கோவை துடியலூரியில் நண்பர்கள் அறக்கட்டளை சார்பில் இலவச நீர், மோர் பந்தல் திறப்பு!

கோடை காலத்தில் துடியலூர் அடுத்த அசோகபுரம் பகுதியில் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்களின் தாகத்தை தணிப்பதற்காக அசோகபுரம் நண்பர்கள் அறக்கட்டளை சார்பில் நீர் மோர் பந்தல் இன்று திறக்கப்பட்டது. இதில் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் நீர், மோர் குடித்து தாகத்தை தணித்துக் கொண்டனர்.



கோவை: துடியலூரை அடுத்த அசோகபுரம் பகுதியில் நண்பர்கள் அறக்கட்டளை சார்பில் இலவச நீர், மோர் பந்தல் திறக்கப்பட்டது.



கோடை வெயிலில் வெப்பத்தை தவிர்க்க ஆண்டுதோறும் அசோகபுரம் பகுதி பொதுமக்களுக்கு அசோகபுரம் நண்பர்கள் அறக்கட்டளை சார்பாக ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் இலவச நீர், மோர் வழங்கப்பட்டு வருகிறது.

அதேபோல் இந்த ஆண்டும் அசோகபுரம் நண்பர்கள் அறக்கட்டளை சார்பாக இலவச நீர், மோர் பந்தல் திறக்கப்பட்டது.



இதில் அப்பகுதி பொதுமக்கள், வாகனங்களில் செல்வோர் என நீர், மோர் அருந்தி தங்களது தாகத்தை தணித்துக் கொண்டனர்.



இந்த நிகழ்ச்சியில் அறக்கட்டளை தலைவர் சிவகுமார், செயலாளர் சுந்தர்ராஜ், பொருளாளர் சண்முகசுந்தரம், உறுப்பினர்கள் அசோக் குமார், ரவிச்சந்திரன், விஸ்வநாதன், விஜயன், மோகன் குமார், நவநீதகிருஷ்ணன், பிரதாப், பிரேம்குமார், சங்கர், கனகராஜ், வடிவேல், பிரதீப் ராஜ், வீரா, தீனதயாளன், புஷ்பராஜ், சம்பத்குமார், பாலமுருகன், ஹரிஹரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...