக சார்பில் ஆயிரம் மரக்கன்றுகள் நடவு!

கோவை மயிலேரிபாளையம் ஊராட்சியில் தெற்கு மாவட்ட திமுக சார்பில் ஆயிரம் மரக்கன்றுகள் நடவு செய்யப்பட்டது. திமுக தெற்கு மாவட்ட தலைவர் தளபதி முருகேசன், மரக்கன்றுகளை நட்டு இந்த பணியை தொடக்கி வைத்தார்.


கோவை: மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி நூற்றாண்டு விழா மற்றும் தமிழ்நாடு முதல்வர் முக.ஸ்டாலின் 70 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு கோவை தெற்கு மாவட்ட திமுக சார்பில் மரக்கன்றுகள் நடவு செய்யும் பணிகள் துவங்கியுள்ளது.



முதல்கட்டமாக மதுக்கரை ஊராட்சி ஒன்றியம் மயிலேரிபாளையம் ஊராட்சியில் சுமார் ஆயிரம் மரக்கன்றுகள் நடவு செய்யப்பட்டது. திமுக தெற்கு மாவட்ட தலைவர் தளபதி முருகேசன் இந்த பணிகளை மரக்கன்றுகளை நடவு செய்து துவங்கி வைத்தார்.



ஊராட்சி ஊழியர்கள், தனியார் கல்லூரி மாணவ, மாணவிகள் இணைந்து வேப்பை, மாமரம், கொய்யா உள்ளிட்ட ஆயிரம் மரக்கன்றுகள் நடவு செய்தனர்.

இது குறித்து திமுக மாவட்ட செயலாளர் தளபதி முருகேசன் கூறுகையில்,

கலைஞர் நூற்றாண்டு மற்றும் முதல்வர் 70 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு கோவை தெற்கு மாவட்டம் முழுவதும் மரக்கன்றுகளை நடவு செய்ய உள்ளோம். இந்த மரக்கன்றுகளை அந்தந்த ஊராட்சி, பேரூராட்சி நிர்வாகத்தினர் வேலிகள் அமைத்தும், தண்ணீர் ஊற்றியும் பராமரிக்க உள்ளனர்.

மேலும் கோவை தெற்கு மாவட்டம் முழுவதும் மரக்கன்றுகளை அடுத்தடுத்து நடவு செய்யும் பணிகளை கட்சி நிர்வாகிகள், தன்னார்வலர்கள் மூலம் மேற்கொள்ள உள்ளதாகவும் தெரிவித்தார்.



இந்த நிகழ்ச்சியில் திமுக ஒன்றிய செயலாளர் கே.கே.செந்தில்குமார், மயிலேரிபாளையம் ஊராட்சி தலைவர் கோமதி திருமூர்த்தி, ஊராட்சி செயலாளர் பி.திருமூர்த்தி, ஊராட்சி துணை தலைவர் என்.சுப்பிரமணியம், மற்றும் தனியார் கல்லூரி மாணவ, மாணவிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...