கோவை துடியலூரியில் நண்பர்கள் அறக்கட்டளை சார்பில் இலவச நீர், மோர் பந்தல் திறப்பு!

கோடை காலத்தில் துடியலூர் அடுத்த அசோகபுரம் பகுதியில் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்களின் தாகத்தை தணிப்பதற்காக அசோகபுரம் நண்பர்கள் அறக்கட்டளை சார்பில் நீர் மோர் பந்தல் இன்று திறக்கப்பட்டது. இதில் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் நீர், மோர் குடித்து தாகத்தை தணித்துக் கொண்டனர்.



கோவை: துடியலூரை அடுத்த அசோகபுரம் பகுதியில் நண்பர்கள் அறக்கட்டளை சார்பில் இலவச நீர், மோர் பந்தல் திறக்கப்பட்டது.



கோடை வெயிலில் வெப்பத்தை தவிர்க்க ஆண்டுதோறும் அசோகபுரம் பகுதி பொதுமக்களுக்கு அசோகபுரம் நண்பர்கள் அறக்கட்டளை சார்பாக ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் இலவச நீர், மோர் வழங்கப்பட்டு வருகிறது.

அதேபோல் இந்த ஆண்டும் அசோகபுரம் நண்பர்கள் அறக்கட்டளை சார்பாக இலவச நீர், மோர் பந்தல் திறக்கப்பட்டது.



இதில் அப்பகுதி பொதுமக்கள், வாகனங்களில் செல்வோர் என நீர், மோர் அருந்தி தங்களது தாகத்தை தணித்துக் கொண்டனர்.



இந்த நிகழ்ச்சியில் அறக்கட்டளை தலைவர் சிவகுமார், செயலாளர் சுந்தர்ராஜ், பொருளாளர் சண்முகசுந்தரம், உறுப்பினர்கள் அசோக் குமார், ரவிச்சந்திரன், விஸ்வநாதன், விஜயன், மோகன் குமார், நவநீதகிருஷ்ணன், பிரதாப், பிரேம்குமார், சங்கர், கனகராஜ், வடிவேல், பிரதீப் ராஜ், வீரா, தீனதயாளன், புஷ்பராஜ், சம்பத்குமார், பாலமுருகன், ஹரிஹரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

விநாயகர் சதுர்த்தி: கடந்த ஆண்டு 1.5 லட்சம் சிலைகள் பிரதிஷ்டை; இந்தாண்டு எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் - காடேஸ்வரா சுப்பிரமணியம்

கோவையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய இந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம், கடந்த ஆண்டை விட இந்தாண்டு தம...

கோவை மாநகராட்சி சொத்துவரி வசூலில் ₹38.43 கோடி கூடுதல் வசூல்

கோவை மாநகராட்சி 2026-27ஆம் நிதியாண்டில் சொத்துவரி வசூலில் சென்ற ஆண்டை விட ₹38.43 கோடி கூடுதலாக வசூலித்துள்ளது. நடப்பு கே...

இன்ஸ்டாகிராம் காதலுக்கு எதிர்ப்பு?: பல்லடம் அருகே வீடு புகுந்து தாய் - மகள் வெட்டிக் கொலை

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே பச்சாபாளையம் பகுதியில் வீடு புகுந்து தாய் மற்றும் மகளை அரிவாளால் வெட்டிக் கொலை செய்யப்...

ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் 32வது பட்டமளிப்பு விழா நடைபெற்றது

கோவையில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரியில் 32வது பட்டமளிப்பு விழா நடைபெற்றது. இளநிலை மற்றும் முதுநில...

கோவையில் கல்லூரி மாணவர் தாக்கப்பட்டு உயிரிழந்த சம்பவம்: கொலை வழக்குப்பதிவு; 5 மாணவர்களிடம் தீவிர விசாரணை

கோவை ஒத்தக்கால்மண்டபம் அருகே உள்ள தனியார் பொறியியல் கல்லூரி மாணவர் தாக்கப்பட்டு உயிரிழந்த சம்பவத்தில் 5 மாணவர்களை காவல்த...

அமராவதி அணை நீர்மட்டம் 51.41 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 34.61 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் மழை காரணமாக 51.41 அடியாக உயர்ந்துள்ளது. திருமூர்த்தி அணையின் நீ...